Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

பன்னாட்டு நாணய நிதியம் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் ஐ.அ.டொலர் 162.6 மில்லியன் கொண்ட இரண்டாவது தொகுதிக் கடனை விடுவித்திருக்கிறது

பன்னாட்டு நாணய நிதியம் இலங்கை பெற்றுக் கொண்ட மூன்றாண்டு விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் முதலாவது மீளாய்வினை வெற்றிகரமாக மீளாய்வு செய்து கொண்டமையினைத் தொடர்ந்து சிஎஉ 119.894 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 162.6 மில்லியன்) பெறுமதியான இரண்டாவது தொகுதியினை 2016 நவெம்பர் 18ஆம் நாளன்று பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது.

2016 ஒத்தோபரில் பணவீக்கம்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013 = 100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 செத்தெம்பரின் 4.7 சதவீதத்திலிருந்து 2016 ஒத்தோபரில் 5.0 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் 2016 ஒத்தோபரின் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்கு பஙக்ளித்துள்ளன.   

ஆண்டுச் சராசரி அடிப்படையொன்றின்மீது அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2016 செத்தெம்பரின் 3.8 சதவீதத்திலிருந்து 2016 ஒத்தோபரில் 4.0 சதவீதத்திற்கு அதிகரித்தது.   

இலங்கை கொள்வனவு முகாமையாளர் அளவீடு - 2016 ஒத்தோபர்

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2016 செத்தெம்பரில் 57.7 உடன் ஒப்பிடுகையில் ஒத்தோபரில் 56.5 ஆகக் காணப்பட்டது. கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் ஏற்பட்ட வீழ்ச்சியானது 2016 ஒத்தோபரில் தயாரிப்பு நடவடிக்கைகள் மிதமான வேகத்தில் விரிவடைந்தமையினை எடுத்துக்காட்டுகின்றது. செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் ஒத்தோபரில் வீழ்ச்சி ஏற்பட்டமைக்கு உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகள் துணைச் சுட்டெண்களின் செயலாற்றத்தில் காணப்பட்ட மிதமான வேகமே முக்கிய காரணமாகும். கொள்வனவு இருப்பு துணைச் சுட்டெண் ஒத்தோபரில் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்து எதிர்வரும்; காலத்திற்காக இருப்புக்கள் குவிக்கப்பட்டமையினை எடுத்துக் காட்டிய வேளையில் நிரம்பலர் வழங்கல் நேரம் சிறிதளவில் அதிகரித்தது. தொழில்நிலைத் துணைச் சுட்டெண்ணும் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியைக் காட்டியது. ஒட்டுமொத்த தரவுப் புள்ளிகள் விரிவாக்கமொன்றினைக் கொண்டிருந்தவிடத்து மற்றைய அனைத்து துணைச்சுட்டெண்களும் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலே காணப்பட்டன. நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புக்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு மேம்பாடொன்றினைக் காட்டின. 

இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு, உளந்hட்டு இறைவரித் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைச் செய்திருக்கிறது

2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதிக்கு நிதியிடல் தொடர்பான புலனாய்வுகளையும் வழக்குகள் தொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் வசதிப்படுத்தும் பொருட்டு தகவல்களைப் பரிமாறுவதற்காக, இலங்கை மத்திய வங்கியில் 2016 ஒத்தோபர் 19ஆம் நாளன்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைச் செய்து கொண்டது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திருமதி. கல்யாணி தகநாயக்க அவர்களும் நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளர் திரு.எச்.அமரதுங்க அவர்களும் தொடர்பான திணைக்களங்களின் சார்பில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் பணம் தூயதாக்கலுக்கு எதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் என்பனவற்றிற்கான தேசிய இணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர். இந்திரஜித் குமாரசுவாமியின் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். 

2016 செத்தெம்பரில் பணவீக்கம்

தொகைமதிப்பு புள்ளிவிபரத்திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 ஓகத்தில் 4.5 சதவீதத்திலிருந்து 2016 செத்தெம்பரில் 4.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் 2016 செத்தெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்குப் பங்களித்துள்ளன. 

ஆண்டுச் சராசரி அடிப்படையொன்றின் மீது அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2016 ஓகத்தில் 3.6 சதவீதத்திலிருந்து 2016 செத்தெம்பரில் 3.8 சதவீதத்திற்கு அதிகரித்தது. 

வைப்பாளர்களை பாதுகாத்துக் கொள்வதற்கும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்குமாக இலங்கை மத்திய வங்கி நான்கு கடன்தீராற்றலற்ற நிதியியல் நிறுவனங்கள் தொடர்பில் பிரச்சனைகளை முடிவிற்கு கொண்டுவரும் தீர்மானங்களை மேற்கொண்டிருக்கிறது.

2016.10.10 அன்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டவாறு, நாணயச் சபை 2016.10.14 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், நிதியியல் முறைமையில் பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையினை பாதுகாக்கும் நோக்குடன் தொடர்பான சட்ட ஏற்பாடுகளின் பின்னணியில் பல வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் தொடர்பில் பிரச்சனைகளை முடிவிற்கு கொண்டு வருவது பற்றி பரிசீலனைக்கு எடுத்தது. இதற்கமைய, நாணயச் சபை, மூன்று நிதிக் கம்பனிகளின் வைப்பாளர்களுக்கும் என்றஸ்ட் செக்குறிட்டீஸ் பிஎல்சி இல் உள்ள அரச பிணையங்களுடன் இணைக்கப்பட்ட முதலீடுகளிலுள்ள சட்ட ரீதியான முதலீட்டாளர்களுக்கும் மீள்கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் விதத்தில் பிரச்சனைகளை முடிவிற்கு கொண்டுவரும் பொறிமுறையொன்றிற்கு ஒப்புதலளித்தது.

Pages

சந்தை அறிவிப்புகள்