Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

ஆளுநரின் கருத்துரை தொடர்பான தவறான ஊடக அறிக்கைகள் தொடர்பாக மத்திய வங்கி தெளிவுபடுத்துகின்றது.

2017ஆம் ஆண்டில் அதிகரித்த பணவீக்கத்திற்கான காரணமாக பெறுமதிசேர் வரியிலான சீராக்கங்களை ஊடக அறிக்கைகள் கோடிட்டுக் காட்டியுள்ளதனை இலங்கை மத்திய வங்கி அவதானித்துள்ளது. 

Monetary Policy Review - No. 6 of 2017

Considering developments and outlook in the domestic and international macroeconomic environment, the Monetary Board, at its meeting held on 25 September 2017, was of the view that the current monetary policy stance is appropriate and decided to maintain the policy interest rates of the Central Bank of Sri Lanka at their present levels.

Given below are the key factors that the Monetary Board considered in arriving at the decision.

2017 ஓகத்தில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2017 ஓகத்தில் 7.9 சதவீதத்திற்கு 2017 யூலையின் 6.3 சதவீதத்திலிருந்து அதிகரித்தது. 2017 ஓகத்தின் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கத்துக்கு உணவு மற்றும் உணவல்லா வகை இரண்டும் முக்கியமாக பங்களித்தன.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றம் 2017 யூலை 6.2 சதவீதத்திலிருந்து 2017 ஓகத்தின் 6.5 சதவீதத்துக்கு அதிகரித்தது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு – 2017 ஓகத்து

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் ஒகத்து மாதத்தில் 54.4 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 யூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 0.1 சுட்டெண் புள்ளிகளாலான  ஒரு சிறிதளவான அதிகரிப்பாகும். இவ் அதிகரிப்பானது, மாதகாலப்பகுதியில் உற்பத்தி நடவடிக்கைகளில் ஏற்பட்ட மெதுவான செயற்பாட்டாலும் மற்றும் எதிர்காலத்தில் வழங்கப்படுவதற்காக ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்ட புதிய கட்டளைகளை பூர்த்தி செய்வதற்கான பராமரிக்கப்படுகின்ற மேலதிக இருப்புகளின் காரணமாக கொள்வனவு இருப்பு துணை சுட்டெண்ணில் ஏற்பட்ட அதிகரிப்பினால்  உந்தப்பட்டது. நிரம்பலர் வழங்கல் நேரம் பிரதானமாக சில நிறுவனம் சார்ந்த விசேடமான தடைகளினால் நீட்சியடைந்தது.  அதிகளவான தொழிலாளர் சுழற்சிவீதத்தினை கணக்கில் கொள்ளும் போது திறனற்ற தொழிலாளர்களின் மாற்றீடுகளில் காணப்பட்ட சிக்கல் தன்மையின் காரணமாக, பிரதானமாக ஆடை சார் துறையில் தொழில்நிலை சுட்டெண் குறைவடைந்து காணப்பட்டது.

“இலங்கை சமூக பொருளாதார தரவுகள் - 2017” இன் வெளியீடு

இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வெளியீடான தரவு ஏடு “இலங்கை சமூக பொருளாதாரத் தரவு – 2017” ஆனது பொதுமக்களின் தகவல்களுக்காக இப்போது கிடைக்கக்கூடியதாகவுள்ளது. தற்போதைய தரவு ஏடானது தொடரின் 40ஆவது வெளியீடாகும்.

புதிய உதவி ஆளுநர்களின் நியமனம்

நாணயச் சபை, 2017 ஓகத்து 31ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் திருமதி. கே. எம். ஏ. என். டவுளுகல, திருமதி எஸ். குணரத்ன, திரு. என். டபிள்யு. ஜி. ஆர். பி. நாணயக்கார, திருமதி ரி. எம். ஜெ. வை. பி. பெர்னாண்டோ, திரு. ஜெ. பி. ஆர். கருணாரத்ன மற்றும் திருமதி கே. குணதிலக ஆகிய ஆறு உயர் அலுவலர் வகுப்புத் தரம் ஐஏ அலுவலர்களை 2017 ஓகத்து 31ஆம் திகதியிலிருந்து உதவி ஆளுநர்களாகப் பதவியுயர்த்தியுள்ளது.  இப்பதவி உயர்வுகள் வங்கியினுடைய சுமூகமான தொழிற்பாட்டினை உறுதி செய்யும் வகையில் பதவி உயர்வுகளாலும் ஓய்வுபெறுகையினாலும் 2016 மேயிலிருந்து 2017 ஓகத்து வரை ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

திருமதி. கே. எம். ஏ. என் டவுளுகல

நாணயச் சபையின் துணைச் செயலாளரான இவர், நிதித் திணைக்களம் மற்றும் அலுவலகப் பணிகள் முகாமைத்துவத் திணைக்களம் என்பவற்றிற்குப் பொறுப்பான உதவி ஆளுநராகவும் அத்துடன் நாணயச் சபையின் துணை செயலாளராகவும் தொடர்ந்து செயற்படுவார்.

Pages

சந்தை அறிவிப்புகள்