Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்(கொ.மு.சு) அளவீடு – 2018 பெப்புருவரி

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2018 சனவரி 51.7 சுட்டெண் புள்ளிகளிலிருந்து பெப்புருவரி மாதத்தில் 55.6 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்தது. இது, முன்னைய மாதகாலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட பருவகால மெதுவடைதலுக்கு பின்னரான தயாரிப்பு நடவடிக்கைகள் சனவரி 2018 உடன் ஒப்பிடுகையில் பெப்புருவரியில் ஒரு உயர்வான வீதத்தில் விரிவடைந்தமையினை குறித்துக்காட்டுகின்றது. இது பிரதானமாக புதிய கட்டளைகள் துணைச்சுட்டெண்ணின் விரிவாக்கத்தினால் உந்தப்பட்டது. புதிய கட்டளைகளின் அதிகரிப்பின் மூலம் உற்பத்தி துணைச்சுட்டெண்ணும் அதிகரித்திருந்தது. இருப்பினும், புதிய கட்டளைகளில் ஏற்பட்ட அதிகரிப்போடு ஒப்பிடுகையில் பெப்புருவரி மாதத்தில் காணப்பட்ட குறைந்தளவிலான வேலை நாட்களின் எண்ணிக்கை காரணமாக ஒப்பீட்டளவில் குறைந்தளவிலேயே காணப்பட்டது. மேலும், மாதகாலப்பகுதியில் தொழில்நிலை துணைச்சுட்டெண் சிறிதளவில் அதிகரித்திருந்த வேளையில் கொள்வனவுகளின் இருப்பு துணைச்சுட்டெண்ணும் விரிவாக்கமடைந்திருந்தது. இவ்வேளையில், நிரம்பலர் வழங்கல் நேர துணைச்சுட்டெண் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒரு உயர்வான வீதத்தில் நீட்சியடைந்தது.

ப.நா.நிதிய அலுவலர்கள் இலங்கையுடனான 2018 உறுப்புரை IV பணியினை நிறைவு செய்ததுடன் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம் பற்றி கலந்துரையாடியுள்ளது

நிறைவு செய்யும் அறிக்கையானது, உத்தியோக பூர்வ அலுவலர் (ஷஅல்லது தூதுக்குழு|) விஜயத்தின் இறுதியில் பெரும்பாலான உறுப்பு நாடுகளைப் போன்றே ப.நா. நிதிய அலுவலர்கள் ஆரம்பத்தில் கண்டறிந்த விடயங்களை விபரிக்கிறது. அலுவலர்கள் கண்காணித்த நிகழ்ச்சித்திட்ட கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, அல்லது மற்றைய அலுவலர்களின் பொருளாதார அபிவிருத்திகளது கண்காணிப்பின் ஒரு பகுதியாக, ப.நா. நிதிய மூலவளங்களை (ப.நா.நிதியத்திலிருந்தான கடன்பாடு) பயன்படுத்துவதற்கான கோரிக்கையின் பின்னணியில், உடன்படிக்கையில் ப.நா.நிதிய உறுப்புரையின் உறுப்புரை ஐஏ இன் கீழ், பணிகள் கிரமமான (வழமையாக வருடாந்தம்) ஆலோசனைகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டன. இவ்வறிக்கையினை வெளியிடுவதற்கு அதிகாரிகள் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர்.

சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி தொடர்பில் 2018.03.05 அன்று விடுக்கப்பட்ட பத்திரிகை வெளியீட்டிற்கான தெளிவுபடுத்தல்

இலங்கை மத்திய வங்கி 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இற்கு வழங்கப்பட்ட உரிமத்தினையும் 2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க நிதிக் குத்தகைக்குவிடல் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழையும் இரத்துச் செய்வது தொடர்பில் 2018.03.05 அன்று விடுத்த பத்திரிகை அறிவித்தல் தொடர்பில் மேலும் விளக்கமளிக்க விரும்புகின்றது. 2017.12.05 அன்று விடுக்கப்பட்ட எமது பத்திரிகை வெளியீட்டின் மூலம்  பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டவாறு, சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இன் காப்புறுதி செய்யப்பட்ட அனைத்து வைப்புக்களுக்கும் இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தின் ஒழுங்குவிதியின் கீழ் வைப்பாளரொருவருக்கு உயர்ந்தபட்சம் ரூ.600,000 செலுத்தப்படும்.

சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இற்கு 2011ஆம் ஆண்டு 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உரிமத்தினையும் 2000ஆண்டின் 56ஆம் இலக்க நிதியியல் குத்தகைக்குவிடல் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழினையும் இரத்துச் செய்தல்

2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமம்பெற்ற நிதியியல் கம்பனியான சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சியானது தவறான முகாமைத்துவம் மற்றும் கம்பனியில் இடம்பெற்ற பல்வேறு மோசடியான நடவடிக்கைகள் காரணமாக கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக கடுமையான நிதியியல் பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றது. கம்பனியின் வைப்பாளர்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக தமது பணத்தினை மீளப்பெறுவதற்கு முடியாமலிருக்கின்றனர். பல்வேறு உபாயங்களினூடாக கம்பனியினை மீளெழுச்சி பெறச்செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன. தற்போதைய நிலைமைகளைத் தொடர்வது கம்பனியின் வைப்பாளர்களுக்கும் ஏனைய ஆர்வலர்களுக்கும் மேலும்  தீங்கிழைப்பதாக அமையும்.

எதிர்கால வட்டி வீத அசைவுகள் தொடர்பில் தவறாக வழிநடத்துகின்ற செய்தி அறிக்கைகளுக்கு மத்திய வங்கியின் பதிலிறுப்பு

எதிர்வரும் காலப்பகுதியில் மத்திய வங்கி உள்நாட்டு வட்டி வீதங்களில் உயர்வினை எதிர்பார்க்கின்றது எனத் தெரிவிக்கின்ற அண்மைய ஒரு சில ஊடக அறிக்கைகள் பற்றி இலங்கை மத்திய வங்கி அதன் கவனத்தினைச் செலுத்தியிருக்கிறது. அத்தகைய எதிர்பார்ப்பிற்காக குறிப்பிட்ட அறிக்கைகள் ஒதுக்குகளில் ஏற்பட்ட வீழ்ச்சி, எதிர்பார்த்ததிலும் பார்க்க உயர்வாகக் காணப்பட்ட இறக்குமதிகள் மற்றும் அரச பிணையங்கள் மீதான அதிகரித்த வட்டி வீதங்கள் என்பனவற்றை காரணங்களாக எடுத்துக்காட்டியிருக்கின்றன.

இலங்கை மத்திய வங்கி அதன் தற்போதைய எறிவுகளின் அடிப்படையில், சந்தை வட்டி வீதங்களில் அண்மைக் காலத்தில் அதிகரிப்பு எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை என்பதனை வலியுறுத்துகிறது. முதன்மைப் பணவீக்கம், மையப் பணவீக்கம், பணவீக்க எதிர்பார்ப்புக்கள், விரிந்த பணத்தின் வளர்ச்சி, கொடுகடன் விரிவாக்கம், பொருளாதார நடவடிக்கைகளின் விரிவாக்கம் அதேபோன்று பன்னாட்டு ஒதுக்கு நிலைமை என்பன வட்டி வீதங்களில் அதிகரிப்பொன்றினை எதிர்பார்ப்பதற்கான பகுத்தறிவுச் சந்தையொன்றினை நியாயப்படுத்துவனவாக இருக்காது.

காணி விலைச் சுட்டெண் - 2017இன் இரண்டாம் அரையாண்டு

உண்மைச் சொத்துத் துறையின் அபிவிருத்திகளை கண்காணிக்கும் பொருட்டு இலங்கை மத்திய வங்கியானது பல குறிகாட்டிகளை தொகுத்து பகுப்பாய்வு செய்கின்றது. இதற்கிணங்க, 1998 முதல் கொழும்பு மாவட்டத்தினை உள்ளடக்கி காணி விலைச் சுட்டெண் அரையாண்டுகளுக்கொரு தடவை தொகுக்கப்படுகிறது. காணி விலைச் சுட்டெண் தொகுக்கும் செயன்முறையில், இலங்கை மத்திய வங்கியானது கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளின்1 சுமார் 50 நிலையங்களை உள்ளடக்கி இலங்கை விலை மதிப்புத் திணைக்களத்தினால் சேகரிக்கப்படும் காணி விலைத் தரவுகளைப் பயன்படுத்துகின்றது. காணிப் பல்வகைப் பயன்பாட்டுத்தன்மை நோக்கிலும் ஒரேசீர்மை அமைப்பினைப் பேணுவதற்கும் வதிவிட, வர்த்தக ரீதியான மற்றும் கைத்தொழில் காணிகளுக்காக மூன்று சுட்டெண்கள் வௌ;வேறாகக் கணிக்கப்பட்டுள்ளன. இம்மூன்று துணைச் சுட்டெண்களினதும் சராசரியினைக் கருத்திற்கொள்வதன் மூலம் ஒட்டுமொத்த காணி விலைச் சுட்டெண் கணிக்கப்படுகின்றது.

Pages

சந்தை அறிவிப்புகள்