இலங்கை மத்திய வங்கி, இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் சார்பில் 5 ஆண்டுகாலத்திற்கான ஐ.அ.டொலர் 1.25 பில்லியன் கொண்ட புதிய முறிகளையும் 10 ஆண்டுகாலத்திற்கான மூத்த பிணையிடப்படாத நிலையான வீதத்தினைக் கொண்ட ஐ.அ.டொலர் 1.25 பில்லியன் முறிகளையும் முறையே 2023 ஏப்பிறல் 18ஆம் நாள் மற்றும் 2028 ஏப்பிறல் 18ஆம் நாள் முதிர்ச்சிகளுடன் வெற்றிகரமாக வழங்கியதன் மூலம் ஐ.அ.டொலர் சந்தைக்கு இலங்கை திரும்பியமையினை எடுத்துக்காட்டியது. முறிகள் மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சேர்விஸ், ஸ்டான்டட் அன்ட் புவர் மற்றும் பிச் ரேடிங் என்பனவற்றினால் முறையே B1,B+ மற்றும் B+ இல் தரமிடப்பட்டுள்ளன.