Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

2017 நவெம்பரில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013 = 100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2017 ஒத்தோபரில் 8.8 சதவீதத்திலிருந்து 2017 நவெம்பரில் 8.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

ஆண்டுச் சராசரி அடிப்படையொன்றின் மீது அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2017 ஒத்தோபரில் 7.1 சதவீதத்திலிருந்து 2017 நவெம்பரில் 7.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்(கொ.மு.சு) அளவீடு – 2017 நவம்பர்

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் நவம்பர் மாதத்தில் 58.8 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 ஒத்தோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது 4.0 புள்ளிகளாலான ஒரு அதிகரிப்பாகும். இது தயாரிப்பு நடவடிக்கைகளானது 2017 ஒத்தோபர் உடன் ஒப்பிடும் போது 2017 நவம்பரில்; ஒரு உயர்வான வேகத்திலான அதிகரிப்பினை குறித்துக்காட்டுகின்றது. இது பண்டிகைக்கால கேள்விகளுடன் இணங்கிச்செல்லும் விதத்தில், முக்கியமாக உணவு, குடிபானங்கள் மற்றும் புகையிலை தொடர்பான தயாரிப்பு நடவடிக்கைகளின் அதிகரிப்பினால் புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி சுட்டெண்களினால் உந்தப்பட்டது. மேலும், தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் இருப்பு துணைச்சுட்டெண்கள் ஒத்தோபர் 2017 உடன் ஒப்பிடும் போது மாதகாலப்பகுதியில் ஒரு உயர்வான வேகத்தில் அதிகரித்திருந்தது. இதே வேளையில் நிரம்பலர் வழங்கல் நேர துணைச்சுட்டெண் முன்னைய மாதத்துடன் ஒப்பிடும் போது ஒரு குறைவான வீதத்தில் நீட்சியடைந்தது. ஒட்டுமொத்தமாக, கொ.மு.சுட்டெண்ணின் அனைத்து துணைச்சுட்டெண்களும் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலான பெறுமானங்களை முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் நவம்பர் மாதத்தில் பதிவு செய்து ஒரு ஒட்டுமொத்த விரிவக்கத்தினை காட்டியது.

இலங்கையின் நிதி உளவறிதல் பிரிவு இலங்கைப் பொலிசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைச் செய்திருக்கின்றது

2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதிக் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது பணம் தூயதாக்கல், பயங்கரவாதத்திற்கு நிதியிடல் மற்றும் ஏனைய தொடர்புடைய குற்றங்கள் மீதான புலனாய்வுகளையும் வழக்குத் தொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் வசதிப்படுத்தும் பொருட்டு தகவல்களைஃ உளவறிதல்களை பகிர்ந்து கொள்வதற்காக இலங்கை மத்திய வங்கியில் 2017 திசெம்பர் 13ஆம் நாளன்று புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை இலங்கைக் பொலிசுடன் செய்திருக்கின்றது.

பொலிஸ்மா அதிபர் திரு. பூஜித ஜயசுந்தர அவர்களும் நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளர் முனைவர் எச். அமரதுங்க அவர்களும் தொடர்பான திணைக்களங்களின் சார்பில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் பணம் தூயதாக்கலுக்கு எதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல்  என்பனவற்றிற்கான தேசிய இணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர் இந்திரஜித் குமாரசுவாமியின் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

இலங்கை நாணயத் தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல், மாற்றம் செய்தல் மற்றும் உருச்சிதைத்தல்

இலங்கை மத்திய வங்கி தூய நாணயத்தாள் கொள்ளை மற்றும் இலங்கை நாணயத்தாள்களை வேண்டுமென்று சேதப்படுத்தல், மாற்றம் செய்தல் மற்றும் உருச்சிதைத்தல் மீதான ஒழுங்குவிதிகளை நடைமுறைக்கிடுவதற்காக பொதுமக்களின் அவதானத்தை ஈர்த்துள்ளது. நாணயத்தாள்களின் தரநிர்ணயத்தினைப் பேணுவதனையும் இதனூடக உண்மையான மற்றும் போலி நாணயத்தாள்களுக்கிடையிலான வேறுபடுத்தலுக்கு உதவுவதனையும் இலக்காகக் கொண்டு தூய நாணயத்தாள் கொள்கை இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கொள்கையினூடாக நாட்டின் நடத்தைப்பாங்கினை அதிகரிப்பதற்கும் நாணயத்தாள்கள் செயன்முறைப்படுத்தல் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி - 10ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாடு

இலங்கை மத்திய வங்கியின் 10ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாடு இலங்கை மத்திய வங்கியின் ஜோன் எக்ஸ்ரர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் 2017 திசெம்பர் 8ஆம் நாளன்று நடைபெற்றது. பல்வேறுபட்ட விடயப்பரப்புகளிலிருந்து தமது அனுபவங்களையும் நோக்குகளையும் பகிர்ந்துகொள்வதற்கு  கொள்கைவகுக்கின்ற மற்றும் கல்விசார் நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்களுக்கான தளமொன்றினை வழங்குகின்ற அதேவேளை சமகால பேரண்டப் பொருளாதார கொள்கை விடயங்கள் மீதான புதுமையான கோட்பாட்டு ரீதியான மற்றும் அனுபவம் சார்ந்த ஆராய்ச்சியினை ஊக்குவிக்கும் நோக்குடன் 'உறுதியான எதிர்காலமொன்றினை நோக்கிய பேரண்டப் பொருளாதார கொள்கை மறுசீரமைப்பு" என்ற தொனிப்பொருளின் கீழ் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. 

பன்னாட்டு நாணய நிதியம் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் ஐ.அ.டொலர் 251.4 மில்லியன் கொண்ட நான்காவது தொகுதிக் கடனை விடுவித்துள்ளது

பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையானது இலங்கை பெற்றுக் கொண்ட மூன்றாண்டு விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் மூன்றாவது மீளாய்வினை நிறைவு செய்து, சிறப்பு எடுப்பனவு உரிமை (சிஎஉ) 177.774 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 251.4 மில்லியன்) பெறுமதியான நான்காவது தொகுதியினைப் பகிர்ந்தளித்துள்ளது.

Pages

சந்தை அறிவிப்புகள்