இலங்கை மத்திய வங்கி, உலக வங்கிக் குழுமத்தின் உறுப்பினரான பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனத்தினால் முகாமைப்படுத்தப்படும் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய வங்கித்தொழில் வலையமைப்புடன் கூட்டாக இணைந்து 2017 பெப்புருவரி 28ஆம் நாள் மத்திய வங்கி, கொழும்பின் ஜோன் எக்ஸ்ரர் சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 'நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதி" என்ற தலைப்பில் செயலமர்வொன்றினை நடத்துவதற்கு ஒழுங்குகளைச் செய்திருக்கிறது. இச்செயலமர்வில் பிரதம விருந்தினராக மேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்து கொண்டு பிரதான உரையினை ஆற்றுவார்.