Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழு இலங்கை அடைந்த முன்னேற்றங்களை அங்கீகரித்திருக்கிறது

பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒடுக்குதல் தொடர்பான உலகளாவிய கொள்கையை நிர்ணயிப்பவரான நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழு இலங்கை அதன் நடவடிக்கைத் திட்டத்தினை நிறைவுசெய்திருக்கின்றது என்பதனை ஆரம்பத்தில் தீர்மானித்ததுடன் இலங்கையின் பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒடுக்குதல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதனை சரிபார்ப்பதற்கான தலத்திலான மதிப்பீடொன்றின் தேவைப்பாட்டினை கருத்திற்கொண்டு அதனை ஆரம்பித்ததன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இது எதிர்காலத்தில் வலுவான நடைமுறைப்படுத்தல் இடம்பெறுவதற்கான அரசியல் கடப்பாட்டிற்கு அவசியமான ஒன்றாகவும் காணப்பட்டது. தீர்மானமானது, 2019 பெப்புருவரி 20 - 22 காலப்பகுதியில் பரிஸில் நடைபெற்ற நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவின் முழுமையான சமவாயத்தில் எடுக்கப்பட்டது. 

நாணயக் கொள்கை மீளாய்வு - இல. 01 - 2019

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2019 பெப்புருவரி 21இல் நடைபெற்ற அதன் கூட்டத்தில் வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா வைப்புப் பொறுப்புக்களின் மீது பிரயோகிக்கப்படுகின்ற நியதி ஒதுக்கு விகிதத்தை 2019 மாச்சு 01இலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் 1.00 சதவீதப் புள்ளியினால் 5.00 சதவீதத்திற்கு குறைப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. நாணயச் சபையானது மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் மாற்றமின்றிப் பேணுவதற்கு தீர்மானித்ததுடன், அதன்படி மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் என்பன முறையே தற்போதைய 8.00 சதவீதமாகவும் 9.00 சதவீதமாகவும் காணப்படும். பொருளாதாரமானது அதனுடைய உள்ளார்ந்த வளத்தினை அடைவதனை இயலுமைப்படுத்தும் விதத்தில் நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் உறுதியாக பேணவேண்டிய பரந்த நோக்குடன், உள்நாட்டு பொருளாதாரம், நிதியியல் சந்தைகள் அதேபோன்று உலகளாவிய பொருளாதாரம் என்பனவற்றின் தற்போதைய மற்றும் எதிர்கால அபிவிருத்திகளை மிகக் கவனமாக பகுப்பாய்வு செய்தமையினைத் தொடர்ந்து நாணயச் சபையானது இந்த முடிவுக்குவந்தது. 

2019 சனவரியில் பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100)  ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2018 திசெம்பரின் 0.4 சதவீதத்திலிருந்து 2019 சனவரியில் 1.2 சதவீதமாக அதிகரித்தது. 2019 சனவரியில் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கத்தில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்பானது, தளத்தாக்கம் மற்றும் உணவல்லா வகைகளிலுள்ள பொருட்கள் விலைகளின் அதிகரிப்பினால் உந்தப்பட்டது. ஆண்டுக்கு ஆண்டு உணவல்லாப் பணவீக்கம் 2018 திசெம்பரில் பதிவுசெய்யப்பட்ட 4.7 சதவீதத்திலிருந்து 2019 சனவரியில் 6.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. எவ்வாறாயினும்,  ஆண்டுக்கு ஆண்டு உணவுப் பணவீக்கமானது 2018 திசெம்பரின் -4.5 சதவீதத்திலிருந்து 2019 சனவரியில் -4.8 சதவீத்திற்கு மேலும் குறைவடைந்தது. 

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றம் 2018 திசெம்பரின் 2.1 சதவீதத்திலிருந்து 2019 சனவரியில் 1.8 சதவீதத்திற்கு குறைவடைந்தது. 

லங்கா சி நியூஸில் வெளியிடப்பட்ட செய்திக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநரிடமிருந்தான பதிலிறுத்தல்

ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் தொடர்பான கொடுக்கல்வாங்கல்கள் பற்றி மாண்புமிகு விமல் வீரவன்ச பா.உ அவர்களினால் எனக்கு முகவரியிடப்பட்ட கடிதமென குறிப்பிடப்பட்டு லங்கா சி நியூஸ் வெப்தளத்தில் வெளியிடப்பட்ட 2019.02.17ஆம் திகதியிடப்பட்ட கட்டுரை பற்றி எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. அத்தகைய கடிதமொன்றினை நான் இன்னமும் பெறாதபோதும் குறிப்பிட்ட வெப்தளம் தொடர்பில் பின்வரும் விடயங்களை பற்றி தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்(கொ.மு.சு) – 2019 சனவரி

தயாரிப்பு நடவடிக்கைகள் 2018 திசெம்பர் உடன் ஒப்பிடுகையில் சனவரி மாதத்தில் ஒரு உயர்வான வீதத்தில் அதிகரித்தது. இது, தொழில்;நிலை மற்றும் உற்பத்தியில் ஏற்பட்ட விரிவாக்கத்தினால் விசேடமாக புடவைகள், அணியும் ஆடைகள், தோல் மற்றும் அத்துடன் சார்ந்த நடவடிக்கைகளினால் பிரதானமாக உந்தப்பட்டது. வெற்றிடங்களை நிரப்புவதற்கு சேர்க்கப்பட்ட புதிய தொழிலாளர்களின் தொழில்நிலையில் ஒரு குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் உணரப்பட்டது. அதன்படி, முன்னைய மாதத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கட்டளைகள் மற்றும் அதிகரித்த தொழில்;நிலையுடன் உற்பத்தியும் அதிகரித்திருந்தது

ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் துணை நிறுவனங்கள், துணை-துணை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டுச் சொத்துக்களின் விற்பனை

மேற்குறித்த விடயம் தொடர்பில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் 2019.02.13 அன்று வெளியிடப்பட்ட கட்டுரையுடன் தொடர்புடையது. 

மேற்குறித்த கட்டுரையின் உள்ளடக்கங்களில் பல பிழையான மற்றும் தவறாக வழிநடாத்துகின்ற தகவல்கள் காணப்பட்டன என்பதனை இலங்கை மத்திய வங்கி அவதானித்துள்ளதுடன் இலங்கை மத்திய வங்கியின் அவதானிப்புக்களை பின்வருமாறு குறிப்பிட விரும்புகின்றது.

Pages

சந்தை அறிவிப்புகள்