இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைச் செய்திருக்கிறது

2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு, பணம் தூயதாகக்ல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடல் மற்றும் ஏனைய குற்றங்களுடன் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்குத்தொடுத்தலுடன் தொடர்பான புலனாய்வு தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக, 2018 நவெம்பர் 01ஆம் நாளன்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை இலங்கை மத்திய வங்கியில் செய்து கொண்டது.  

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திரு. ஏ. எச். கே. ஜெகத் சந்திரசிறி அவர்களும் நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளா ;திரு. டி. எம். ரூபசிங்க அவர்களும் தொடர்பான நிறுவனங்களின் சார்பில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் பணம் தூயதாகக்லுக்குகெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் என்பனவற்றிற்கான தேசிய இணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர் இந்திரஜித் குமாரசுவாமியின் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். 

 

முழுவடிவம் 

Published Date: 

Tuesday, November 13, 2018