Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை கொள்வனவு முகாமையாளா் சுட்டெண் அளவீடு - 2018 செத்தெம்பா்

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2018 ஓகத்தில் பதிவு செய்யப்பட்ட 58.2 சுட்டெண் புள்ளிகளிலிருந்து 2018 செத்தெம்பரில் 54.1 சுட்டெண் புள்ளிகளுக்கு குறைவடைந்திருந்தது. செத்தெம்பரில் தயாரிப்பு நடவடிக்கைகளில் அவதானிக்கப்பட்ட மெதுவடைதலுக்கு புதிய கட்டளைகள் மற்றும் தயாரிப்பில் விசேடமாக உணவு மற்றும் குடிபான உற்பத்திகளின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மெதுவடைதலினால் பிரதானமாக தூண்டப்பட்டது. உள்நாட்டு நாணயத்தின் பெறுமதி தேய்வினூடாக இறக்குமதி செய்யப்படுகின்ற மூலப்பொருட்களின் அதிகரித்திருந்த உள்நாட்டு செலவினம் காரணமாக இக்காலப்பகுதியில் விற்பனை விலைகளை அதிகரிக்க நேரிட்டது என பதிலிறுப்பாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இது அவர்களுடைய பொருட்களுக்கான கேள்வியினை குறைத்ததுடன், இதன் விளைவாக புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்திகள் குறைவடைந்தன. எவ்வாறாகினும், பிரதானமாக ஏற்றுமதி சார்ந்த புடவைகள், அணியும் ஆடைகள், தோல் மற்றும் அதனுடன் சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கான புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி இக்காலப்பகுதியில் அதிகரித்திருந்தது. ஒட்டுமொத்த தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் இருப்பும் மெதுவடைந்திருந்தது. அதேவேளை, நீட்சியடைந்த நிரம்பலர் வழங்கல் நேரமானது வழக்கமாக பொருளாதாரத்தின் குறுகிய காலத்தில் நடவடிக்கைகளின் விரிவாக்கத்தின் துரித வளர்ச்சியை குறித்துக்காட்டுகின்றது. எவ்வாறாயினும், இச்சந்தர்ப்பத்தில், நீட்சியடைந்த நிரம்பலர் நேரமானது உற்பத்தியாளர்களின் உள்நாட்டு நாணய பெறுமதி தேய்வின் முன்னோக்கிய உறுதித்தன்மை எதிர்பார்க்கப்பட்டமை காரணமாக தாமாகவே உள்நாட்டு பொருட்களின் கிடைப்பனவு நேரத்தினை அதிகரித்தமையினால் ஏற்பட்டதாகும். ஆகையால், இது பொருளாதார நடவடிக்கைகளில் ஒரு விரிவாக்கத்தினை குறித்துக்காட்டவில்லை. ஒட்டுமொத்தமாக, கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் அனைத்து துணைச் சுட்டெண்களும் நடுநிலையான 50.0 எல்லைக்கு மேலான பெறுமானங்களை பதிவு செய்து ஒகத்துடன் ஒப்பிடுகையில் செத்தெம்பரில் மெதுவான வீதத்தில் விரிவடைந்தமையினைக் காண்பித்தது.

2015 பெப்புருவரி 01 - 2016 மாச்சு 31 திகதி வரையான காலப்பகுதியின் போது திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான சனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் மீதான முன்னேற்றம்

மத்திய வங்கியனாது, திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான சனாதிபதி புலனாய்வு ஆணைக்குழுவின் திறைசேரி முறிகள் வழங்கல் பற்றிய பரிந்துரைகளுக்கிசைவாக இலங்கை மத்திய வங்கியின் தொழிற்பாடுகளின் பல்வேறு விடயப்பரப்புக்களில் வெளிப்படைத்தன்மையினையும் பொறுப்புக்கூறலினையும் வலுப்படுத்துவதற்கு பல வழிமுறைகள் ஆரம்பிக்கப்பட்டு அவற்றில் சில ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்பதனை பொதுமக்களுக்கு தெரிவிக்கவிரும்புகின்றது.

மத்திய வங்கி தொழிற்படுகின்ற சட்ட ரீதியான கட்டமைப்பு தொடர்பில் மத்திய வங்கிக்கு ஏற்புடையதான பல சட்டங்களை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாணயவிதிச் சட்டம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் தொடர்பில் திருத்தங்கள் முறைப்படுத்த்தப்பட்டு வருகின்றன. 

ரூபாவின் பெறுமானத் தேய்வு தொடர்பில் தவறாக வழிநடத்துகின்ற செய்தித்தாள் கட்டுரைகளுக்கு மத்திய வங்கியின் பதிலிறுப்பு

இலங்கை மத்திய வங்கி, 2018 ஒத்தோபர் 08 மற்றும் 09ஆம் திகதிய செய்தித்தாள்கள் பலவற்றில் வெளிவந்த ''ரூபாவின் பெறுமானத் தேய்வினை கையாள இயலாமல் இருப்பதன் மூலம் அரசாங்கமும் மத்திய வங்கியும் மிக முக்கியமான சட்ட ரீதியான கடமைகளை கைவிட்டிருக்கின்றன". என்ற தலைப்பில் வெளியான கட்டுரை தொடர்பில் பின்வரும் அறிக்கையினை வெளியிட விரும்புகின்றது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2018 யூலை

இலங்கையின் வெளிநாட்டுத் துறை, 2018 யூலையில் மிதமான செயலாற்றமொன்றினைப் பதிவுசெய்தது. ஏற்றுமதி வருவாய்கள் மாதகாலத்தில் ஐ.அ.டொலர் 1 பில்லியனை விஞ்சியதற்கு மத்தியில் உயர் இறக்குமதிச் செலவினத்துடன் 2018 யூலையில் வர்த்தகப் பற்றாக்குறை (ஆண்டிற்கு ஆண்டு) தொடர்ந்தும் விரிவடைந்தது. சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் மிதமான வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்த அதேவேளை தொழிலாளர் பணவனுப்பல்கள் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் சிறிதளவால் மாதகாலப்பகுதியில் வீழ்ச்சியடைந்தது. நிதியியல் கணக்கு, யூலையில் மிதமான உட்பாய்ச்சலினை பதிவுசெய்த அதேவேளை, கடன் தீர்த்தல் தேவைப்பாடுகள் மற்றும் ஏனைய வெளிப்பாய்ச்சல்கள் என்பன 2018 யூலை இறுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 8.4 பில்லியனுக்கு வீழ்ச்சியடைவதற்கு வழிவகுத்தன. வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையானது அரசாங்கப் பிணையங்கள் சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீடுகளின் வெளிப்பாய்ச்சல் மற்றும் இறக்குமதிகளுக்காக அதிகரிக்கப்பட்ட வெளிநாட்டுச் செலாவணிக் கேள்வி என்பவற்றுடன் தொடர்ந்தும் அழுத்தத்தின் கீழ் காணப்பட்டதுடன் செலாவணி வீதத்தில் நாளுக்குள்ளான மிகைத் தளம்பலினைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய வங்கியின் தலையீட்டினை அவசியப்படுத்தியது.

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மாற்றமின்றிப் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2018 ஒத்தோபர் 01இல் நடைபெற்ற அதன் கூட்டத்தில் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டத்திலேயே பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. அதன்படி மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் என்பன முறையே 7.25 சதவீதமாகவும், 8.50 சதவீதமாகவும் தொடர்ந்தும் காணப்படும்.   

வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் நடுத்தரகாலத்தில் பணவீக்கத்தை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் உறுதிப்படுத்தும் நோக்குடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பொருளாதாரங்களின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளைக் கரிசனையுடன் கருத்திற் கொண்டு நாணயச் சபையானது மேலே கூறப்பட்ட தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது. 

பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றத்தினை ஆராய்வதற்கான பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்களின் இலங்கை விஜயம் நிறைவு பெற்றிருக்கிறது -2018 செத்தெம்பர் 27

தூதுக்குழுவினது விஜயத்தின் இறுதியில் விடுக்கப்பட்ட பத்திரிகை வெளியீடு, ப.நா. நிதிய அலுவலர் குழு நாட்டிற்கு விஜயம் செய்த பின்னர் அவர்கள் கண்டறிந்த பூர்வாங்க விடயங்களை அறிவிக்கின்ற அறிக்கைகளை உள்ளடக்கியுள்ளது. இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ப.நா.நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது ப.நா.நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்துக்களை பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இத்தூதுக் குழு, சபைக் கலந்துரையாடல் ஒன்றிற்கு வழிவகுக்காது.

Pages

சந்தை அறிவிப்புகள்