Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - ஏப்பிறல் 2017

2017 ஏப்பிறலில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை ஒரு கலப்புச் செயலாற்றத்தினைக் காட்டியது. 2017 ஏப்பிறலில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் அதிகரித்த போதிலும், இறக்குமதிச் செலவினங்களின் உயர்ந்தளவிலான வளர்ச்சியானது வர்த்தகப் பற்றாக்குறையில் ஓர் விரிவாக்கத்தினைத் தோற்றுவித்தது. 2017 ஏப்பிறலில் சுற்றுலா வருவாய்கள் அதிகரித்தமைக்கு மத்தியிலும் வர்த்தகப் பற்றாக்குறை விரிவாக்கத்துடன் கூடிய தொழிலாளர் பணவனுப்பல்களின் வீழ்ச்சியானது வெளிநாட்டு நடைமுறைக் கணக்கின் செயலாற்றத்தினை மிதமடையச் செய்தது. இருப்பினும், சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கானது 2017 ஏப்பிறலில் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை மற்றும் அரச பிணையங்கள் சந்தை போன்றவற்றுக்கான தொடர்ச்சியான வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள் மூலம் ஆதரவளிக்கப்பட்டன.

முழு உரை

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தினை இடைநிறுத்துதல்

 பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரிஉண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கிணங்க, 2017 யூலை 06ஆம் திகதியன்று இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை, 2017 யூலை 06ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில்பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டுநடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தும் ஆறு மாதகாலப்பகுதிக்கு இடைநிறுத்துவதெனத் தீர்மானித்திருக்கிறது.

 இவ்வொழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கை சந்தையின் மீது இடையூறுகளைக் கொண்டதாக்கமெதனையும் ஏற்படுத்தாதிருப்பதனை உறுதிப்படுத்தும் விதத்தில் மத்திய வங்கி அவசியமானவழிமுறைகளை எடுக்கும். பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வாடிக்கையாளர்களினதும் இணைத்தரப்பினர்களினதும் நலவுரித்துக்களை ஒழுங்கானதொரு விதத்தில் கையாள்வதனைவசதிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தாக்குப்பிடிக்கும் தன்மையை வலுப்படுத்துவதற்காக உரிமம்பெற்ற வங்கிகள் பாசல் III மூலதன நியமங்களைப் பின்பற்றுகின்றன.

2017 யூலை 01 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கையிலுள்ள உரிமம்பெற்ற வங்கிகள் 2016இன் பிற்பகுதியில் இலங்கை மத்திய வங்கியினால் விடுக்கப்பட்ட பணிப்புரையினை அடிப்படையாகக் கொண்ட குறைந்தபட்ச மூலதன நியமங்களைப் பின்பற்றும். இப்பணிப்புரையானது வங்கிகளின் தாக்குப்பிடிக்கும் தன்மையை வலுப்படுத்தும் நோக்கில்  பன்னாட்டுத் தீர்ப்பனவுகளுக்கான வங்கியினால் விடுக்கப்பட்ட மூலதனம், முடுக்கி மற்றும் திரவத்தன்மை தொடர்பான பாசல் III வழிகாட்டல்களுடன் இசைந்ததாகக் காணப்பட்டது.

முழுவடிவம்

யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதேச உப அலுவலகத்தின் தொழிற்பாடுகளை கிளிநொச்சியிலுள்ள பிரதேச அலுவலகத்துடன் ஒன்றிணைத்தல்

யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதேச உப அலுவலகம் அதன் தொழிற்பாடுகளை 2017 யூன்15 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அறிவியல் நகர், கிளிநொச்சியில் அமைந்துளள் பிரதேச அலுவலகத்திற்கு மாற்றியுள்ளது என்பதனை பொது மக்களுக்கு இத்தால் அறிவிக்கபப் டுகிறது. இதன்படி, ஊழியர் சேம நிதியத்துடன் தொடர்பான பணிகளை வழங்குதல், இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகளுக்கான விற்பனைப் பீடத்தினை பேணுதல், நிதியியல், முகாமைத்துவ மற்றும் வியாபாரத்திறன்களின் அபிவிருத்தி போனற் வற்றின் மீதான விழிப்புணர்வுகளை நடத்துதல், யாழ்ப்பாண பிராந்தியத்தின் கொடுகடன் விநியோகப் பொறிமுறையினை  மேம்படுத்துதல் போன்ற யாழ் உப அலுவலகத்தினால் வழங்கப்படட் பணிகள் கிளிநொச்சி பிரதேச அலுவலகத்தின் தற்போதைய அதன் தொழிற்பாட்டு நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக மேற்கொள்ளப்படும்.

நாணயக் கொள்கை மீளாய்வு: இல. 04 - 2017

தற்பொழுது நிலவுகின்ற மற்றும் தோற்றம் பெறும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுப் பேரண்ட பொருளாதாரச் சூழல்களைப் பரிசீலனையில் கொண்ட நாணயச் சபை 2017 யூன் 22ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் தற்போதைய நாணயக் கொள்கை நிலை பொருத்தமானது என்ற கருத்தினைக் கொண்டிருந்ததுடன் மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டத்தில் பேணுவதெனவும் தீர்மானித்தது.

நாணயச் சபையின் தீர்மானமானது, நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டத்தில் பேணுதல் அதன் மூலம் நீடித்த வளர்ச்சி உத்வேகத்திற்கு வசதிப்படுத்தல் ஆகிய குறிக்கோள்களுடன் இசைந்து செல்வதாகக் காணப்பட்டது. நாணயக் கொள்கை நிலைப்பாட்டிற்கு அடிப்படையாக அமைந்த நியாயப்பாடு கீழே வழங்கப்படுகின்றது.

 

 

Pages

சந்தை அறிவிப்புகள்