இலங்கை மத்திய வங்கி, அதன் தூய நாணத் தாள் கொள்கையினை நடைமுறைக்கிடுவது தொடர்பில் அதனால் வெளியிடப்பட்ட செய்தித்தாள் விளம்பரங்களில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டிருக்கின்றமை பற்றி அதன் கவனத்தினைச் செலுத்தியிருக்கிறது. தூயநாணயத் தாள் கொள்கையானது, நாணயத் தாள்களின் தர நியமங்களைப் பேணுவதனையும் அதன் மூலம் உண்மையான தாள்களுக்கும் போலித் தாள்களுக்குமிடையிலான வேறுபாட்டினைக் கண்டறிய உதவுவதனையும் நோக்கமாகக் கொண்டதாகும். இக்கொள்கையினூடாக நாட்டின் நன்மதிப்பினை உயர்த்துவதற்கும் வினைத்திறனை மேம்படுத்தி நாணயத் தாள் செயன்முறைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக ஏற்படும் செலவுகளைச் சிக்கனப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.