நாணயக் கொள்கை மீளாய்வு - இல. 01 - 2019

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2019 பெப்புருவரி 21இல் நடைபெற்ற அதன் கூட்டத்தில் வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா வைப்புப் பொறுப்புக்களின் மீது பிரயோகிக்கப்படுகின்ற நியதி ஒதுக்கு விகிதத்தை 2019 மாச்சு 01இலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் 1.00 சதவீதப் புள்ளியினால் 5.00 சதவீதத்திற்கு குறைப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. நாணயச் சபையானது மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் மாற்றமின்றிப் பேணுவதற்கு தீர்மானித்ததுடன், அதன்படி மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் என்பன முறையே தற்போதைய 8.00 சதவீதமாகவும் 9.00 சதவீதமாகவும் காணப்படும். பொருளாதாரமானது அதனுடைய உள்ளார்ந்த வளத்தினை அடைவதனை இயலுமைப்படுத்தும் விதத்தில் நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் உறுதியாக பேணவேண்டிய பரந்த நோக்குடன், உள்நாட்டு பொருளாதாரம், நிதியியல் சந்தைகள் அதேபோன்று உலகளாவிய பொருளாதாரம் என்பனவற்றின் தற்போதைய மற்றும் எதிர்கால அபிவிருத்திகளை மிகக் கவனமாக பகுப்பாய்வு செய்தமையினைத் தொடர்ந்து நாணயச் சபையானது இந்த முடிவுக்குவந்தது. 

முழுவடிவம்

Published Date: 

Friday, February 22, 2019