ஆசிய கொடுகடன் துணைநிரப்பு நிறுவனங்கள் கூட்டு ஒன்றியத்தின் 32ஆவது மாநாடு - 2019 இலங்கை மத்திய வங்கியின் அனுசரணையுடன் கொழும்பிலுள்ள சினமன் லேக்சைட் ஹோட்டலில் 2019 ஒத்தோபர் 28-30 வரை நடைபெற்றது.
ஆற்றல் வாய்ந்த கொடுகடன் துணைநிரப்பு முறைமைகளை ஊக்குவித்து விருத்தி செய்யும் குறிக்கோளுடன் ஆசிய கொடுகடன் துணைநிரப்பு நிறுவனங்கள் கூட்டு ஒன்றியம் 1987இல் நிறுவப்பட்டது. ஆசிய கொடுகடன் துணைநிரப்பு நிறுவனங்கள் கூட்டு ஒன்றியம் என்பது 11 நாடுகளிலிருந்து 16 உறுப்பு நிறுவனங்களை உள்ளடக்குகின்ற சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கான பாரிய ஆசிய கூட்டுறவு நிறுவனமாகும். ஆசிய கொடுகடன் துணைநிரப்பு நிறுவனங்கள் கூட்டு ஒன்றியத்தின்; நடப்பு உறுப்பு நாடுகளாக இந்தியா, இந்தோனேசியா, யப்பான், கொரியா, மலேசியா, மொங்கோலியா, நேபாளம், பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்வான் மற்றும் தாய்;லாந்து என்பன அங்கம் வகிக்கின்றன.