குறிப்பிட்ட தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் பல்வேறுபட்ட சாதனங்களை வழங்குவதன் மூலம் பொதுமக்களிடமிருந்து நிதிகளைத் திரட்டி வருவது பற்றி அவதானிக்கப்பட்டிருக்கிறது. வாக்குறுதிச் சான்றிதழ்கள், வர்த்தகப் பத்திரங்கள் மற்றும் தொகுதிக்கடன்கள் என்பன அவற்றுள் சிலவாகும். குறிப்பிட்ட வகையான நிறுவனங்கள் அவற்றின் நிதியியல் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் பொருட்டு மேலே குறிப்பிடப்பட்ட சாதனங்களை வழங்குவதன் மூலம் நிதிகளைத் திரட்டி வருவதனைக் குறிப்பிடுதல் வேண்டும். இச்சாதனங்கள் வருவாயை ஈட்டும் நியதிகளில் கவர்ச்சிகரமானவையாக இருக்கின்ற போதிலும், தனிப்பட்டவர்கள் அவர்களின் நோக்கங்களுக்காக அத்தகைய நிதிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய தன்மைகள் பற்றி உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.