Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களால் பெற்றுக்கொள்ளப்பட்ட குத்தகை வசதிகளுக்கான சலுகைத் திட்டம்

தொடர்ந்து பரவிவரும் கொவிட்-19 தொற்றின் காரணமாக பயணிகள் போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டுள்ள வியாபாரங்கள் மற்றும் தனிநபர்கள் எதிர்நோக்குகின்ற இடர்பாடுகள் மற்றும் நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள், உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் விசேட குத்தகைக் கம்பனிகளை (இதன் பின்னர் நிதியியல் நிறுவனங்களெனக் குறிப்பிடப்படும்) கொவிட்-19 பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் வியாபாரங்கள் பெற்றுக்கொண்ட குத்தகை வசதிகளுக்காக ஏப்பிறல் 01ஆம் திகதியிலிருந்து தொடங்கும் ஆறு மாதங்கள் அல்லது ஒரு குறுகிய காலப்பகுதிக்கு சலுகையை வழங்குமாறு கோருகின்றது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2021 சனவரி

இலங்கையின் வெளிநாட்டுத் துறை 2021 சனவரி காலப்பகுதியில் பல்வேறு நோக்குகளில் தொடர்ந்தும் மீட்சியடைந்தது. மேம்பட்ட வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்பன இதற்குப் பிரதானமாக துணையளித்திருந்தன. 2020 சனவரியுடன் ஒப்பிடுகையில் 2021 சனவரியில் வர்த்தகக் கணக்கில் குறைவடைந்த பற்றாக்குறைக்கு வணிகப் பொருள் ஏற்றுமதிகளைவிட வணிகப் பொருள் இறக்குமதியில் பாரிய வீழ்ச்சியே காரணமாக அமைந்தது. அதேவேளை, தொழிலாளர் பணவனுப்பல்கள் 2021 சனவரியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியொன்றினைத் தொடர்ந்தும் பதிவுசெய்து வெளிநாட்டு நடைமுறைக் கணக்கினை வலுப்படுத்தியது. நிதியியல் கணக்கில் 2021 சனவரியில் அரசாங்கப் பிணையங்கள் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் சிறிய தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்த அதேவேளை, கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை தேறிய வெளிப்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன. ஆயினும், மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட வழிமுறைகளும் அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் தொடர்ந்தமையும் இவ்வழுத்தத்தினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு உதவின.

இலங்கையில் முதன்முறையாக தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தினைத் தொடங்குதல்

 தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தினை இலங்கையில் முதன்முறையாக 2021 மாச்சு 04 அன்று தொடங்கி வைப்பதனை அறிவிப்பதில் இலங்கை மத்திய வங்கி பெருமகிழ்ச்சியடைகின்றது. இத்தொடக்க நிகழ்வைக் குறிக்கும்முகமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பிரதம அமைச்சரும் நிதித் திட்டமிடல் அமைச்சருமான கௌரவ மகிந்த ராஜபக்ஷ்   அவர்களுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் அவர்கள் மூலம் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயம் வழங்கி வைக்கப்பட்டது. இத்தொடக்க நிகழ்வில் பணம் மற்றும் மூலதனச் சந்தை அத்துடன் அரச தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹோலி அத்துடன் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபன நாட்டிற்கான பிரதானி திருமதி. அமீனா ஆரிப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இலங்கை மத்திய வங்கி தற்போதுள்ள தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான அதன் கடமைப்பொறுப்பினை மீளவும் உறுதிப்படுத்துகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2021 மாச்சு 03ஆம் திகதியன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. பேரண்ட பொருளாதார நிலைமைகளையும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் கவனமாக பரிசீலித்ததன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது. சபையானது தனியார் துறைக்கான கொடுகடன் பகிர்ந்தளிப்புக்களில் அண்மைக்கால மெதுவடைதலினையும் பொருளாதாரத்தின் உற்பத்தித் திறன்மிக்க துறைகளுக்கு போதுமானதற்ற கடன்வழங்கலையும் அவதானத்தில் கொண்டதுடன் தற்போது முன்னெடுக்கப்படும் உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலமைந்த பொருளாதார நடவடிக்கையின் மீட்சிக்கு ஆதரவளிக்கும் பொருட்டு, உற்பத்தித் திறன்மிக்க துறைகளுக்கு முனைப்புடன் கடன் வழங்குவதற்கான நிதியியல் முறைமைக்கான தேவையினையும் வலியுறுத்தியது. மேலும், சில சந்தை வட்டி வீதங்களில் அண்மைக்கால மேல்நோக்கிய போக்குகளை சபை அவதானித்ததுடன் குறைவான பணவீக்கச் சூழலைக் கொண்ட பின்னணியில் பொருளாதாரம், உறுதியாக புத்துயிர்பெறுகின்ற அறிகுறிகளை காண்பிக்கும் வரை குறைந்த வட்டி வீதக் கட்டமைப்பினை தொடந்தும் முன்னெடுப்பதற்கான அதன் அர்ப்பணிப்பினை மீளவும் வலியுறுத்தியது.

காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி – 2020 இரண்டாம் அரையாண்டு

கொழும்பு மாவட்டத்தின் காணி மதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2020இன் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியின் போது 4.6 சதவீத ஆண்டு அதிகரிப்பினைப் பதிவுசெய்து 145.2ஆகக் காணப்பட்டது. எனினும், காணி மதிப்பீட்டுக் குறிகாட்டியின் அதிகரிப்பு மட்ட சதவீதமானது அண்மைக்காலங்களில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சிப் போக்கிற்கு இசைவாகக் காணப்பட்டது. மேலும், காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி 2020இன் முதலரையாண்டுடன் ஒப்பிடுகையில் 2020இன் இரண்டாம் அரையாண்டிற்கு 2.5 சதவீதம் கொண்ட அதகரிப்பொன்றினைப் பதிவுசெய்தது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2021 பெப்புருவரியில் 3.3 சதவீதத்திற்கு அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 சனவரியின் 3.0 சதவீதத்திலிருந்து 2021 பெப்புருவரியில் 3.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 சனவரியின் 6.8 சதவீதத்திலிருந்து 2021 பெப்புருவரியில் 7.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. எனினும், உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 சனவரியின் 1.4 சதவீதத்திலிருந்து 2021 பெப்புருவரியில் 1.3 சதவீதத்திற்கு சிறிதளவு வீழ்ச்சியடைந்தது.

Pages

சந்தை அறிவிப்புகள்