தொடர்ந்து பரவிவரும் கொவிட்-19 தொற்றின் காரணமாக பயணிகள் போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டுள்ள வியாபாரங்கள் மற்றும் தனிநபர்கள் எதிர்நோக்குகின்ற இடர்பாடுகள் மற்றும் நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள், உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் விசேட குத்தகைக் கம்பனிகளை (இதன் பின்னர் நிதியியல் நிறுவனங்களெனக் குறிப்பிடப்படும்) கொவிட்-19 பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் வியாபாரங்கள் பெற்றுக்கொண்ட குத்தகை வசதிகளுக்காக ஏப்பிறல் 01ஆம் திகதியிலிருந்து தொடங்கும் ஆறு மாதங்கள் அல்லது ஒரு குறுகிய காலப்பகுதிக்கு சலுகையை வழங்குமாறு கோருகின்றது.















