Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2021 மாச்சு

2021 மாச்சில் இலங்கையின் வெளிநாட்டுத்துறை ஒருபுறம் விரிவடைந்த வர்த்தகப் பற்றாக்குறையை வெளிக்காட்டிய அதேவேளை மறுபுறம் தொழிலாளர் பணவனுப்பல்களில் ஆரோக்கியமானதொரு வளர்ச்சியையும் சுற்றுலாத்துறையில் சிறிதளவான உத்வேகத்தினையும் கொண்ட கலப்பான செயலாற்றத்தினைக் காண்பித்துள்ளது. வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை, 2020 ஏப்பிறலிற்கு பின்பு முதல் தடவையாக 2021 மாச்சில் விரிவடைந்தது. ஏற்றுமதிகளும் இறக்குமதிகளும் 2020 மாச்சுடன் அதேபோன்று 2021 பெப்புருவரியுடன் ஒப்பிடுகையில் 2021 மாச்சில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளன. இருப்பினும், தொழிலாளர் பணவனுப்பல்கள் நிலையாக வளர்ச்சியடைந்ததுடன் மிகவும் மெதுவானதொரு வேகத்திலேனும் சுற்றுலாத்துறை மீட்சியடைந்துள்ளது. நிதியியல் கணக்கில், அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை இரண்டிலுமான வெளிநாட்டு முதலீடுகள் சிறிய தேறிய வெளிப்பாய்ச்சலை 2021 மாச்சில் தொடர்ந்தும் பதிவுசெய்தன. இவ் மாத காலப்பகுதியில் இலங்கையின் ரூபா ஐ.அ.டொலருக்கெதிராக தேய்வடைந்தமையானது இறக்குமதிகளுக்கான பருவகாலக் கேள்வியiனைப் பகுதியளவில் பிரதிபலித்தது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2021 ஏப்பிறல்

பருவகால போக்குகளைத் தொடர்ந்து, கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2021 மாச்சிலிருந்து 22.7 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட வீழ்ச்சியொன்றுடன் 2021 ஏப்பிறலில் 44.3 ஆக சுருக்கமடைந்தது. மாச்சில் பதிவாகிய குறிப்பிடத்தக்க விரிவடைதலுடன் ஒப்பிடுகையில் உற்பத்தி, புதிய கட்டளைகள், கொள்வனவுகளின் இருப்பு அத்துடன் தொழில் நிலை துணைச் சுட்டெண்களின் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி இதற்கு பிரதான காரணமாக அமைந்தது.

ஸ்வர்ணமஹால் பினான்ஸியல் சேர்விசர்ஸ் பி.எல்.சி வைப்பாளர்களுக்கான இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்தின் கீழான மேலதிக இழப்பீட்டுக் கொடுப்பனவு

இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்தின் கீழ் மேலதிக இழப்பீட்டுக் கொடுப்பனவானது 2021.05.10 ஆம் திகதியில் இருந்து தொடங்கும் என ஸ்வர்ணமஹால் பினான்ஸியல் சேர்விசர்ஸ் பி.எல்.சியின் தகைமையுடைய வைப்பாளர்களுக்கு/ சட்டரீதியான பயன்பெறுநர்களுக்கு இலங்கை மத்திய வங்கி தெரிவிக்க விரும்புகிறது. அதற்கிணங்க, உரிய வைப்புக்களின் தகைமையுடைய வைப்பாளர்கள்/ தொடர்புடைய சட்டரீதியான பயன்பெறுநர்கள் 2021.05.10 ஆம் திகதி தொடக்கம் தொடர்புடைய ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் எந்தவொரு மக்கள் வங்கி கிளையிலிருந்தும் தங்கள் உரிமைகோரல்களை பெற்றுக்கொள்ள முடியும். மக்கள் வங்கி வளாகத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறும், சுகாதார வழிகாட்டுதல்களுடன் கண்டிப்பாக இணங்கிச் செயற்படுமாறும் தகைமையுடைய வைப்பாளர்கள்/ தொடர்புடைய சட்டரீதியான பயன்பெறுநர்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2021 ஏப்பிறலில் 3.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 மாச்சின் 4.1 சதவீதத்திலிருந்து 2021 ஏப்பிறலில் 3.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இது, உணவு வகையிலுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த வீழ்ச்சிகள் மூலம் தூண்டப்பட்டிருந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 மாச்சின் 9.6 சதவீதத்திலிருந்து 2021 ஏப்பிறலில் 9.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஏப்பிறலில் 1.8 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டது.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 மாச்சின் 4.0 சதவீதத்திலிருந்து 2021 ஏப்பிறலில் 3.9 சதவீதத்திற்கு சிறிதளவு வீழ்ச்சியடைந்தது.

இலங்கை மத்திய வங்கி 2020ஆம் ஆண்டிற்கான அதனது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது

1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 35ஆம் பிரிவின்படி இலங்கை மத்திய வங்கி நாணயச்சபையின் எழுபத்தோராவது ஆண்டறிக்கை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமானிய பேராசிரியர் டபிள்யு. டி. லக்~;மன் அவர்களால் இலங்கையின் பிரதம அமைச்சரும் நிதி அமைச்சருமான மாண்புமிகு மஹிந்த ராஜபக்~ அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகள்

மிகவும் வசதியாக வியாபாரம் செய்வதனூடாக ஆர்வலர்களின் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் வசதிப்படுத்துவதுடன் இணைந்து எல்லை கடந்த வெளிநாட்டு செலாவணிக் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்வதில் அதிக வினைத்திறனை அடையும் நோக்குடன் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மேலும் எளிதாக்கி தெளிவினை மேம்படுத்துவதற்காக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

மேலே எடுத்துக்காட்டப்பட்டவாறு இத்திருத்தப்பட்ட வெளிநாட்டுச் செலாவணிக் கொள்கைக் கட்டமைப்பானது 2021 மாச்சு 22ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஏனையவற்றிற்கு மத்தியில் அவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கை வழிமுறைகளின் முக்கிய பண்புகள் பின்வருமாறு

Pages

சந்தை அறிவிப்புகள்