Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை அபிவிருத்தி முறிகளின் நேரடி வழங்கல் ஊடாக திரட்டப்பட்ட நிதியங்கள்

இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி பல்வேறு வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட வழிமுறைகளின் செயல்திறன்வாய்ந்த தன்மையினை உறுதிப்படுத்தும் விதத்தில் 2022 சனவரி 01 தொடக்கம் 2022 பெப்புருவரி 15 வரை இலங்கை அபிவிருத்தி முறிகளின் நேரடி வழங்கல் வாயிலாக ஐ.அ.டொலர் 111.5 மில்லியன் கொண்ட தொகையுடைய நிதியங்கள் திரட்டப்பட்டுள்ளன.

மேற்குறித்த காலப்பகுதியின் போது இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடுகள், மூன்று மாதங்களிலிருந்து ஐந்து வருடங்களைக் கொண்ட வீச்சுடைய முதிர்ச்சிப் பரம்பலில் காணப்பட்டு, பாரியளவிலான அதேபோன்று சிறியவிலான தகைமையுடைய முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடியதாகவிருந்தது. இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடுகளை மேலும் பிரபல்யப்படுத்துவதற்கு சில இலங்கைத் தூதரங்களுடனான கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியும் அந்தந்தநாடுகளிலுள்ள தகைமையுடைய முதலீட்டாளர்களுடன் தொடர்பினை மேற்கொண்டிருந்தது.

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2021 திசெம்பர்

ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் தொடர்ச்சியாக ஏழாவது தடவையாக ஐ.அ.டொலர் 1.0 பில்லியனை விஞ்சிய பெறுமதிகளைக் கொண்டிருந்த போதும், வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் 2021 திசெம்பரில் விரிவடைந்தமைக்கு இறக்குமதிகளின் மிதமிஞ்சிய அதிகரிப்பினால் பதிவுசெய்யப்பட்ட முன்னொருபோதுமில்லாத உயர்ந்தளவிலான மாதாந்த இறக்குமதிச் செலவினம் முக்கிய காரணமாயமைந்தது. 2021ஆம் ஆண்டுப்பகுதியில், ஏற்றுமதிகளின் வளர்ச்சியினை விட விஞ்சிக் காணப்பட்ட இறக்குமதிகளின் கணிசமானளவு அதிகரிப்பினால் உந்தப்பட்டு வர்த்தகப் பற்றாக்குறை குறிப்பிடத்தக்களவு விரிவடைந்து காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் முன்னைய மாதத்திலும் பார்க்க குறிப்பிடத்தக்கதொரு அதிகரிப்புடன் வளர்ச்சி உத்வேகத்தினைத் தொடர்ந்திருந்தன. அதேவேளை, தொழிலாளர் பணவனுப்பல்கள் 2021 திசெம்பரில் மாதாந்த அடிப்படையிலான வளர்ச்சியினைப் பதிவுசெய்து, பணவனுப்பல்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஊக்குவிப்புத் திட்டத்திற்கான பதிலிறுப்பினையும் பருவகால  அதிகரிப்பினையும் பிரதிபலித்திருந்தன.

எதிர்வரவுள்ள படுகடன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பினை மீள்வலியுறுத்தல்

இலங்கையானது நாட்டிற்கான படுகடனைச் செலுத்தத் தவறுவதன் விளிம்பிலிருப்பதாக அண்மையில் வெளியான சில ஊடக அறிக்கைகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியானது அத்தகைய கூற்றுக்கள் முற்றிலும் அடிப்படையற்றவையெனத் தெரிவித்துக்கொள்ள விரும்புவதுடன் பன்னாட்டு நியமங்களின் பிரகாரம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நம்பகமான உத்தியோகபூர்வ தரவுகளின் கிடைப்பனவிற்கு மத்தியிலும் இவ்வறிக்கைகள் வெளிப்படையாகவே உண்மைக்குப் புறம்பான துல்லியமற்ற தரவுகளைக் கொண்டுள்ளனவெனவும் வருந்தி நிற்கின்றது. ஆகையால், அரசாங்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பன எதிர்வரவுள்ள சகல படுகடன் கடப்பாடுகளையும் பூரணப்படுத்துவதன் மூலம் இலங்கையின் அப்பழுக்கற்ற படுகடன் பணிக்கொடுப்பனவுப் பதிவினைப் பேணுவதற்கு உறுதிபூண்டுள்ளன என்பதனை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முதலீட்டாளர் சமூகத்திற்கும் பொதுமக்களுக்கும்  இலங்கை மத்திய வங்கியானது உறுதியளிக்க விரும்புகின்றது.

தேசிய வெளிநாட்டு பணவனுப்பல் நடமாடும் செயலியினை இலங்கை மத்திய வங்கி தொடங்குகின்றது

இலங்கைக்கு வெளிநாட்டு பணவனுப்பல் உட்பாய்ச்சல்களை அதிகரிப்பதற்கும் அதேபோன்று வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு பணம் அனுப்புகின்ற போது முறைசார்ந்த பணம் அனுப்பும் வழிகளை உபயோகிப்பதனை ஊக்குவிப்பதற்கும் இலங்கை மத்திய வங்கி தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. அதற்கமைய, "Lanka Remit" என்ற வர்த்தகநாமத்தின் கீழ் தேசிய வெளிநாட்டு பணவனுப்பல் நடமாடும் செயலியினை இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்துள்ளது. இச்செயலி லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிடெட் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

"Lanka Remit" தேசிய வெளிநாட்டு பணவனுப்பல் நடமாடும் செயலி, இலங்கையின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சரும், அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணித்தல் அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கௌரவ அமைச்சர் நாமல் ராஜபக்ஷ் அவர்களினால் பெப்புருவரி 08 அன்று தொடங்கிவைக்கப்பட்டது.

2022 சனவரி பணவீக்கம் - கொ.நு.வி.சு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013ஸ்ரீ100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 திசெம்பரின் 12.1 சதவீதத்திலிருந்து 2022 சனவரியில் 14.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேவேளை, ஆண்டுச் சராசரி அடிப்படையில், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 2021 திசெம்பரின் 6.0 சதவீதத்திலிருந்து 2022 சனவரியில் 6.9 சதவீதத்திற்கு அதிகரித்தது.

உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்பினால் பணவீக்கம் தூண்டப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2021 திசெம்பரின் 22.1 சதவீதத்திலிருந்து 2022 சனவரியில் 25.0 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 திசெம்பரின் 7.5 சதவீதத்திலிருந்து 2022 சனவரியில் 9.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களை ஒன்றிணைக்கும் முதன்மைத் திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது

இலங்கை மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களை ஒன்றிணைக்கும் முதன்மைத் திட்டத்தின் (முதன்மைத் திட்டம்) கீழ், பின்வரும் 9 நிறுவனங்கள், ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனத் தேவைப்பாடுகளை நிறைவுசெய்வதற்காக   ஏற்கனவே ரூ. 12.56 பில்லியன் கொண்ட புதிய மூலதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளன: அவை, சர்வோதய டெவலப்மென்ட் பினான்ஸ் பிஎல்சி, டயலொக் பினான்ஸ் பிஎல்சி, ஏசியா எசட் பினான்ஸ் பிஎல்சி, லங்கா கிறடிட் அன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி, பீப்பிள்ஸ் மேர்ச்சன்ட் பினான்ஸ் பிஎல்சி, சொப்ட்லொஜிக் பினான்ஸ் பிஎல்சி, மேர்ச்சன்ட் பாங்க் ஒவ் சிறிலங்கா அன்ட் பினான்ஸ் பிஎல்சி, யு பீ பினான்ஸ் கம்பனி லிமிடெட் மற்றும் றிச்சட் பீரிஸ் பினான்ஸ் லிமிடெட்.

Pages

சந்தை அறிவிப்புகள்