திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் கீழ் துணைநில் வசதிகளை உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் பயன்படுத்துவதன் மீது இலங்கை மத்திய வங்கி 2023 சனவரி 16ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் மட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது. அதற்கமைய, துணைநில் வைப்பு வசதியைப் பெற்றுக்கொள்வது பஞ்சாங்க மாதமொன்றிற்கு உயர்ந்தபட்சம் ஐந்து (05) தடவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த அதேவேளை, துணைநில் கடன்வழங்கல் வசதியைப் பெறுவது ஏதேனும் வழங்கப்பட்ட நாளொன்றில் ஒவ்வொரு உரிமம்பெற்ற வர்த்தக வங்கியினதும் நியதி ஒதுக்குத் தேவைப்பாட்டின் 90 சதவீதத்திற்கு வரையறுக்கப்பட்டிருந்தது. மத்திய வங்கி மூலம் வழங்கப்படும் ஓரிரவு வசதிகள் மீது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் அளவுக்கதிகமாக தங்கியிருப்பதனைக் குறைக்கும் நோக்குடன் உள்நாட்டுப் பணச் சந்தையை குறிப்பாக, அழைப்புப் பணச் சந்தையை மீளச்செயற்படுத்தி உள்ளக சீராக்க வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்காக உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளை ஊக்குவிப்பதற்கு ஆதரவளித்து இவ்வழிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தன.
















