Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

“மத்திய வங்கி உங்களிடம் வருகிறது” - இலங்கை மத்திய வங்கியினால் நடத்தப்படும் முழுநாள் நிகழ்ச்சித்திட்டம்

இலங்கை மத்திய வங்கி “மத்திய வங்கி உங்களிடம் வருகின்றது” என்ற தலைப்பிலான அதன் முதலாவது முழுநாள் நிகழ்ச்சித்திட்டத்தினை 805, திருகோணமலை வீதி, மண்தண்டாவல, மாத்தளை என்ற முகவரியிலுள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அலுவலகத்தில் 2017 மே 5ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்றும் 6ஆம் நாள் சனிக்கிழமையன்றும் மு.ப. 9.00 மணியிலிருந்து பி.ப. 8.00 மணிவரை நடத்தவுள்ளது. 

இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம், பொதுமக்கள் இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் ஊ.சே. நிதியம், சேதமடைந்த நாணயத் தாள்களைப் பரிமாற்றிக் கொள்ளுதல், நாணயக் குத்திகளை வழங்குதல், நாணய அரும்பொருட்காட்சிச்சாலை இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகளை விற்பனைப்படுத்தல், சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் கடன் திட்டங்கள் போன்றவற்றுடன் தொடர்பான பணிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் மூத்த முகாமைத்துவத்தினருடன் பரஸ்பரத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் இயலுமைப்படுத்துவதாகும். 

பன்னாட்டு நாணய நிதியம் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது மீளாய்வு தொடர்பில் அலுவலர் - மட்டத்திலான உடன்படிக்கையை அடைந்துள்ளது.

இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்தினைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இத்தூதுக் குழு ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில், அலுவலர்கள் அறிக்கையினைத் தயாரிப்பர். இது முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு, கலந்துரையாடல்களுக்கும் தீர்மானங்களுக்குமாக பன்னாட்டு நாணய நிதிய நிறைவேற்றுச் சபைக்குச் சம்ர்ப்பிக்கப்படும்.

அரச பிணையங்கள் சந்தையின் வெளிப்படைத்தன்மையில் மேலும் முன்னேற்றங்கள்

இலங்கை மத்திய வங்கி 2017.04.26இல் அரச பிணையங்களின் மீள்கொள்வனவுக் கொடுக்கல்வாங்கல் வர்த்தகத்திற்கு முதனிலை வணிகர்களும் உரிமம் பெற்ற வங்கிகளும் பு;ம்பேர்க் இலத்திரனியல் முறி வர்த்தகப்படுத்தல் தளத்தினைப் பயன்படுத்த வேண்டுமென்பதனைக் கட்டாயமாக்கியிருக்கிறது. இதன்படி, அவர்கள்:

2016ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை

1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க இலங்கை நாணய விதிச் சட்டத்தின் 35ஆம் பிரிவின் நியதிகளுக்கிணங்க இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினது அறுபத்தேழாவது ஆண்டறிக்கை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களால் மாண்புமிகு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கா அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

முழுவடிவம்

2017 மாச்சில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிறகு; ஆண்டு அடிப்படையில் 2017 பெப்புருவரியில் 8.2 சதவீதத்திலிருந்து 2017 மாச்சில் 8.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் 2017 மாச்சின் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்குப் பங்களித்துள்ளன. 2017 மாச்சில் ஆண்டிற்கு ஆண்டுப் பணவீக்கம் அதிகரித்தமைக்கு முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியில் நிலவிய தாழ்நத் தளமே காரணமாக இருந்தது.  

ஆண்டுச் சராசரி அடிப்படையொன்றின் மீது அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2017 பெப்புருவரியில் 5.1 சதவீதத்திலிருந்து 2017 மாச்சில் 5.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.  

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு – 2017 மாச்சு

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மாச்சு மாதத்தில் 66.5 கொண்ட சுட்டெண்ணினை பதிவு செய்ததுடன் இது பெப்புருவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 9.4 சுட்டெண்  புள்ளிகளை கொண்ட ஒரு அதிகரிப்பாகும். இது, புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி துணைச் சுட்டெண்களின் அதிகரிப்பில் பிரதிபலிக்கப்பட்டவாறு புதுவருட பருவகால கேள்விகளினுடான அதிகரிக்கும் கேள்விகள் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் பெரிதும் காரணமாக அமைந்து உற்பத்தி நடவடிக்கைகள் 2017 மாச்சில் தொடர்ச்சியான அதிகரிப்பை குறித்துக்காட்டியது. கொள்வனவுகளின் இருப்பானது, ஒன்றுசேர்ந்த இருப்புகளின் அதிகரிப்பு மற்றும் கடந்த மாதத்தில் காணப்பட்ட வழங்குதல் தாமதங்கள் சீர்செய்யப்பட்டமை போன்றவற்றின் காரணமாக அதிகரித்திருந்தது. எவ்வாறாயினும், நிரம்பலர் வழங்கல் நேரம் குறிப்பாக சீனாவின் அவர்களுடைய புதுவருட காலத்திற்கு பிறகு வழங்குதல் ஏற்பாடுகள் சாதாரண நிலையாக்கப்பட்டதுடன் ஒரு குறைவினை பதிவு செய்தது. தொழில்நிலை துணைச் சுட்டெண்ணும் கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது சிறிதளவில் சரிவடைந்து காணப்பட்டது.

Pages

சந்தை அறிவிப்புகள்