இலங்கை மத்திய வங்கி “மத்திய வங்கி உங்களிடம் வருகின்றது” என்ற தலைப்பிலான அதன் முதலாவது முழுநாள் நிகழ்ச்சித்திட்டத்தினை 805, திருகோணமலை வீதி, மண்தண்டாவல, மாத்தளை என்ற முகவரியிலுள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அலுவலகத்தில் 2017 மே 5ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்றும் 6ஆம் நாள் சனிக்கிழமையன்றும் மு.ப. 9.00 மணியிலிருந்து பி.ப. 8.00 மணிவரை நடத்தவுள்ளது.
இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம், பொதுமக்கள் இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் ஊ.சே. நிதியம், சேதமடைந்த நாணயத் தாள்களைப் பரிமாற்றிக் கொள்ளுதல், நாணயக் குத்திகளை வழங்குதல், நாணய அரும்பொருட்காட்சிச்சாலை இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகளை விற்பனைப்படுத்தல், சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் கடன் திட்டங்கள் போன்றவற்றுடன் தொடர்பான பணிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் மூத்த முகாமைத்துவத்தினருடன் பரஸ்பரத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் இயலுமைப்படுத்துவதாகும்.
















