ஒரு சில உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளினால் எதிர்நோக்கப்படும் நிதியியல் பிரச்சனைகள் தொடர்பில் கரிசனைகளை ஏற்படுத்துகின்ற விதத்தில் ஒரு சில செய்தித் தாள்களில் வெளியிடப்பட்ட சில குறிப்பிட்ட தவறான செய்திகளை மத்திய வங்கி அவதானித்திருக்கிறது. ஆகவே பொதுமக்களின் நலன்கருதி அத்தகைய செய்திகளின் துல்லியமற்ற தன்மைக்குப் பின்னாலுள்ள உண்மைகளை தெளிவுபடுத்த மத்திய வங்கி விரும்புகின்றது.