இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் தனிநபர்களிற்கு உதவுவதற்காக கடன் உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் காரணமாக உரிமம்பெற்ற வணிக வங்கிகளின் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளின் (உரிமம்பெற்ற வங்கிகள்) திரவத்தன்மை மற்றும் ஏனைய முதன்மை செயற்றிறன் குறிகாட்டிகளில் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கத்தின் சாத்தியப்பாடு குறித்தும் உடனடித் திரவத்தன்மை தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டிய அவசியத்திற்காகவும் வங்கிகளின் திரவத்தன்மை நிலையை வலுப்படுத்துவது இன்றியமையாததெனக் கருதுகின்றது.
















