யூனியன் பாங்க் ஒப் கொழும்பு பிஎல்சி இனால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதனை கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2020 மே 01 இலிருந்து யூனியன் பாங்க் ஒப் கொழும்பு பிஎல்சி முதனிலை வணிகராக செயற்படுவதனை நிறுத்துவதற்கு அனுமதியளித்திருக்கின்றதென்பதை பொதுமக்களுக்கு இத்தால் அறிவித்திருக்கின்றது. யூனியன் பாங்க் ஒப் கொழும்பு பிஎல்சியானது லங்கா தீர்ப்பனவு முறைமையில் நேரடி வணிக பங்குபற்றுநராக தொடர்ந்து தொழிற்படும் என்பதுடன் தனது வாடிக்கையாளர் சார்பாக பத்திரங்களற்ற அரச பிணையங்களின் கொடுக்கல்வாங்கலில் ஈடுபட்டு லங்கா செக்குயர் முறைமையில் வாடிக்கையாளர் கணக்குகளையும் பராமரிக்கும்.















