Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

சௌபாக்யா கொவிட்-19 மறுமலர்ச்சிக் கடன் வசதியின் கீழ் 2020 யூலை 13-23 காலப்பகுதியின் போது ரூ.11,829 மில்லியன் தொகையுடைய 3,985 புதிய கடன்களுக்கு மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது

2020 யூலை 13-23 காலப்பகுதியின் போது சௌபாக்யா கொவிட்-19 மறுமலர்ச்சிக் கடன் வசதி கட்டம் ஐஐ மற்றும் ஐஐஐஇன் கீழ் உரிமம்பெற்ற வங்கிகள் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட ரூ.11,829 மில்லியன் தொகையுடைய 3,985 புதிய கடன் விண்ணப்பங்களுக்கு இலங்கை மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. 

மேலே குறிப்பிடப்பட்ட புதிய ஒப்புதல்களின் மூலம் 2020 யூலை 23 வரை சௌபாக்யா கொவிட்-19 மறுமலர்ச்சிக் கடன் வசதியின் கீழ் இலங்கை மத்திய வங்கியினால் இதுவரையிலும் ஒப்புதலளிக்கப்பட்ட கடன் விண்ணப்பங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 26,291ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று, 2020 யூலை 23 வரை இலங்கை மத்திய வங்கியினால் ஒப்புதலளிக்கப்பட்ட கடன்களின் மொத்தப் பெறுமதியும் ரூ.72,079 மில்லியனுக்கு அதிகரித்துள்ளது. 2020 யூலை 23 வரை கீழே அட்டவணை 1இல் காட்டப்பட்டவாறு தீவு முழுவதும் 18,007 கடன்பெறுநர்களுக்கு மத்தியில் ரூ.45,777 மில்லியன் தொகையினை உரிமம்பெற்ற வங்கிகள் ஏற்கனவே பகிர்ந்தளித்துள்ளன.

ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி வைப்பாளர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவு

இலங்கை மத்திய வங்கியானது ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி என்பனவற்றின் நிதி வியாபாரங்கள் 2020.07.13ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் இடைநிறுத்தப்பட்டதனைத் தொடர்ந்து இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்திலிருந்து ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி வைப்பாளர்களுக்கு நட்டஈட்டுக் கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான வழிமுறைகளை எடுத்துள்ளது. அதற்கமைய தீவு முழுவதிலுமுள்ள தெரிவுசெய்யப்பட்ட மக்கள் வங்கிக் கிளைகளினூடாக 2020.07.25ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் நட்டஈட்டுக் கொடுப்பனவு ஆரம்பிக்கப்படும். இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்தின் ஒழுங்குவிதிகளின் நியதிகளுக்கமைவாக, வைப்பாளர் ஒருவருக்கு ரூ.600,000 கொண்ட உயர்ந்தபட்ச நட்டஈடு தீவுமுழுவதிலுமுள்ள 45 மக்கள் வங்கிக் கிளைகளினூடாக கொடுப்பனவு செய்யப்படும்.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2020 யூனில் அதிகரித்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 மேயின் 5.2 சதவீதத்திலிருந்து யூனில் 6.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு வகையிலுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பின் மூலம் பிரதானமாக தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2020 மேயின் 11.1 சதவீதத்திலிருந்து 2020 யூனில் 13.6 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 யூனில் 0.8 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டது.

ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 மேயின் 5.2 சதவீதத்திலிருந்து 2020 யூனில் 5.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. 

முழுவடிவம்

இலங்கையின் வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலைமையினைப் பேணுவதற்கு தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுவருகின்ற வழிமுறைகள்

நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலைமையினைப் பேணும் நோக்குடனும் கொவிட்-19 நோய்த்தொற்றின் பரவல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய சாத்தியமான எதிர்க்கணியத் தாக்கங்களைப் பரிசீலனையில் கொண்டும் இலங்கை மத்திய வங்கியினது நாணயச் சபையின் விதந்துரைப்புடனும் அமைச்சரவையின் ஒப்புதலுடனும் மாண்புமிகு நிதிஇ பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர்இ மூலதனக் கொடுக்கல்வாங்கல்கள் மீதான வெளிமுகப் பணவனுப்பல்கள் மீது 2020 யூலை 02ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் ஆறு (6) மாத காலப்பகுதிக்குப் பின்வரும் வழிமுறைகளை அறிமுகப்படுத்துகின்ற கட்டளையொன்றினை விடுத்திருக்கின்றார்.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2020 யூன்

நடமாட்டத்திற்கான கட்டுப்பாடுகளை முழுமையாகத் தளர்த்தியதனைத் தொடர்ந்து நாட்டில் பொருளாதார நடவடிக்கைகளின் இயல்புநிலையிலிருந்து நன்மையடைந்து தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணானது 2020 மேயுடன் ஒப்பிடுகையில் 18.0 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட மாதத்திற்கு மாத அதிகரிப்புடன் 67.3 இனைப் பதிவுசெய்து 2020 யூனில் கணிசமாக அதிகரித்தது.

நாணயச் சபைக்கான நியமனங்கள் - திரு. சஞ்சீவ ஜயவர்த்தன சனாதிபதி சட்டத்தரணி, முனைவர். ராணி ஜயமகா மற்றும் திரு. சமந்த குமாரசிங்க

அரசியல் யாப்பு ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் நாணயவிதிச் சட்டத்தின் பிரிவு 8(2) (இ) இன்கீழ் மேதகு சனாதிபதியினால் சபைக்கு நியமிக்கப்பட்டதனைத் தொடர்ந்து மூன்று புதிய உறுப்பினர்களும் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினராகப் பணியாற்றும் பொருட்டு கடமைகளை பெறுப்பேற்றுக்கொண்டனர். 

திரு. சஞ்சீவ ஜயவர்த்தன, சனாதிபதி சட்டத்தரணி 2020.02.26ஆம் நாளிலிருந்து இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கான உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பதுடன் முனைவர். ராணி ஜயமகா மற்றும் திரு. சமந்த குமாரசிங்க ஆகிய இருவரும் 2020.06.29ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் நாணயச் சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 

அவர்களது வாழ்க்கைக் குறிப்பு பின்வருமாறு:

 திரு. சஞ்சீவ ஜயவர்த்தன, சனாதிபதி சட்டத்தரணி

Pages

சந்தை அறிவிப்புகள்