Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2021 பெப்புருவரியில் அதிகரித்திருக்கிறது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2021 சனவரியின் 3.7 சதவீதத்திலிருந்து 2021 பெப்புருவரியில் 4.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதற்கு, உணவு வகையிலுள்ள பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்பே முக்கிய தூண்டுதலாக அமைந்தது. இதன்படி, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 சனவரியின் 5.9 சதவீதத்திலிருந்து 2021 பெப்புருவரியில் 6.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. மேலும், உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 சனவரியின் 1.8 சதவீதத்திலிருந்து 2021 பெப்புருவரியில் 1.9 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது.

முழுவடிவம்

இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்தின் கீழான உயர்ந்தபட்ச இழப்பீட்டுக் கொடுப்பனவு அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை ரூ.600,000/- இருந்து ரூ.1,100,000/- இற்கு ரூ.500,000/- ஆல் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிதி நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு,  அத்தகைய நிறுவனங்களின் உரிமங்களை இரத்து செய்யும் அல்லது இடை நிறுத்தும் சந்தர்ப்பத்தில் மேலதிக நிவாரணத்தை வழங்குவதற்காக இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, நாணயச்சபையால் உரிமங்கள் இரத்து செய்யப்பட்ட அல்லது இடைநிறுத்திவைக்கப்பட்ட சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி (சி.ஐ.எவ்.எல்), த ஸ்ராண்டெட் கிறெடிற் பினான்ஸ் லிமிடெட் (ரி.எஸ்.சி.எவ்.எல்), ரி.கே.எஸ் பினான்ஸ் லிமிடெட் (ரி.கே.எஸ்.எவ்.எல்), த பினான்ஸ் கம்பனி பிஎல்சி (ரி.எவ்.சி), ஈ.ரி.ஐ பினான்ஸ் லிமிடெட் (ஈ.ரி.ஐ.எவ்.எல்) மற்றும் ஸ்வர்ணமஹால் பினான்சியல் சேர்வீசஸ் பிஎல்சி (எஸ்.எவ்.எஸ்.பி) ஆகிய ஆறு (6) நிதி நிறுவனங்களின் வைப்பாளர்கள் திருத்தப்பட்ட இழப்பீட்டுத் தொகையைப் பெறத் தகுதியுடையவர்கள்.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2021 பெப்புருவரி

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் பெப்புருவரியில் விரிவடைந்தன.

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகளில் விரிவடைதல் காரணமாக 2021 பெப்புருவரியில் 59.4 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து அதன் விரிவடைதலில் நிலைத்திருந்தது. மேலும், ஒட்டுமொத்த தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணையும் உயர்வான மட்டமொன்றில் நிலைத்திருப்பதற்குத் துணையளித்து கொள்வனவுகளின் இருப்பு அத்துடன் தொழில்நிலை அதேபோன்று நிரம்பலர் விநியோக நேரம் என்பன விரிவடைந்து காணப்பட்டன.

பணிகள் துறை கொ.மு.சுட்டெண் 2021 பெப்புருவரியில் 56.5 இற்கு அதிகரித்து பணிகள் துறை மேலும் மேம்படுவதனை எடுத்துக்காட்டியது. இவ்வதிகரிப்பிற்கு புதிய வியாபாரங்கள், வியாபார நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகளில் அவதானிக்கப்பட்ட விரிவடைதல்கள் துணையளித்திருந்தன.

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களால் பெற்றுக்கொள்ளப்பட்ட குத்தகை வசதிகளுக்கான சலுகைத் திட்டம்

தொடர்ந்து பரவிவரும் கொவிட்-19 தொற்றின் காரணமாக பயணிகள் போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டுள்ள வியாபாரங்கள் மற்றும் தனிநபர்கள் எதிர்நோக்குகின்ற இடர்பாடுகள் மற்றும் நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள், உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் விசேட குத்தகைக் கம்பனிகளை (இதன் பின்னர் நிதியியல் நிறுவனங்களெனக் குறிப்பிடப்படும்) கொவிட்-19 பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் வியாபாரங்கள் பெற்றுக்கொண்ட குத்தகை வசதிகளுக்காக ஏப்பிறல் 01ஆம் திகதியிலிருந்து தொடங்கும் ஆறு மாதங்கள் அல்லது ஒரு குறுகிய காலப்பகுதிக்கு சலுகையை வழங்குமாறு கோருகின்றது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2021 சனவரி

இலங்கையின் வெளிநாட்டுத் துறை 2021 சனவரி காலப்பகுதியில் பல்வேறு நோக்குகளில் தொடர்ந்தும் மீட்சியடைந்தது. மேம்பட்ட வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்பன இதற்குப் பிரதானமாக துணையளித்திருந்தன. 2020 சனவரியுடன் ஒப்பிடுகையில் 2021 சனவரியில் வர்த்தகக் கணக்கில் குறைவடைந்த பற்றாக்குறைக்கு வணிகப் பொருள் ஏற்றுமதிகளைவிட வணிகப் பொருள் இறக்குமதியில் பாரிய வீழ்ச்சியே காரணமாக அமைந்தது. அதேவேளை, தொழிலாளர் பணவனுப்பல்கள் 2021 சனவரியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியொன்றினைத் தொடர்ந்தும் பதிவுசெய்து வெளிநாட்டு நடைமுறைக் கணக்கினை வலுப்படுத்தியது. நிதியியல் கணக்கில் 2021 சனவரியில் அரசாங்கப் பிணையங்கள் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் சிறிய தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்த அதேவேளை, கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை தேறிய வெளிப்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன. ஆயினும், மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட வழிமுறைகளும் அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் தொடர்ந்தமையும் இவ்வழுத்தத்தினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு உதவின.

இலங்கையில் முதன்முறையாக தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தினைத் தொடங்குதல்

 தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தினை இலங்கையில் முதன்முறையாக 2021 மாச்சு 04 அன்று தொடங்கி வைப்பதனை அறிவிப்பதில் இலங்கை மத்திய வங்கி பெருமகிழ்ச்சியடைகின்றது. இத்தொடக்க நிகழ்வைக் குறிக்கும்முகமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பிரதம அமைச்சரும் நிதித் திட்டமிடல் அமைச்சருமான கௌரவ மகிந்த ராஜபக்ஷ்   அவர்களுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் அவர்கள் மூலம் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயம் வழங்கி வைக்கப்பட்டது. இத்தொடக்க நிகழ்வில் பணம் மற்றும் மூலதனச் சந்தை அத்துடன் அரச தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹோலி அத்துடன் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபன நாட்டிற்கான பிரதானி திருமதி. அமீனா ஆரிப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Pages

சந்தை அறிவிப்புகள்