இலங்கை மத்திய வங்கியானது, ஓய்வு மற்றும் விடுமுறை, உறவினர்களை மற்றும் நண்பர்களைச் சந்தித்தல், யாத்திரை, வியாபார நோக்கங்கள், பயிற்சி, கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள், மருத்துவச் சிகிச்சைகள், விளையாட்டுகள், பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார செயற்பாடுகள் போன்றவற்றுக்கான குறுகிய விஜயங்களுக்காகவும் அத்துடன் மாணவர் அல்லது அதற்குச் சமமான வீசாக்களிலும் வெளிநாடு சென்றுள்ள சில இலங்கையர்கள் தற்போது நிலவுகின்ற தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ளனர் என்றும் இலங்கையிலுள்ள அவர்களது குடும்பங்கள் வெளிநாடுகளிலுள்ள அத்தகைய ஆட்களுக்கு வாழ்க்கைச் செலவுகளை/ பராமரிப்புச் செலவுகளை நிறைவேற்றுவதற்கு பணம் அனுப்புவதற்கு ஆர்வமாகவுள்ளனர் என்பது பற்றியும் அறிந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியானது பின்வரும் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்கின்றது.