Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி –2025இன் இரண்டாம் அரையாண்டு

கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2024இன் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் மேல்நோக்கிய போக்கில் சென்று, 2025இன் இரண்டாம் அரையாண்டில்; 10.6 சதவீதத்தினால் அதிகரித்தது. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளும் அதாவது, முறையே 12.4 சதவீதம், 11.3 சதவீதம் மற்றும் 8.0 சதவீதம் கொண்ட ஆண்டு அதிகரிப்புகளைப் பதிவுசெய்த வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டிகளுக்கிடையில் இவ்வதிகரிப்பு காணக்கிடைத்தது. அதேவேளை, காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியும் அதன் துணைக் குறிகாட்டிகளும் 2025இன் முதலாம் அரையாண்டு காலப்பகுதியில் பதிவாகிய பெறுமதிகளுடன் ஒப்பிடுகையில், 2025இன் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியில் அரையாண்டு அடிப்படையில் மிதமான அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன. வர்த்தக மற்றும் வதிவிட காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டிகள், 2025இன் முதலாம் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் உயர்வான அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன.   

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பில் பொது மக்களுக்கான அறிவித்தல்

திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83இ பிரிவின் கீழ்இ இலங்கை மத்திய வங்கியானது விசாரணை மேற்கொண்டு “I.C.A.N Advertising (Pvt) Ltd மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களான icanonlineadvertising.com / bannercuts.com / bannercuts.lk / bannercuts.net / bannercuts.org” என்பன தடைசெய்யப்பட்ட திட்டமொன்றில் ஈடுபட்டு, நடத்தி ஊக்குவித்துள்ளது என உறுதிசெய்து தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி குருநாகலையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிக்கின்றது

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க மற்றும் ஏனைய முதுநிலை அதிகாரிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் 2026 பெப்புருவரி 20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் குருநாகலையில் வர்த்தக சமூகம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் டிஜிட்டல் கொடுப்பனவுகள் குறித்த விழிப்புணர்வினை உருவாக்கும் நோக்கில் விழிப்புணர்வுப் பிரச்சாரமொன்றினை இலங்கை மத்திய வங்கி ஏற்பாடுசெய்துள்ளது. 

பன்னாட்டு நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் இலங்கை மத்திய வங்கிக்கு விஜயம் செய்கின்றார்

பன்னாட்டு நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் முனைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இலங்கைக்கான அவரது விஜயத்தின் போது 2026 பெப்புருவரி 17ஆம் திகதி அன்று இலங்கை மத்திய வங்கிக்கு விஜயம் செய்தார். இவ்விஜயமானது இலங்கையின் பன்னாட்டு நாணய நிதிய அங்கத்துவத்தின் 75ஆவது ஆண்டு நிறைவு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவு என்பவற்றுடன் ஒருங்கிணைந்ததாகக் காணப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் வளாகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க மற்றும் மத்திய வங்கியின் மூத்த அதிகாரிகள் ஆகியோரை முனைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா சந்தித்தார். 

இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2026 ​ஜனவரி

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2026 சனவரியில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன.

தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2026 சனவரியில் 56.1 சுட்டெண் பெறுமதியொன்றைப் பதிவுசெய்தது. தயாரிப்பு நடவடிக்கைகளில் 2025 திசெம்பரில் காணப்பட்ட பருவகால ரீதியிலான உச்சத்துடன் ஒப்பிடுகையில் மெதுவான வீதமொன்றில் மாதத்திற்கு மாத விரிவாக்கமொன்றை இது பிரதிபலிக்கின்றது. மாதகாலப்பகுதியில் அனைத்து துணைச் சுட்டெண்களும் நடுநிலையான அடிப்படை அளவிற்கு மேல் காணப்பட்டன.

இலங்கை மத்திய வங்கி நாணயக் கொள்கை அறிக்கை 2026 பெப்புருவரியினை வெளியிடுகின்றது

மத்திய வங்கி 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் தேவைப்பாடுகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் 2026இற்கான அதன் முதலாவது நாணயக் கொள்கை அறிக்கையினை வெளியிட்டது. ஆண்டொன்றிற்கு இருமுறை வெளியிடப்படுகின்ற நாணயக் கொள்கை அறிக்கையானது பொருளாதாரம், குறிப்பாக பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சித் தோற்றப்பாடு, தொடர்பிலான முன்னோக்கிய பார்வையிலமைந்த நுண்ணோக்குகள் மற்றும் எறிவுகளிற்கான இடர்நேர்வுகள் என்பவற்றினை வழங்குகின்றது. இவ்வறிக்கையின் ஊடாக, மத்திய வங்கி அதன் அண்மைய நாணயக் கொள்கைத் தீர்மானங்களிற்குப் பின்னணியிலுள்ள நியாயபூர்வதன்மையினைத் தொடர்பூட்டுவதன் மூலம் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறுந்தன்மை என்பவற்றினை மேம்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது. 

Pages

சந்தை அறிவிப்புகள்