இலங்கையில் வதிகின்றவர்கள் இலங்கை ரூபாயை விடவும் வெளிநாட்டு நாணயத்தில் கொடுக்கல்வாங்கல் செய்கின்ற சில நிகழ்வுகளை இலங்கை மத்திய வங்கி அவதானத்திற்கொண்டுள்ளது. இது தொடர்பில், 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய இலங்கையில் வதிகின்றவர்களுக்கிடையில் அல்லது அவர்கள் மத்தியில் நிறைவேற்றப்படுகின்ற அனைத்துக் கொடுக்கல்வாங்கல்களும் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் நோக்கங்களுக்காக மத்திய வங்கியினால் வேறுவகையில் அதிகாரமளிக்கப்பட்டாலன்றி இலங்கை ரூபாவில் மேற்கொள்ளப்படல் வேண்டும் என மத்திய வங்கி தெளிவுபடுத்த விரும்புகின்றது.
















