75 ஆவது ஆண்டுநிறைவைக் குறிக்கும் சுற்றோட்டத்திற்கு விடப்படும் ரூ.2000 ஞாபகார்த்த நாணயத் தாளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. தேசத்தின் முன்னேற்றத்திற்கான அத்திவாரமாக பொருளாதார உறுதிப்பாட்டைப் பேணுவதற்கான மத்திய வங்கியின் தளராத அர்ப்பணிப்பினை பிரதிபலித்து “சுபீட்சத்திற்கான உறுதிப்பாடு” எனும் ஆண்டுநிறைவின் கருப்பொருளுக்கு ஒத்திசைவாக இந்நாணயம் அமைந்துள்ளது. இது இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் ஐந்தாவது ஞாபகார்த்த நாணயத் தாளாகும்.















