இலங்கை, பணம் தூயதாக்கல் மீதான ஆசிய/ பசுபிக் குழுமத்தின் 20 ஆவது ஆண்டுக் கூட்டத்தினை ஆசிய பசுபிக் குழுமத்தின் 41 உறுப்பு நாடுகளிலிருந்தான 408 பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு பன்னாட்டு அவதானிப்பாளர் நிறுவனங்களிலிருந்தான 24 அவதானிப்பாளர்கள் ஆகியோரின் பங்குபறற் லுடன் 2017 யூலை 15 - 21 வரை கொழும்பில் நடாத்தியிருந்தது. இந்த நிகழ்விற்கு அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடல் மற்றும் ஊழல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றவியல் குற்றங்கள் போன்றவற்றை ஒழித்தல் தொடர்பில் இலங்கையின் தேசியக் கடப்பாடுகள் பற்றி அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர ஆகியோர் வலியுறுத்தினர். உள்நாட்டு மற்றும் பன்னாட்டு ஆர்வலர்களுக்கிடையான பலமானதும் வினைத்திறனுடன் கூடியதுமான ஒத்துழைப்புக்கான இன்றியமையாத தேவைப்பாடு பற்றியும் அதிமேதகு சனாதிபதி அவர்களால் மேலும் குறித்துக்காட்டப்பட்டது.















