Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

ரூ.50 பில்லியன் பெறுமதியான ஆறுமாத மீள்நிதியிடல் வசதியை உருவாக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதோடு, கொவிட் - 19இன் தாக்கத்திற்குள்ளான தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு ஆதரவளிப்பதற்கான அறிவுறுத்தல்களையும் நிதி நிறுவனங்களுக்கு வழங்குகின்றது

கொவிட் - 19இன் தாக்கத்திற்குள்ளான தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு, கடன் மீள்செலுத்தலைப் பிற்போடுதல் (மூலதனம்+வட்டி) மற்றும் ஒரு தொழிற்படு மூலதனக் கடன் உள்ளடங்கலான ஒரு பரந்தளவிலான சலுகைகளை அறிமுகப்படுத்துவதென 2020.03.20இல் அமைச்சரவை அமைச்சர்களால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கி ஓர் மீள்நிதியிடல் வசதியை உருவாக்கத் தீர்மானித்துள்ளது. உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள், உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக் கம்பனிகள் (நிதி நிறுவனங்கள்) ஆகியவை 2020.03.25இல் ஆரம்பமாகும் இம் மீள்நிதியிடல் வசதியில் பங்குபற்றுவதற்குத் தகுதியானவை என்பதோடு அவை அறிவிக்கப்பட்ட சலுகைகளையும் வழங்கலாம்.

பணவீக்கம் 2020 மாச்சில் குறைவடைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 பெப்புருவரியின் 6.2 சதவீதத்திலிருந்து 2020 மாச்சில் 5.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கு, உணவு வகையிலுள்ள பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்தமையே காரணமாக அமைந்தன. அதன்படி, ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான உணவுப் பணவீக்கமானது 2020 பெப்புருவரியின் 14.7 சதவீதத்திலிருந்து 2020 மாச்சில் 12.8 சதவீதத்திற்கு வீழச்சியடைந்ததுடன் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான உணவல்லாப் பணவீக்கமானது 2020 மாச்சில் 2.5 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. 
 

கொரோனா வைரஸ் (கொவிட் - 19) நோய்ப்பரவலினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனியாட்களுக்கு ஆதரவளிப்பதற்கு உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளுக்கு நெகிழ்ச்சித்தன்மையை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி வழிமு

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, கொரோனா வைரஸ் (கொவிட் - 19) நோய்ப்பரவலினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனியாட்களுக்கு ஆதரவளிப்பதற்கு வசதிசெய்யும் பொருட்டு, உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளுக்கு நெகிழ்ச்சித்தன்மையை வழங்கும் பொருட்டு பல்வேறு எண்ணிக்கையிலான வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானமெடுத்திருக்கின்றது. இந்த ஆரம்ப முயற்சிகளுக்கு ஒத்திசைவாக, உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் முகம் கொடுக்கின்ற உடனடியான அச்சுறுத்தல்களை மிகவும் கருத்திற்கொண்டு மூலதன விரிவாக்கம் போன்ற பல்வேறு ஒழுங்குபடுத்தல் வழிமுறைகளின் நடைமுறைப்படுத்தல் பின்தள்ளிப்போடப்படும் வேளையில் தற்காலிக படிமுறையாக குறிப்பிட்ட ஒழுங்குபடுத்தல் வழிமுறைகள் தளர்த்தப்படுகின்றன.
 

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2020 சனவரி

வர்த்தகப் பற்றாக்குறையானது ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் வீழ்ச்சியடைந்த அதேவேளையில் இறக்குமதிகள் மீதான செலவினம் அதிகரித்தமையின் காரணமாக 2019 சனவரியுடன் ஒப்பிடுகையில் 2020 சனவரியில் விரிவடைந்தது. சுற்றுலாக் கைத்தொழிலானது 2019இன் இறுதியில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களிலிருந்து துரிதமாக மீட்சியடைந்த போதிலும் கொவிட் - 19 நோய்த்தொற்று 2020 சனவரியில் மீட்சியடைகின்ற போக்கினைத் திரும்பலடையச் செய்தது. தொழிலாளர் பணவனுப்பல்கள், 2020 சனவரியில் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தன. அதேவேளை, அரச பிணையங்கள் சந்தையிலிருந்தான வெளிநாட்டு முதலீடுகள் 2020 சனவரியில் தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்த அதேவேளை கொழும்புப் பங்குச் சந்தையிலிருந்து தேறிய வெளிப்பாய்ச்சலொன்று அவதானிக்கப்பட்டது. இலங்கை ரூபா ஐக்கிய அமெரிக்க டொலருக்கெதிராக பரந்தளவில் நிலையானதாகக் காணப்பட்டதுடன் மீண்டும் 2020 சனவரியில் உயர்வடைந்தது. ஆயினும், கொவிட் - 19 உலகளாவிய நோய்த்தொற்றின் காரணமாக மாச்சில் சடுதியாக பெறுமானத் தேய்வடைந்தது. 
 

கொவிட் - 19 இனால் பாதிக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வங்கிகளுக்கு வசதியாக இலங்கை மத்திய வங்கி அதிவிசேட ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துகின்றது

கொவிட் - 19ஆல் பாதிக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு சில சலுகைகளை வழங்குவதற்காக உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளுக்கு நெகிழ்ச்சித்தன்மையை வழங்குமுகமாக பல அதிவிசேட ஒழுங்குமுறை நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை முடிவுசெய்துள்ளது.

2020 பெப்புருவரியில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் அதிகரித்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 சனவரியின் 7.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2020 பெப்புருவரியில் 8.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, 2019 பெப்புருவரியில் காணப்பட்ட தாழ்ந்த தளத்திலான புள்ளிவிபரவியல் தாக்கத்தினால் உந்தப்பட்டது. மேலும், 2020 பெப்புருவரியில் உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 16.3 சதவீதமாகக் காணப்பட்ட வேளையில் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2.1 சதவீதத்தினைப் பதிவுசெய்தது.

Pages

செய்தி வெளியீடுகள்

சந்தை அறிவிப்புகள்