2021 பெப்புருவரி 18 அன்று, நாணயச் சபையானது ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்குத் அனுப்புதல் அத்துடன் அத்தகைய பெறுகைகளை இலங்கை ரூபாவிற்கு மாற்றுதல் தொடர்பில் விதிகளை வழங்கியதுடன் இது தொடர்பில் உரிமம்பெற்ற வங்கிகளுக்கு தொழிற்பாட்டு அறிவுறுத்தல்களையும் வழங்கியது.
ஏற்கனவே நடைமுறையிலுள்ள நாட்டிற்க்கு அனுப்புதல் தேவைப்பாட்டிற்கு மேலதிகமான மேற்குறித்த விதிகளும் தொழிற்பாட்டு அறிவுறுத்தல்களும் நாட்டில் வெளிநாட்டுச் செலாவணி நிலைமையினை வலுப்படுத்துவதற்கும் செலாவணி வீதத்தில் சில மிதமிஞ்சிய தளம்பல்களை ஏற்படுத்திய ஊகச் செயற்பாட்டினை தணிக்கும் பொருட்டும் விடுக்கப்பட்டன.
இவ்விதிகளும் தொழிற்படுத்தல் அறிவித்தல்களும் விடுக்கப்பட்டதிலிருந்து அத்தகைய விதிகள், இலங்கை ஏற்றுமதியாளர்களின் உள்நாட்டு வியாபாரங்களை விரிவுபடுத்துவதிலிருந்து அவர்களை ஊக்கமிழக்கச் செய்யுமென விவாதிக்கின்ற சில ஊடக அறிக்கைகள் வெளிவந்தன. ஏற்றுமதியாளர்களின் சட்டபூர்வமான வருவாய்கள் வங்கித்தொழில் முறைமையினாலும் அரசாங்கத்தினாலும் அபகரிக்கப்பட்டு வருகின்றன எனவும் இவ்வறிக்கைகள் சுட்டிக்காட்டின.
















