Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்

பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பவற்றின் கீழ் செய்யப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2020 யூலை 05ஆம் திகதி பி.ப 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்து முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றது.

கொவிட் -19 மூலம் பாதிக்கப்பட்ட 20,240 வியாபாரங்களுக்கென ரூ.53 பில்லியனுக்கு மத்திய வங்கி ஒப்புதலளித்துள்ளது

மத்திய வங்கியானது இலங்கை அரசாங்கத்துடனான ஆலோசனையுடன் கொவிட்-19 நோய்த்தொற்றின் மூலம் மோசமாக பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு உரிமம்பெற்ற வங்கிகள் ஊடாக 4 சதவீத வட்டிவீதத்தில் தொழிற்பாட்டு மூலதனத்தினை வழங்குவதற்காக சௌபாக்யா கொவிட்-19 மறுமலர்ச்சிக் கடன் திட்டத்தினை அறிமுகப்படுத்தி நாட்டில் பொருளாதார நடவடிக்கை புத்துயிர் பெறுவதற்கு ஆதரவளிக்கின்றது. இக்கடன் திட்டமானது சுயதொழில் மற்றும் தனிப்பட்டவர்கள் உள்ளடங்கலாக ரூ. 1 பில்லியனுக்கு குறைவான வருடாந்த புரள்வுடன் கூடிய கொவிட்-19 மூலம் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு கிடைக்கப்பெறுகின்றது. 1 பில்லியன் வருடாந்த புரள்வு மட்டுப்பாடானது சுற்றுலா, ஏற்றுமதிகள் மற்றும் தொடர்புபட்ட ஏற்பாட்டுச்சேவை வழங்குதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள வியாபாரங்களுக்கு ஏற்புடையதாகாது.

சிறப்பு வைப்புக் கணக்குகளைத் திறத்தல் பற்றிய தெளிவூட்டல்

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு வைப்புக் கணக்குகளைத் திறந்து பேணுவதில் வேண்டப்பட்ட உரிய விழிப்புக்கவனச் செயன்முறைகள் இலங்கையில் தொழிற்படுகின்ற வங்கிகள் மூலம் (அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்கள்) பின்பற்றப்படவில்லை என ஒரு சில அதிகாரிகளினாலும் நபர்களினாலும் தெரிவிக்கப்பட்ட/ முன்வைக்கப்பட்ட கருத்துக்களை/ கரிசனைகளை இலங்கை மத்திய வங்கி திட்டவட்டமாக நிராகரிக்கின்றது. 

கொவிட்-19 நோய்த்தொற்றின் தாக்கங்களை வெற்றிகொள்வதற்கான தேசிய முயற்சிக்கு உதவியினை நாடும் நோக்குடன் வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் 2020.04.08ஆம் திகதியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை வழங்குவதன் ஊடாக இலங்கை அரசாங்கமானது இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் ஆலோசனையுடன் சிறப்பு வைப்புக் கணக்கினை அறிமுகப்படுத்தியுள்ளது. 

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2020 யூனில் மேலும் வீழ்ச்சியடைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)   ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 மேயில் 4.0 சதவீதத்திலிருந்து 2020 யூனில் 3.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இது பிரத்தியேகமாக 2019 யூனில் காணப்பட்ட உயர்ந்த தளத்தின் புள்ளிவிபரவியல் தாக்கத்தினாலேயே உந்தப்பட்டிருந்தது. உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2020 மேயில் 9.9 சதவீதத்திலிருந்து 2020 யூனில் 10.0 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேவேளை, உணவல்லா பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2020 மேயில் 1.6 சதவீதத்திலிருந்து 2020 யூனில் 1.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.   

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாற்றமானது 2020 யூனில் 4.7 சதவீதத்தில் மாறாதிருந்தது.

இலங்கை மத்திய வங்கியானது கொவிட் - 19 உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்காக ஒரு கொடுகடன் உத்தரவாதம் மற்றும் வட்டி உதவுதொகைத் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது, 2020 யூன் 26ம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், கொவிட் - 19 உலகளாவிய நோய்த்தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு வங்கிகளின் கடன்வழங்கலை துரிதப்படுத்துவதற்கு ஒரு கொடுகடன் உத்தரவாதம் மற்றும் வட்டி உதவுதொகைத் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்த தீர்மானித்திருக்கின்றது. இந்த திட்டமானது,  2020 யூலை 01ம் திகதி அன்று தொடங்கிவைக்கப்படவிருப்பதுடன், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ. 150 பில்லியன் வரையறையினுள், சௌபாக்யா கொவிட் - 19 மறுமலர்ச்சி வசதி மற்றும் நாணயவிதிச்சட்டத்தின் 83ம் பிரிவின் கீழ் நாணயச்சபையினால் அங்கீகாரமளிக்கப்பட்ட புதிய கடன் வசதிகளுடன் இணையாக செயற்படும்.

த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் வைப்பாளர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவுகள் - இரண்டாம் கட்டம்

இலங்கை மத்திய வங்கி, 2020.07.02ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் வைப்பாளர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவின் இரண்டாம் கட்டத்தினை ஆரம்பிப்பதற்கான வழிமுறைகளை மேற்கொண்டிருக்கிறது. இதற்கமைய அத்தகைய கொடுப்பனவுகள் நாடுமுழுவதிலுமுள்ள மக்கள் வங்கியின் 63 கிளைகளில் இடம்பெறும். இந்நட்டஈட்டு பொறிமுறையின் நியதிகளுக்கிணங்க, ஒவ்வொரு வைப்பாளர்களுக்கும் ரூ.600,000 என்ற அடிப்படையில் கொடுப்பனவு செலுத்தப்படும். 

இவ்விரண்டாம் கட்ட நட்டஈட்டின் கீழ், த பினான்ஸ் கம்பனி பிஎல்சியினால் உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து வைப்பாளர்களுக்குமான நட்டஈடு 2020.07.02 இலிருந்து ஆரம்பிக்கப்படும்.  

Pages

சந்தை அறிவிப்புகள்