Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு, அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை கைச்சாத்திட்டுள்ளது

இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது, பணம் தூயதாக்குதல், பயங்கரவாதி நிதியிடல் மற்றும் இணைந்த குற்றங்கள்  மற்றும் அதனுடன் இணைந்த எவரேனும் ஆட்கள் பற்றி விசாரணைகள் மற்றும் வழக்குத்தொடுத்தல்கள் மீது தகவல்களைப் பரிமாற்றுவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்துடன் 2024 நவெம்பர் 04 அன்று இலங்கை மத்திய வங்கியில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைக் கைச்சாத்திட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது, 2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளின் பிரகாரம் நிதியியல் உளவறிதல் பிரிவினால் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2024 ஒத்தோபரில் எதிர்மறையான புலத்தில் காணப்பட்டது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021ஸ்ரீ100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது இலங்கை மத்திய வங்கியின் அண்மைய கால எறிவுகளுக்கு இசைவாக, தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாகவும் எதிர்மiறாயான புலத்தில் காணப்பட்டு, 2024 செத்தெம்பரின் 0.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில்  2024 ஒத்தோபரில் 0.8 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்தினைப் பதிவுசெய்தது.

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் செத்தெம்பர் 2024

வெளிநாட்டுத் துறையானது 2023இன் தொடர்புடைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2024இன் இதுவரையான காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமொன்றினைத் தொடர்ந்தும் பதிவுசெய்தது. வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2024 செத்தெம்பரில் (ஆண்டிற்காண்டு) விரிவடைந்து, 2024இன் இதுவரையான காலப்பகுதியில் உயர்ந்தளவிலான மாதாந்த வர்த்தகப் பற்றாக்குறையொன்றினைப் பதிவுசெய்தது.

கட்டடவாக்கத் தொழிற்துறைக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் - 2024 செத்தெம்பர்

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), 48.6 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்திருந்த மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2024 செத்தெம்பரில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் வீழ்ச்சியொன்றினை எடுத்துக்காட்டுகின்றது. மாதகாலப்பகுதியில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் குறிப்பாக தேர்தல் தொடர்புபட்ட இடையூறுகள் காரணமாக சிறிதளவான மிதமடைதலை பல அளவீட்டு பதிலிறுப்பாளர்கள் அவதானித்தனர்.

இலங்கை மத்திய வங்கியின் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் மற்றும் நாணய அச்சிடல் பற்றிய விளக்கம்

இலங்கை மத்திய வங்கி அதன் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளூடாக 2024 ஒத்தோபர் 25 அன்று ரூ.100 பில்லியன்களை “அச்சிட்டது” எனக் குறிப்பிட்டு அண்மையில் அறிக்கைகள் வெளிவந்தன. இவ்வறிக்கைகள் செம்மையற்றவை மற்றும் அடிப்படையற்றவை என்பதை தெளிவுபடுத்துவது முக்கியமானதாகும். திறந்த சந்தைத் தொழிற்பாடுகளூடாக திரவத்தன்மையை (பணம்) உட்செலுத்துவது பொருளாதாரத்தில் குறுகிய கால வட்டி வீதங்களை நிலைநிறுத்தி விலை நிலையுறுதியை உறுதிசெய்யும் நோக்கத்திற்காக வங்கித்தொழில் முறைமையில் போதுமான திரவத்தன்மையை முகாமைசெய்வதை  நோக்காகக்கொண்ட வழமையான மத்திய வங்கித் தொழிற்பாடொன்றாகும். ஆகையினால் அது “நாணயம் அச்சிடல்” என ஒட்டுமொத்தமாக தவறாகப் பொருள்கொள்ளப்பட முடியாது.

46ஆவது சார்க்பினான்ஸ் ஆளுநர்களின் குழுக் கூட்டம்

46ஆவது சார்க்பினான்ஸ் ஆளுநர்களின் குழுக் கூட்டத்தினை 2024 ஒத்தோபர் 24 அன்று வொஷிங்டன், டிசியில் இலங்கை மத்திய வங்கி தலைமை தாங்கி நடாத்தியது. பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் உலக வங்கிக் குழுவின் வருடாந்த கூட்டங்களின் துணை நிகழ்வொன்றாக இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆளுநர்கள், நிதிச் செயலாளர்கள் மற்றும் சார்க் உறுப்பு நாடுகளின் மத்திய வங்கிகள் மற்றும் நிதி அமைச்சுக்கள் என்பவற்றிலிருந்தான ஏனைய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Pages

சந்தை அறிவிப்புகள்