2017 யூலை 01 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கையிலுள்ள உரிமம்பெற்ற வங்கிகள் 2016இன் பிற்பகுதியில் இலங்கை மத்திய வங்கியினால் விடுக்கப்பட்ட பணிப்புரையினை அடிப்படையாகக் கொண்ட குறைந்தபட்ச மூலதன நியமங்களைப் பின்பற்றும். இப்பணிப்புரையானது வங்கிகளின் தாக்குப்பிடிக்கும் தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் பன்னாட்டுத் தீர்ப்பனவுகளுக்கான வங்கியினால் விடுக்கப்பட்ட மூலதனம், முடுக்கி மற்றும் திரவத்தன்மை தொடர்பான பாசல் III வழிகாட்டல்களுடன் இசைந்ததாகக் காணப்பட்டது.
















