பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியினால் ஆதரவளிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டதின் மூன்றாவது மீளாய்வினை நிறைவுசெய்வதற்கான பொருளாதாரக் கொள்கைகள் குறித்த அலுவலர் மட்ட உடன்படிக்கையினை பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்களும் இலங்கை அதிகாரிகளும் எட்டியுள்ளனர். மீளாய்வானது பன்னாட்டு நாணய நிதியத்தின் முகாமைத்துவத்தினால் ஒப்புதலளிக்கப்பட்டு, பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையினால் நிறைவுசெய்யப்பட்டவுடன் நிதியிடலில் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 333 மில்லியன் தொகைக்கான அணுகலினை இலங்கை கொண்டிருக்கும்.