கொவிட் - 19 உலகளாவிய தொற்றுநோய்ப் பரவலின் காரணமாக இலங்கைப் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய எதிர்மறையான தாக்கத்தினைக் கருத்திற்கொண்டு, நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலையினைப் பேணுதல் மற்றும் வெளிநாட்டுச் செலாவணி வீதம் மீது தற்போது காணப்படுகின்ற அழுத்தத்தினைக் குறைத்தல் நோக்குடன் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் பரிந்துரையுடனும் அமைச்சரவையின் ஒப்புதலுடனும் கௌரவ நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர், மூன்று (03) மாதங்களைக் கொண்ட காலப்பகுதியொன்றுக்காக மூலதனக் கொடுக்கல்வாங்கல் மீதான வெளிமுகப் பணவனுப்பல்கள் மீது பின்வரும் வழிமுறைகளை விதிக்கின்ற கட்டளையொன்றினை வழங்கியுள்ளார்.
கொவிட் - 19ஆல் பாதிக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு சில சலுகைகளை வழங்குவதற்காக உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளுக்கு நெகிழ்ச்சித்தன்மையை வழங்குமுகமாக பல அதிவிசேட ஒழுங்குமுறை நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை முடிவுசெய்துள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 சனவரியின் 7.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2020 பெப்புருவரியில் 8.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, 2019 பெப்புருவரியில் காணப்பட்ட தாழ்ந்த தளத்திலான புள்ளிவிபரவியல் தாக்கத்தினால் உந்தப்பட்டது. மேலும், 2020 பெப்புருவரியில் உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 16.3 சதவீதமாகக் காணப்பட்ட வேளையில் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2.1 சதவீதத்தினைப் பதிவுசெய்தது.
பொதுமக்களுக்கு வங்கித்தொழில் பணிகளை வழங்கும்பொருட்டு பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் 2020 மாச்சு 23ஆம் நாளன்று குறைந்த இரண்டு (2) மணி நேரம் தமது கிளைகளைத் திறந்துவைக்குமாறு அனைத்து உரிமம்பெற்ற வங்கிகளையும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளையும் இலங்கை மத்திய வங்கி கோரியுள்ளது.