• Land Valuations Indicator - Second Half of 2019

    இலங்கை மத்திய வங்கியினால் தொகுக்கப்பட்ட கொழும்பு மாவட்டத்திற்கான காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி 2019இன் இரண்டாம் அரையாண்டுப்பகுதியில் 138.9 இனை அடைந்து 2018இன் இரண்டாம் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 10.4 சதவீதம் கொண்ட அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்திருக்கிறது. காணி மதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்து மூன்று துணைக் குறிகாட்டிகளான அதாவது வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் துணைக் குறிகாட்டிகள் இவ்வதிகரிப்பிற்குப் பங்களித்திருக்கின்றன. 

    வதிவிட காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் மிகஉயர்ந்த அதிகரிப்பான 10.7 சதவீதத்தினைப் பதிவுசெய்த வேளையில் வர்த்தக காணி மதிப்பீட்டுக் குறிக்காட்டியும் கைத்தொழில் காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி இரண்டும் 10.3 சதவீதத்தினால் அதிகரித்தன. அதேவேளைஇ 2019இன் முதலரையாண்டுப் பகுதியிலிருந்து 2019 இரண்டாம் அரைக்காலப்பகுதியில் காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி 5.1 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

  • NCPI based Inflation increased in January 2020

    தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 திசெம்பரின் 6.2 சதவீதத்திலிருந்து 2020 சனவரியில் 7.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதற்கு உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலும் காணப்பட்ட பொருட்களினது விலைகளின் மாதாந்த அதிகரிப்பே காரணமாகும். உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2019 திசெம்பரின் 8.6 சதவீதத்திலிருந்து 2020 சனவரியில் 13.7 சதவீதத்திற்கு கணிசமாக அதிகரித்தது. இது 2017 நவெம்பருக்குப் பின்னர் ஏற்பட்ட மிக உயர்ந்ததொரு அதிகரிப்பாகும். மேலும், 2020 சனவரியில் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 3.0 சதவீதத்தில் காணப்பட்டது.

    முழுவடிவம்

  • Discontinuation of Compilation and Publication of Sri Lanka Inter Bank Offered Rate (SLIBOR)

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, இலங்கை வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதத்தினைத் திரட்டுவதனையும் வெளியிடுவதனையும் 2020 யூலை 01ஆம் நாலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் நிறுத்துவதற்குத் தீர்மானித்திருக்கிறது.

  • Appointment of a New Deputy Governor

    நாணயச் சபையானது மாண்புமிகு நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரின் உடன்பாட்டுடன் உதவி ஆளுநராக திரு. கே. எம். மகிந்த சிறிவர்த்தன அவர்களை 2020 பெப்புருவரி 12ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநராக நியமித்திருக்கிறது. 

    திரு சிறிவர்த்தன இலங்கை மத்திய வங்கியில் 28 ஆண்டுகளுக்கும் கூடுதலாகப் பணியாற்றி வருகிறார். அண்மையில் துணை ஆளுநராக அவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர் திரு. சிறிவர்த்தன பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் என்பனவற்றிற்குப் பொறுப்பான உதவி ஆளுநர் பதவியை வகித்திருக்கிறார். இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • External Sector Performance - December 2019

    2019 திசெம்பர் காலப்பகுதியில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் வீழ்ச்சியடைந்த வேளையில் இறக்குமதிகள் மீதான செலவினம் அதிகரித்தமையின் காரணமாக வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறை கணிசமானளவில் சுருக்கமடைந்தமைக்கு இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட கடுமையான சுருக்கமே தூண்டுதலாக விளங்கியது. 2019 திசெம்பரில் சுற்றுலா தொழில்துறையில் விரைவான மீட்சி காணப்பட்ட போதும் இவ்வாண்டுப்பகுதியில் சுற்றுலாவிலிருந்தான ஒன்றுசேர்ந்த வருவாய்கள் வீழ்ச்சியடைந்தன. 2019 திசெம்பரில் தொழிலாளர் பணவனுப்பல்கள் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்து (ஆண்டிற்கு ஆண்டு) 2019இன் ஒன்றுசேர்ந்த வீழ்ச்சி மிதமடைவதற்கு உதவியது. அதேவேளை, 2019 திசெம்பர் காலப்பகுதியில் அரச பிணையங்கள் சந்தையிலிருந்தான வெளிநாட்டு முதலீடுகளில் கணிசமான வெளிப்பாய்ச்சலொன்று காணப்பட்ட வேளையில் கொழும்புப் பங்குச் சந்தையிலும் சிறியளவிலான தேறிய வெளிப்பாய்ச்சல்கள் அவதானிக்கப்பட்டன. 2019ஆம் ஆண்டுப்பகுதியில் இலங்கை ரூபா ஐக்கிய அமெரிக்க டொலருக்கெதிராக உயர்வடைந்து 2020ஆம் ஆண்டின் இதுவரையான பகுதியில் உறுதியாகக் காணப்பட்டது. 

  • Regulatory Action on a Primary Dealer - Pan Asia Banking Corporation PLC

    பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல்கள் அடிப்படையான செயற்பாட்டிற்கிணங்க, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில் 2020 பெப்புருவரி 15ஆம் திகதி மு.ப. 10 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சி அதன் முதனிலை வணிகர் வியாபாரம் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இடைநிறுத்தலை மேலும் ஆறு மாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்குத் தீர்மானித்திருக்கிறது.

  • Sri Lanka Purchasing Managers’ Index - January 2020

    2020 சனவரியில் தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மெதுவான வேகத்தில் விரிவடைந்து 54.0 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தமைக்கு புதிய கட்டளைகளிலும் கொள்வனவு இருப்புக்களிலும் காணப்பட்ட மெதுவான விரிவாக்கமே முக்கிய காரணமாகும். 

  • The Central Bank Holds Payment App Awareness and Onboarding Session

    இலங்கை மத்திய வங்கி 2020ஆம் ஆண்டினை இலங்கையின் டிஜிட்டல் கொடுக்கல்வாங்கலுக்கான ஆண்டாகப் பெயரிட்டிருக்கிறது. இம்முயற்சியின் முக்கிய குறிக்கோள் உரிமம்பெற்ற வங்கிகளினாலும் ஏனைய நிதியியல் நிறுவனங்களினாலும் மற்றும் லங்கா கிளியர் பிறைவேட் லிமிடெட்டினாலும் நாட்டிற்கு ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கொடுப்பனவுத் திட்டங்களைப் பிரபல்யப்படுத்துவதேயாகும். விழிப்புணர்வு என்பது  செல்லிடத் தொலைபேசிக் கொடுப்பனவு பிரயோகங்களின் பயன்பாட்டினை அதிகரிப்பதற்கான திறவுகோலாகும். இம்முயற்சி தொழில்நுட்பவியல் நியதிகளில் நாட்டினை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு உதவுமென மத்திய வங்கி நம்புவதன் காரணமாக, இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவு மற்றும் தீா்ப்பனவுத் திணைக்களம் டிஜிட்டல் கொடுப்பனவு மாதிரிகளைப் பற்றிய பொதுமக்களின் விழிப்புணர்வினை அதிகரிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

  • Credit Support to Accelerate Economic Growth

    உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் (இனி உரிமம்பெற்ற வங்கிகள் எனக் குறிப்பிடப்படும்) ஏற்கனவே அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிதி ஊக்கத்தொகைகளை முழுமைப்படுத்த அந்தந்த உரிமம்பெற்ற வங்கிகளின் தகுதிவாய்ந்த சிறிய மற்றும் நடுத்தர நிறுவன கடன்பெறுநர்களுக்கு சிறப்புக் கடன் ஆதரவுத் திட்டத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

    இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியானது வங்கிகளுக்கிடையில் சீரான திட்டமொன்றினை அமுல்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் உள்ளடக்கிய சுற்றறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. வங்கிகளுக்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையினை கீழேயுள்ள இணைப்பின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் திட்டத்தினுடைய முக்கிய அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

  • IMF Staff Concludes Visit to Sri Lanka

    அலுவலர் குழுவின் பின்னரான பத்திரிகை வெளியீடானது நாடொன்றிற்கான விஜயமொன்றினைத் தொடர்ந்து பூர்வாங்க கண்டுபிடிப்புக்களை/ பெறுபேறுகளைத் தெரிவிக்கின்ற ப.நா.நிதியத்தின் அலுவலர் குழுக்களின் கூற்றுக்களை உள்ளடக்கும். இக்கூற்றில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ப.நா.நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது ப.நா.நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்தினைப் பிரதிபலிக்க வேண்டுமென அவசியமில்லை. இந்த அலுவலர் குழு நிறைவேற்றுச் சபை கலந்துரையாடலுக்கு வழிவகுக்கமாட்டாது.

    முழுவடிவம்

Pages