• Execution of Resolution Action on Nation Lanka Finance PLC [NLFP] under the Banking (Special Provisions) Act, No. 17 of 2023

    2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கப்பட்ட நிதிக் கம்பனியொன்றான நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளையும் அதன் கீழ் விடுக்கப்பட்ட பல்வேறு பணிப்புரைகளையும் விதிகளையும் தொடர்ச்சியாக மீறி மறுத்து வந்திருக்கின்றது. மேலும், நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சியின் நிதியியல் நிலைமையும் போதுமானதற்ற மூலதன மட்டம், சொத்துக்களின் மோசமான தரம், தொடர்ச்சியான இழப்புக்கள் மற்றும் கோருகின்றமை அல்லது முதிர்ச்சியடைகின்றமை போன்ற சந்தர்ப்பங்களில் வைப்பாளர்களின் பணத்தினை மீளச் செலுத்தத் தவறுதல் போன்ற காரணங்களினால் திருப்திகரமானதாக காணப்படவில்லை.

  • Central Bank Launches Transformative Financial Literacy Initiatives Towards Building a Financially Literate Sri Lanka

    நிதியியல் அறிவினைக் கொண்ட இலங்கை” என்ற பரந்தளவிலான தொலைநோக்கை கட்டியெழுப்புவதுடன் அணிசேர்ந்து, நிதியியல் அறிவு பற்றிய வழிகாட்டலின் கீழ் பல்வேறு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முன்முயற்சிகளை அங்குரார்ப்பணம் செய்வதன் மூலம், மத்திய வங்கி 2025 யூலை 3 அன்று அதன் நிதியியல் வசதிக்குட்படுத்தல் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைற்கல்லை அடைந்துள்ளது. ஆற்றல்வாய்ந்த நிதியியல் தீர்மானத்தை மேற்கொள்ளுதல் மற்றும் நிலைபெறத்தக்க பொருளாதார நலனோன்புகை போன்றவற்றுக்காக பொதுமக்களின் நிதியியல் நடத்தையை மாற்றும் வகையில் அறிவு, திறன்கள், மற்றும் எண்ணப்பாங்குடன் அவர்களை வலுவூட்டுவதற்கான மத்திய வங்கியின் அர்ப்பணிப்பினை இம்முன்னெடுப்புக்கள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.

  • IMF Executive Board Completes the Fourth Review Under the Extended Fund Facility with Sri Lanka

    பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையானது இலங்கையுடனான 48 மாத கால விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழான நான்காவது மீளாய்வினை நிறைவுசெய்து, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் என்பவற்றிற்கு ஆதரவளிக்கும் பொருட்டு சிஎஉ 254 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 350 மில்லியன்) தொகைக்கான உடனடி அணுகலினை நாட்டிற்கு வழங்குகின்றது. இது பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் இலங்கை பெற்றுக்கொள்கின்ற ஐந்தாவது தொகுதியாக காணப்படுவதுடன், இதற்கமைய, இதுவரையான காலப்பகுதியில் பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்த பன்னாட்டு நாணய நிதிய நிதியியல் ஆதரவினை சிஎஉ 1.27 பில்லியனிற்கு (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.74 பில்லியன்) அதிகரிக்கின்றது. பன்னாட்டு நாணய நிதியமானது பின்வரும் ஊடக வெளியீட்டினை 2025 யூலை 03 அன்று வெளியிட்டதுடன், இதனைக் கீழேயுள்ள இணைப்பிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

  • External Sector Performance - May 2025

    நடைமுறைக் கணக்கில் பதிவுசெய்யப்பட்ட தொடர்ச்சியான மாதாந்த மிகையொன்றுடன் இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது 2025 மேயில் மேலும் வலுவடைந்தது. தொழிலாளர் பணவனுப்பல்களின் ஆரோக்கியமான உட்பாய்ச்சல்கள் பதிவுசெய்யப்பட்டு, விரிவடைந்து செல்கின்ற வர்த்தகப் பற்றாக்குறையொன்றினை எதிரீடு செய்தன.

  • CCPI based deflation eases further in June 2025

    2025 யூனில் பணச்சுருக்கம் தொடர்ந்தும் தளர்வடைந்தது. இதற்கமைய, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணச்சுருக்கமானது மேயின் 0.7 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 2025 யூனில் 0.6 சதவீததத்தைப் பதிவுசெய்து, சிறிதளவு குறைவான வீதத்தை எடுத்துக்காட்டியது. 

  • Sri Lanka PMI - Construction rebounded in May 2025

    கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு கட்டடவாக்கம்)இ மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 மேயில் 59.7 சதவீதமாக மீளெழுச்சியடைந்தது. ஏப்பிறலின் பண்டிகை பருவ கால மந்தநிலையிலிருந்து மீண்டு கட்டடவாக்க நடவடிக்கைகள் மேயில் மீண்டும் உத்வேகம் பெற்றுள்ளன என அநேகமான பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

  • Advertisements Promoting Overseas Property Investments

    இலங்கையில் வதிகின்றவர்களிடையே வெளிநாட்டு அசையாச் சொத்தில் முதலீடுகளை (வெளிநாட்டு ஆதன முதலீடுகள்) ஊக்குவிக்கின்ற விளம்பரங்கள் அண்மைக்காலமாக அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படுவதை இலங்கை மத்திய வங்கி அவதானத்தில் கொண்டுள்ளது. அத்தகைய முதலீடுகளுக்கான வெளிநாட்டு நிதியிடலை பெறுவதற்கான வழிகாட்டலையும் இவ்விளம்பரங்கள் வழங்குகின்றன. 

  • The Central Bank of Sri Lanka, Ministry of Finance, and the International Monetary Fund Co-host the Conference on Sri Lanka’s Road to Recovery: Debt and Governance

    இலங்கை மத்திய வங்கி நிதி அமைச்சு மற்றும் பன்னாட்டு நாணய நிதியம் என்பவற்றுடன் இணைந்து ‘இலங்கையின் மீட்சிக்கான பாதை: படுகடன் மற்றும் ஆளுகை’ குறித்து 2025 யூன் 16 அன்று கொழும்பு சங்ரி லா ஹோட்டலில் நடைபெற்ற உயர் மட்டத்திலான மாநாட்டிற்கு இணை அனுசரணை வழங்கியது. பன்னாட்டு நாணய நிதியத்தினால் ஆதரவளிக்கப்பட்ட மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான இலங்கையின் மீட்சி குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கும் பொருட்டு முக்கிய கொள்கை வகுப்பாளர்கள், உலகளாவிய ஆர்வலர்கள், தனியார் துறை மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரினை நிகழ்வு ஒன்றிணைத்தது.

  • SL Purchasing Managers’ Index (PMI) – May 2025

    கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 மேயில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகளில் மேம்பாடுகளை எடுத்துக்காட்டுகின்றன

  • Relief Measures to Assist the affected Small and Medium Enterprises

    கடந்தகாலத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்ட வியாபாரங்களின் நிலைபெறத்தக்க புத்துயிரளித்தலை வசதிப்படுத்தும் நோக்குடன், 2025.03.31 அன்று வரை தொடர்புடைய வங்கிகளுடனான வியாபார புத்துயிரளித்தலுக்கான கலந்துரையாடல்களை தொடங்கியுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் கடன்பாட்டாளர்களுக்கு மேலதிக சலுகைகளை வழங்குமாறு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளுக்கும் (இதனகத்துப்பின்னர் உரிமம்பெற்ற வங்கிகள் எனக் குறிப்பீடு செய்யப்படும்)  இலங்கை  மத்திய வங்கி ஆலோசனை வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு உதவுவதற்கான, நிவாரண வழிமுறைகள் மீதான 2024.12.19ஆம் திகதியிடப்பட்ட 2024ஆம் ஆண்டின் 04ஆம் இலக்க சுற்றறிக்கை மற்றும் 2025.01.01ஆம் திகதியிடப்பட்ட 2025ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க பிற்சேர்க்கைச் சுற்றறிக்கை ஆகியவற்றுக்கமைவாக இந்நிவாரண வழிமுறைகள் அமைந்துள்ளன.  

Pages