அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வைப்புக் காப்புறுதி மற்றும் தீா்மானம்

இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டம் 

1. இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் உறுப்பு நிறுவனங்கள் யாவை?

1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைத்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்  

1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைத்து உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள்

2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைத்து உரிமம்பெற்ற நிதிக்கம்பனிகள் 

2. இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தினால் காப்புறுதிசெய்யப்பட்ட/உள்ளடக்கப்பட்ட வைப்புக்கள் யாவை?

இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் உறுப்பு நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள  பின்வரும் இலங்கை ரூபா அல்லது வெளிநாட்டு நாணய பெயர்குறிக்கப்பட்ட வைப்புக்களை இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டம் உள்ளடக்குகின்றது. 

- சேமிப்பு வைப்புக்கள் 

- கேள்வி வைப்புக்கள்

- வைப்புச் சான்றிதழ் உட்பட நிலையான வைப்புக்கள்

3. இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் மூலம் உள்ளடக்கப்படுவர்கள்?

இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டமானது தனிப்பட்டவர்கள், கூட்டு முயற்சி, ஏக உரிமையாளர் கம்பனி, போன்றவற்றினால் வைத்திருக்கப்படும் வைப்புக்களை உள்ளடக்குகின்றது. இருப்பினும், 2023ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 43(3)ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தகைமையற்ற வைப்புக்களை உள்ளடக்கவில்லை.

4. இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் காணப்படும் தற்போதைய வைப்புத் தொகை காப்புறுதி உள்ளடக்கம் என்ன?

இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் தற்போதைய உள்ளடக்கம் நிறுவன அடிப்படையொன்றில் வைப்பாளருக்கு ரூ.1,100,000 வரை காணப்படும்.

5. இழப்பீட்டு கொடுப்பனவுகளுக்காக ஒவ்வொரு வைப்புத்தொகையாளருக்கான வைப்புத் தொகைகளின் தகைமையுடைய பெறுமதி எவ்வாறு கணிப்பீடு செய்யப்படுகின்றது?

செலுத்தத்தக்க இழப்பீடு “வைப்பாளர் ஒருவர்” என்ற அடிப்படையில் கணிப்பிடப்பட்டு உறுப்பு நிறுவனத்தின் உரிமத்தை இரத்துச்செய்கின்ற திகதியிலுள்ளவாறு, எந்தவொரு அட்டுறு வட்டி வீதம் உள்ளடங்கலாக, எந்தவொரு நாணயத்திலும் ஒவ்வொரு பெயர்குறிக்கப்பட்ட ஒவ்வொரு வைப்பாளரின் அனைத்து வைப்புத்தொகைகளையும் ஒருங்கிணைத்தல் வேண்டும் என்பதுடன் தொடர்ந்துவருகின்ற காலத்திற்கு வட்டி எதுவும் செலுத்தலாகாது.

இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் தற்போதைய உள்ளடக்கமானது நிறுவனத்தின் அடிப்படையில் வைப்பாளரொருவருக்கு ரூ.1,100,000 வரை ஆகும். 

6. வைப்பாளர் வெளிநாட்டு நாணய வைப்புக்களை வைத்திருக்கும் போது வைப்பாளரொருவருக்கான இழப்பீட்டுத் தொகை எவ்வாறு கணிப்பீடுசெய்யப்படுகின்றது?

அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இல.5இல் விளக்கப்பட்டதற்கமைவாக, இலங்கை ரூபா வைப்புக்களுக்கு இழப்பீட்டு கொடுப்பனவுகளின் விடயத்திற்கு ஏற்றவாறு இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் உறுப்பு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தை இரத்துச்செய்கின்ற சந்தர்ப்பத்தில், வெளிநாட்டு நாணய வைப்புத்தொகைகளைக் கொண்டுள்ள உறுப்பு நிறுவனத்தின் காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்கள் நிறுவன அடிப்படையில் வைப்பாளரொருவருக்கு உயர்ந்தபட்சம் ரூ1,100,00 கொண்ட சமமான தொகை வரை இழப்பீடுசெய்யப்படும்.

7. வைப்பாளர் கூட்டு வைப்புத்தொகையைக் கொண்டிருக்கும்போது இழப்பீட்டு கொடுப்பனவு தொகை எவ்வாறு கணிப்பீடு செய்யப்படுகின்றது?

கூட்டு வைப்பு உடமையாளர்களின் விடயத்தில், ஒவ்வொரு கூட்டு வைப்பாளரும் தனிப்பட்ட வைப்பாளராக கருதப்படுவதுடன் அவரது உறுப்பு நிறுவனத்தில் வைத்திருக்கும் அனைத்து காப்புறுதிசெய்யப்பட்ட வைப்புத்தொகைகளைக் கருத்திற்கொண்டு, உயர்ந்தபட்சம் ரூ.1,100,000/- வரை அவருக்கு இழப்பீடு வழங்கப்படும்.

8. மரணமடைந்த வைப்பாளரின் பயன்பெறுநர்களுக்கு (கூட்டு உடமையாளர்கள்/பரிந்துரைக்கப்பட்டவர்) இழப்பீட்டு கொடுப்பனவுத் தொகையை எவ்வாறு கணிப்பீடு செய்வது? 

மரணமடைந்த வைப்பாளரின் கோரிக்கைகளுக்கு பல்வேறு நன்மைப்பெறுநர்கள் காணப்படுகின்றதால், உயர்ந்தபட்சமாக ரூ.1,100,000/- வரை தனிப்பட்ட கொடுப்பனவுகள் மொத்த வைப்புத்தொகைகளின் உரிய பங்கிற்கமைவாக விகிதாசாரமாகப் பிரிக்கப்படுகின்றது.

9. இழப்பீட்டு கொடுப்பனவுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு யாது?

i.2023ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) நியதிகளில், காப்புறுதி செய்யப்பட்ட வைப்புக்களின் வைப்பாளர் உறுப்பு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தை இரத்துச்செய்த திகதியிலிருந்து ஆறு (06) ஆண்டுகளுக்குள் இழப்பீடுகளுக்காக முறையாகப் பூர்த்திசெய்யப்பட்ட கோரிக்கையை சமர்ப்பித்தல் வேண்டும். 

ii.வங்கித்தொழில் சட்டத்தின் (விசேட ஏற்பாடுகள்) நியமிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் (அதாவது 2023.11.15) இரத்துச்செய்யப்பட்டுள்ள/இடைநிறுத்தப்பட்டுள்ள உரிமங்களைக் கொண்ட உறுப்பு நிறுவனங்களின் காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்களின் விடயத்தில், அவர்களின் கோரிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கு பின்வரும் காலக்கெடுக்கள் ஏற்புடையதாகவிருக்கும்:

அ.2021.08.06இற்கு முன்னர் இரத்துச்செய்யப்பட்டுள்ள உறுப்பு நிறுவனத்தின் காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்கள் உறுப்பு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தை இரத்துசெய்த/இடைநிறுத்திய திகதியிலிருந்து நான்கு (04) ஆண்டுகளுக்குள் அவர்களின் கோரிக்கைகளைச் சமர்ப்பித்தல் வேண்டும். 

ஆ.2023.11.15இற்கு முன்னர் குறிப்பாக, 2021.08.06இற்கு இரத்துச்செய்யப்பட்டுள்ள உரிமத்தைக்கொண்ட உறுப்பு நிறுவனத்தின் காப்புறுதிசெய்யப்பட்ட வைப்பாளர்கள் உறுப்பு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தை இரத்துச்செய்கின்ற/இடைநிறுத்துகின்ற திகதியிலிருந்து ஆறு (06) ஆண்டுகளுக்குள் அவர்களின் கோரிக்கையை சமர்ப்பித்தல் வேண்டும். 

10. ஏற்கனவே ரூ.600,000 வரை கோரியுள்ள வைப்பாளர்களுக்கு ரூ.500,000 நிலுவையை செலுத்துவதற்கான நடைமுறை யாது? 

காப்புறுதிசெய்யப்பட்ட வைப்பாளர்கள் கோரிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுக்குள் (காலக்கெடுக்களுக்கு அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இல. 11 மற்றும் 16 பார்க்க) வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட படிவத்திற்கமைவாக ஒப்புதல் படிவத்தைச் சமர்ப்பித்தல் வேண்டும். ஒப்பந்த படிவங்கள் பின்வரும் இணைப்பினூடாக தரவிறக்கம் செய்யலாம்.

 

இலங்கை மத்திய வங்கியினூடாக வைப்பாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு கொடுப்பனவுகள் 

11. மத்திய வங்கியினால் நேரடியாக கையாளப்படுகின்ற/கையாளப்பட்ட இழப்பீட்டு கொடுப்பனவுகளுக்கு உரிமம் இரத்துச்செய்யப்பட்ட உறுப்பு நிறுவனங்கள் யாவை?

இலங்கை மத்திய வங்கியினால் கையாளப்படுகின்ற/கையாளப்பட்ட உரிமம் இரத்துச்செய்யப்பட்டுள்ள பின்வரும் உறுப்பு நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கான இழப்பீட்டு கொடுப்பனவுகள்:

அ)சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி – 2023.06.06 அன்று தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் முடிவுறுத்தப்பட்டது.

ஆ)த ஸ்ராண்டட் கிறடிற் பினான்ஸ் லிமிடெட் - 2023.02.08 அன்று தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் முடிவுறுத்தப்பட்டது

இ)டிகேஎஸ் பினான்ஸ் லிமிடெட் - 2023.09.19 அன்று தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் முடிவுறுத்தப்பட்டது

ஈ)பிம்புத் பினான்ஸ் பிஎல்சி – 2029.08.31 வரை 

சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, மற்றும் த ஸ்ராண்டட் கிறடிற் பினான்ஸ் லிமிட்டெட் என்பனவற்றின் வைப்பாளர்களுக்கான இழப்பீட்டு கொடுப்பனவுகள் தீர்த்துக்கட்டுனரின் நியமனம் காரணமாக மேலே குறிப்பிடப்பட்ட திகதியிலிருந்து நிறுத்தப்பட்டன அத்துடன் உயர்ந்தபட்சம் இழப்பீடு கோரப்பட்ட காலம் முடிவடைந்ததன் காரணமாக டிகேஎஸ் பினான்ஸ் லிமிடெட் நிறுத்தப்பட்டது.

12. வைப்பாளரொருவர் இழப்பீட்டு கொடுப்பனவுகளை எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

வைப்பாளர்கள் பின்வரும் இணைப்பிலிருந்து கோரிக்கைப் படிவத்தை தரவிறக்கம் செய்யலாம்.

அல்லது

உரிமைக் கோரல் படிவத்தையும் ஏனைய படிவங்களையும் தலைமை அலுவலகக் கட்டடத்தின் முகப்பிலிருந்தும் இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அலுவலகங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம். 

வைப்பாளர்கள் ஏனைய கோரப்பட்ட ஆவணங்களுடன் இணைந்து முறையாகப் பூரணப்படுத்தப்பட்ட கோரிக்கைப் படிவத்தை (அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இல 13.) வன் பிரதிகளாகப் பதிவுத் தபாலின் மூலமாக அல்லது நேரடியாக சமூகமளித்து இலங்கை மத்திய வங்கிக்கு சமர்ப்பிக்கலாம்.  

அ)பதிவுத் தபாலின் மூலம்:

முகவரி: பணிப்பாளர், வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, இல 30, சனாதிபதி மாவத்தை, கொழும்பு – 01.

அல்லது

ஆ)நேரடியாக சமூகமளிக்கும் முறை:

 

முத்திரையிடப்பட்ட கடித உறையில் “ பணிப்பாளர், வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானத் திணைக்களம்” எனக் குறிப்பிட்டு வார நாட்களில் மு.ப 8.00 தொடக்கம் பி.ப 4.00 மணி வரை இல.30, சனாதிபதி மாவத்தை, கொழும்பு 01இல் அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்தின் தரை மாடியிலுள்ள அஞ்சல் அறையில் சமர்ப்பிக்கலாம்.

13. இழப்பீட்டிற்கான கோரிக்கையொன்றை மேற்கொள்வதற்கு தேவையான ஆவணங்கள் யாவை?

முறையாக சான்றுபடுத்தப்பட்ட கோரிக்கைப் படிவம் 

மூல வைப்புச் சான்றிதழ்கள் 

மூல சான்றிதழ்களுக்கமைவாக முறையாக சான்றுபடுத்தப்பட்ட அடையாள ஆவணங்கள் 

வங்கி கணக்கு விபரங்கள் 

பெயர் மாற்றம் ஏற்படுகின்ற போது சத்தியக்கடதாசிகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் போன்றனவாகும். 

மேலே குறிப்பிடப்பட்ட ஆவணங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இல.12இல் குறிப்பிடப்பட்டதற்கமைவாக, பதிவுத் தபாலின் மூலமாகவோ அல்லது நேரடியாக கையளிக்கப்படுவதன் மூலமாகவோ  வன் பிரதிளாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

14. இழப்பீட்டு கொடுப்பனவை மேற்கொள்வதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்?

எடுக்கப்படும் காலமானது விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்வதையும் வேண்டப்படும் ஏனைய அனைத்து ஆவணங்களைச் சமர்ப்பிப்பதையும் பொறுத்து காணப்படும். அனைத்து வேண்டப்படும் ஆவணங்களும் ஒழுங்காக இருக்குமாயின், கோரலானது செயலாக்கப்பட்டு உடனடியாக அடுத்த தொகுப்பில் செலுத்தப்படும்.  

15. ஆவணங்கள் ஒழுங்கான விதத்தில் காணப்படாத போது இலங்கை மத்திய வங்கியினால் பின்பற்றப்படும் நடைமுறை யாது? 

தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானத் திணைக்களத்தினால் குறைபாடுகள் மற்றும் வேண்டப்படும் ஏதேனும் மேலதிக விபரங்கள் வைப்பாளர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது. 

 

முகவர் வங்கியினூடாக வைப்பாளர்களுக்கான இழப்பீட்டு கொடுப்பனவுகள் 

16. முகவர் வங்கியின் மூலமாக வைப்பாளர்களுக்கு செலுத்தப்படுகின்ற/செலுத்தப்பட்ட இழப்பீடு வழங்கப்பட்ட உரிமம் இரத்துச்செய்யப்பட்ட உறுப்பு நிறுவனங்கள் யாவை?

ஈடிஐ மற்றும் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸ் ஆகியவற்றின் வைப்பாளர்களுக்கான இழப்பீட்டு கொடுப்பனவுகள் 2020.07.25இலிருந்து தொடங்கப்பட்டன.

17. ஈடிஐ மற்றும் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸ் ஆகியவற்றுக்கு கொடுப்பனவுச் செயன்முறை எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

ஈடிஐ மற்றும் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸ் ஆகியவற்றின் வைப்பாளர்களுக்கான இழப்பீட்டு கொடுப்பனவுகள் 2020.07.25இலிருந்து தொடங்கப்பட்டன.

18. முகவர் வங்கியினூடாக இழப்பீட்டைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

மூல வைப்புச் சான்றிதழ்கள் மற்றும் செல்லுபடியாகும் அடையாள ஆவணத்துடன் (தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு/சாரதி உரிமம்) முகவர் வங்கியின் வைப்பாளர்கள் அருகிலுள்ள கிளைக்கு விஜயம் செய்யலாம் அத்துடன் கொடுப்பனவுப் பெற்றுக்கொள்வதற்கு முகவர் வங்கியின் மூலம் தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றலாம். 

19. முகவர் வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை? 

வைப்பாளரின் அடையாள ஆவணங்களின் மூலங்கள் (தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி உரிமம்)

மூலச் சான்றிதழ்கள், வங்கிப் புத்தகங்கள், பங்குச் சான்றிதழ்கள்

முறையாகப் பூரணப்படுத்தப்பட்ட கோரிக்கைப் படிவம் 

அற்றோனி தத்துவத்திற்கமைவாக, முகவர் வங்கியினால் வேண்டப்பட்டதன்படி வேறு ஏதேனும் ஆவணங்கள்,

ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட கடிதங்கள், தொடர்புடைய தோல்வியுற்ற உறுப்பு நிறுவனங்களினால் வழங்கப்பட்ட இழப்பீடுகள் போன்றன. 

20. கருமப்பீடத்தில் முகவர் வங்கியிடமிருந்து மீளளிப்புக்களைப் பெற்றுக்கொள்வது சாத்தியமா? 

ஆம். 

மாற்றீடாக, தோல்வியுற்ற உறுப்பு நிறுவனங்களின் வைப்பாளர்களர்களுக்கு, முகவர் வங்கியில் அவர்களின் ஏற்கனவேயிருக்கின்ற/புதிய கணக்குகளுக்கு இழப்பீட்டு கொடுப்பனவை வரவு வைப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றது.

 

வைப்பாளர்களுக்கான இழப்பீட்டு கொடுப்பனவுகளுடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் 

21. வைப்பாளரிடம் வைப்புத்தொகையின் மூலச் சான்றிதழ்கள் இல்லையென்றால், பின்பற்ற வேண்டிய நடைமுறை யாது?

வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானத் திணைக்களத்தினால் வழங்கப்படும் படிவத்திற்கிணங்க வைப்பாளர் முறையாகப் பூரணப்படுத்தப்பட்ட சத்தியக்கடதாசியையும் இழப்பீட்டுக் கடிதத்தையும் சமர்ப்பிக்கலாம். இலங்கை மத்திய வங்கியினூடாக கொடுப்பனவைச் செலுத்தும்பட்சத்தில், வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானத் திணைக்களத்தினால் வைப்பாளரின் கோரிக்கையின் பேரில் சத்தியக்கடதாசி மற்றும் இழப்பீட்டுப் படிவம் வழங்கப்படும். இழப்பீடானது முகவர் வங்கியின் மூலம் செலுத்துப்படுமாயின், சத்தியக்கடதாசி மற்றும் இழப்பீட்டின் தொடர்புடைய படிவமானது (படிவம் 07) தொடர்புடைய வங்கியின் மூலம் வழங்கப்படும். 

சத்தியக்கடதாசி வைப்பாளரினால் பூரணப்படுத்தப்பட்டு உறுதிமொழிக்காக சமாதான நீதவானினால்/ஆணையாளரினால் சான்றளிக்கப்பட வேண்டும்.

இழப்பீடானது தொடர்புடைய தோல்வியுற்ற உறுப்பு நிறுவனத்தினால் பூரணப்படுத்தப்பட வேண்டும்.

22. கூட்டு வைப்புத்தொகைகளைப் பொறுத்த வரையில், ஒரேயொரு வைப்பாளர் மாத்திரமே தமது இழப்பீட்டு கொடுப்பனவின் பகுதியைக் கோர முடியமா?

ஆம். முகவர் வங்கியில் நேரடியாக வெளிப்படுகின்ற கூட்டு உடமையாளர் அல்லது  வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானத் திணைக்களத்திற்கு முறையாகப் பூரணப்படுத்தப்பட்ட கோரிக்கைப் படிவத்தை சமர்ப்பிக்கின்ற கூட்டு உடமையாளர், ஏனைய கூட்டு உடமையாளர்/உடமையாளர்கள் செல்லுப்படியாகும் கோரிக்கைப் படிவத்தை/படிவங்களை சமர்ப்பிக்க இயலாத சந்தர்ப்பத்தில் இழப்பீட்டு கொடுப்பனவின் அவரது தகைமையுடைய பகுதியை மாத்திரம் பெற்றுக்கொள்ளலாம்.  

23. வெளிநாட்டில் வசிக்கும் வைப்பாளர்கள் இழப்பீட்டை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம்?

வெளிநாட்டில் வசிக்கும் வைப்பாளர்கள் கோரிக்கைப் படிவங்களை சமர்ப்பிப்பதற்கு ‘விசேட அற்றோனி தத்துவத்தை’ வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

வைப்பாளரொருவர் இலங்கையில் வசிக்கும் போது அற்றோனி தத்துவத்தில் கைச்சாத்திடுவாராயின், சமாதான நீதவானால்/சத்தியப்பிரமாண ஆணையாளரினால் சான்றளிக்கப்படலாம். வைப்பாளர் வெளிநாட்டில் வசிக்கும் போது அற்றோனி தத்துவத்தில் கைச்சாத்திட்டால், அது வைப்பாளர் வசிக்கும் நாட்டின் தூதரகத்தின் மூலம் சான்றளிக்கப்பட வேண்டும். எனினும், இரு சூழ்நிலைகளிலும் அற்றோனி தத்துவம் பதிவாளர் நாயகத் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட வேண்டும்.  

வெளிநாட்டில் வசிக்கும் வைப்பாளரொருவர் முகவர் வங்கியினூடாக கோரிக்கை விடுக்கின்ற போது அத்துடன் அத்தகைய வங்கியில் கணக்கு வைத்திருக்கும் போதும், முகவர் வங்கியானது வைப்பாளரின் கணக்கில் நேரடியாக பணத்தை வரவு வைக்கும். 

வைப்பாளருக்கு முகவர் வங்கியில் கணக்கு இல்லாதிருப்பின், முகவர் வங்கியை அத்தகைய கணக்கிற்கு நேரடியாக நிதிகளை வரவு வைப்பதற்கு இயலச்செய்யும் வகையில், வைப்பாளரின் சார்பில் கணக்கொன்றை திறப்பதற்கு விசேட அற்றோனி தத்துவம் வழங்கப்பட வேண்டும். 

ஒன்றில் தனிநபர் அல்லது கூட்டு வைப்பாளரின் பெயரில் பேணப்படும் கணக்கொன்றுக்கு மாத்திரம் இழப்பீட்டு கொடுப்பனவு வரவு வைக்கப்படுகின்றது. 

24. தெளிவற்ற/கையால் எழுதப்பட்டஃகுறிக்கப்பட்ட/முத்திரையிடப்பட்ட சான்றிதழ்களின் விடயத்தில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை யாது? 

வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானத் திணைக்களத்தினால்/முகவர் வங்கியினால் தொடர்புடைய தோல்வியுற்ற உறுப்பு நிறுவனங்களிடமிருந்து இழப்பீடுகள் பெற்றுக்கொள்ளப்படும்.

25. மரணமடைந்த வைப்பாளர்களுக்கு இழப்பீடு எவ்வாறு கோரப்படலாம்?

மரணச்சான்றிதழ் மற்றும் அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் சமர்ப்பித்ததன் பின்னர் பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

அ.கணக்கு உடமையாளரொருவர் மரணமடைந்தவிடத்து கூட்டு வைப்பாளர்கள்

ஒவ்வொரு கூட்டு வைப்பாளரும் இழப்பீட்டு கொடுப்பனவாக உயர்ந்தபட்சம் ரூ.1,100,00 பெற்றுக்கொள்வதற்கு உரித்துடையவராவர். எனினும், மரணமடைந்த வைப்பாளரின் விடயத்தில், மரணமடைந்த வைப்பாளரின் சார்பில் எஞ்சியுள்ள கூட்டு உடமையாளருக்கு/உடமையாளர்களுக்கு மரணமடைந்த வைப்பாளரின் இழப்பீட்டு கொடுப்பனவின் பகுதி வழங்கப்படும். இதற்கமைய, கூட்டு உடமையாளர்/உடமையாளர்கள் தமக்கு மற்றும் மரணமடைந்த வைப்பாளரின் சார்பாக செலுத்தப்பட்ட கொடுப்பனவு இரண்டையும் பெற்றுக்கொள்வார்/பெற்றுக்கொள்வார்கள்.

ஆ.உறுப்பு நிறுவனங்களில் பேணப்படும் அனைத்து கணக்குகளுக்கும் பரிந்துரையாளர்/பரிந்துரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள மரணமடைந்த வைப்பாளர்கள்

மரணமடைந்த வைப்பாளரின் பரிந்துரைக்கப்பட்டவருக்குஃபரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு கொடுப்பனவு வழங்கப்படும்.

இ.வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட வைப்பாளர் பட்டியலுக்கமைவாக பரிந்துரைக்கப்பட்டவர்கள் நியமிக்கப்படாத மரணமடைந்த வைப்பாளர்கள்

முகவர் வங்கி/வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானத் திணைக்களம் கட்டளைக்கமைவாக பரிந்துரைக்கப்பட்டவர்களை சரிபார்ப்பதற்கு தொடர்புடைய உறுப்பு நிறுவனங்களிடமிருந்து இழப்பீடொன்றைப் பெற்றுக்கொள்வர்.

ஈ.பரிந்துரைக்கப்பட்டவர் நியமிக்கப்படாத நிலையில் மரணமடைந்த வைப்பாளர்கள்   இருப்பினும் ஏற்றுக்கொள்ளத்தக்க இறுதி உயில் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது. 

முகவர் வங்கி/இலங்கை மத்திய வங்கியின் சட்ட அலுவலர்களிடமிருந்து சட்ட அனுமதியைப் பெற்றபிறகு, சட்ட நன்மைப்பெறுநர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

உ.பரிந்துரைக்கப்பட்டவர்கள் இல்லாத மற்றும் இறுதி உயில் கிடைக்கப்பெறாத மரணமடைந்த வைப்பாளர்கள்

பொதுச் சட்டம் மற்றும் வங்கித்தொழில் நடைமுறைகளிற்கமைவாக, சட்ட நன்மைப்பெறுநர்/நன்மைப்பெறுநர்களிலிருந்து தேவையான இழப்பீடுகள் முகவர் வங்கி/இலங்கை மத்திய வங்கியின் சட்டத் திணைக்களங்களிலிருந்து வேண்டப்படும் சட்ட ஆலோசனைகளைப் பெற்றபிறகு இழப்பீடு வழங்கப்படுகின்றது.

ஊ.மரணமடைந்த வைப்பாளரின் வெவ்வேறு வைப்புக்களுக்கு வேறுபட்ட பரிந்துரைக்கப்பட்டவர்கள் அத்துடன்/அல்லது கூட்டு உடமையாளர்கள்

முகவர் வங்கி/வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானத் திணைக்களம் தொடர்புடைய தோல்வியுற்ற உறுப்பு நிறுவனங்களிடமிருந்து இழப்பீடுகளைப் பெற்று, தேவை ஏற்படின், சட்ட ஆலோசனையைப் பெறும். 

26. பரிந்துரைக்கப்பட்டவர்களின் விபரங்கள் எவ்வாறு பெறப்படும்?

வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானத் திணைக்களத்தினால்/முகவர் வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட உறுதிப்படுத்தல் தொடர்புடைய தோல்வியுற்ற உறுப்பு நிறுவனத்திடமிருந்து இழப்பீடு படிவத்தினூடாக பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

27. ரூ.1,100,000 கொண்ட ஏற்புடைய வரையறை வரை இழப்பீடு செலுத்தப்பட்ட பிறகு, வைப்புத்தொகையின் எஞ்சியுள்ள நிலுவையை எவ்வாறு பெற்றுக்கொள்வது?

தோல்வியுற்ற உறுப்பு நிறுவனத்தின் திரவப்படுத்தல் செயன்முறையின் போது நிலுவைத் தொகையை தீர்த்துக்கட்டுனரிமிருந்து கோரலாம்.

 

தனிப்பட்ட அடையாள இலக்கங்களின் கட்டாயப் பதிவு

28. உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள் (இதனகத்துப் பின்னர் உரிமம்பெற்ற வங்கிகள் எனக் குறிப்பீடு செய்யப்படும்) அத்துடன் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் ஆகியவற்றினால் தனிப்பட்ட அடையாள இலக்கத்தைப் பதிவுசெய்வதற்கு ஏற்புடைய பணிப்புரைகள் யாவை?

உரிமம்பெற்ற வங்கிகளுக்கு - ‘உரிமம்பெற்ற வங்கியினால் தனிப்பட்ட அடையாள இலக்கங்களை கட்டாயமாகப் பதிவுசெய்தல்’ தொடர்பாக 2022ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டப் பணிப்புரைகள்.

உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளுக்கு – வைப்பாளர்களின் தனிப்பட்ட அடையாள இலக்கங்களைப் பதிவுசெய்தல்’ தொடர்பாக 2022ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க நிதித் தொழில் சட்டப் பணிப்புரை.

29. உரிமம்பெற்ற வங்கிகளினாலும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளினாலும் தனிப்பட்ட அடையாள இலக்கத்தை கட்டாயமாகப் பதிவுசெய்தலின் பிரதான நோக்கங்கள் யாவை? 

உரிமம்பெற்ற வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் தகவல் முகாமைத்துவச் செயன்முறையின் உறுதியையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துவதற்கும் இழப்பீட்டுச் செயன்முறையின் வினைத்திறனை முன்னேற்றுவதற்கு இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தினால் வைப்பாளர் தகவலைத் தொகுப்பதற்கு வசதிப்படுத்துவதற்கும் இலங்கை மத்திய வங்கி எதிர்பார்க்கின்றது.

30. பராயமடையாதவர்களுக்கு கணக்குகளைத் திறக்கும்போது பயன்படுத்தப்பட வேண்டிய தனிப்பட்ட அடையாள இலக்கம் யாது?

கீழே விளக்கபட்டதற்கமைவாக, 12 இலக்க எண்ணை உருவாக்குவதற்கு அதே துறையில் பிறந்த திகதியைத் தொடர்ந்து பிறப்புச் சான்றிதழ் இலக்கத்தைப் பயன்படுத்த வேண்டும். 

உதாரணம்: பிறந்த திகதி: 2005 சனவரி 7 (2005.01.07) மற்றும் பிறப்புச் சான்றிதழ் இலக்கம்: 0325

2 0 0 5 0 1 0 7 0 3 2 5

 

31. பிறப்புச் சான்றிதழ் எண்ணில் 5 இலக்கங்களை உள்ளடக்கியிருக்கின்ற விதிவிலக்கான சூழ்நிலையில் பராயமடையாதவர்களின் தனிப்பட்ட அடையாள இலக்கத்தை எவ்வாறு பதிவுசெய்வது?

அடிக்கடி கேட்கப்படும் கேள்வி 29இல் விளக்கப்பட்டுள்ளதைப் போலவே, 13இலக்க எண்ணை உருவாக்குவதற்கு அதே துறையில் பிறந்த திகதியைத் தொடர்ந்து, பிறப்புச் சான்றிதழ் இலக்கத்தைப் பயன்படுத்த வேண்டும்.

32. பராயமடையாதவரின் தேசிய அடையாள அட்டை எண் இருக்குமாயின், தனிப்பட்ட அடையாள இலக்கமாகப் பதிவுசெய்ய முடியுமா?

மேலே அடிக்கடி கேட்கப்படும் கேள்வி 1இல் குறிப்பிடப்பட்டுள்ள பணிப்புரைகளின் நோக்கத்திற்கு இலங்கைப் பிரசைக்கான முதன்மை அடையாள இலக்கமானது தேசிய அடையாள அட்டையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, பராயமடையாவதவர்கள் பராயமடையாதற்கு முன்னர் தேசிய அடையாள அட்டையைப் பெற்றிருந்தால், மேலேயுள்ள அடிக்கடி கேட்கப்படும் கேள்வி 29இல் விளக்கப்பட்டதன்படி, பிறந்தத் திகதியைத் தொடர்ந்து பிறப்புச் சான்றிதழ் இலக்கத்தைப் பதிவுசெய்வதற்கு பதிலாக, பராயமடையாதவரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் தனிப்பட்ட அடையாள இலக்கமாகப் பதிவுசெய்யலாம்.

எனினும், இதேபோன்ற சந்தர்ப்பங்களில், உரிமம்பெற்ற வங்கிகளும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளும்; அவ்வைப்பாளர்களை வேறுபட்ட தனிப்பட்ட அடையாள இலக்கங்களின் கீழ் அவர்களின் முக்கிய வங்கித்தொழில் முறைமைகளில் பிரதியெடுக்காமல் அவரது தேசிய அடையாள அட்டையன் கீழ் தொடர்புடைய வைப்பாளரின் அனைத்து ஏற்கனவேயுள்ள பராயமடையாதவர்களின் கணக்குகளைப் பதிவுசெய்தல் வேண்டும்.

33. பராயமடையாதவர்களின் வகையின் கீழ் ‘பௌத்த சமனெர’ கணக்கைத் திறக்கும்போது பயன்படுத்த வேண்டிய தனிப்பட்ட அடையாள இலக்கம் என்ன? 

அடிக்கடி கேட்கப்படும் கேள்வி 29இல் குறிப்பிடப்பட்டுள்ள சிறுவர்களைப் போலவே, ஆட்பதிவுத் திணைக்களத்திடமிருந்து தேசிய அடையாள அட்டை பெறப்படும் வரை பௌத்த சமனெராவின் தனிப்பட்ட அடையாள இலக்கமாகப் பிறந்த திகதியைத் தொடர்ந்து பிறப்புச் சான்றிதழ் இலக்கத்தைப் பயன்படுத்த வேண்டும். மேலும், பௌத்த சமனெராவின் பெயர் மாற்றமானது சமனெராவின் பிறப்பின் பெயர்கள் மற்றும் தற்போதைய பெயர் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், நியமனச் சான்றிதழைப் (சமனெராச் சான்றிதழ்/உபசம்பதா சான்றிதழ்) பெறுவதன் மூலம் சரிபார்க்கப்பட வேண்டும்.   

34. வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையரின் அல்லது முதிர்ச்சியடைவதற்கு முன்னர் அத்துடன் தேசிய அடையாள அட்டையைக் கொண்டிராது வெளிநாட்டிற்கு சென்றவர்களின் தனிப்பட்ட அடையாள இலக்கம் யாது? 

நடைமுறைப் பிரச்சனைகளைக் கருத்திற்கொண்டு, அவ்வைப்பாளர்களின் தனிப்பட்ட அடையாள இலக்கமாக இலங்கை கடவுச்சீட்டு இலக்கத்தைப் பதிவுசெய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும், கடவுச்சீட்டு இலக்கம் தனிப்பட்ட அடையாளங்காட்டியாக இல்லாதிருக்குமாயின், வேறுபட்ட அடையாள இலக்கங்களின் கீழ் முக்கிய வங்கித்தொழில் முறைமையில் வைப்பாளரைப் பிரதியெடுக்கமலிருப்பதை உறுதிப்படுத்துமாறு உரிமம்பெற்ற வங்கிகளும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன. மேலும், அவ்வைப்பாளர்களை ஊக்குவித்து அவர்களின் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு தேவையான வழிமுறைகளை எடுப்பதற்கும் அத்துடன் எதிர்கால திகதியில் வங்கி முறைமையில் அதை இற்றைப்படுத்துவதற்கும் உரிமம்பெற்ற வங்கிகளும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

35. இலங்கையில் அல்லது வெளியில் வசிக்கும் அத்துடன் தேசிய அடையாள அட்டையை கொண்டிராத இரட்டைக் குடியுரிமையுடையவர்களின் தனிப்பட்ட அடையாள இலக்கம் யாது?

நடைமுறைப் பிரச்சனைகளைக் கருத்திற்கொண்டு, அவ்வைப்பாளர்களின் தனிப்பட்ட அடையாள இலக்கமாக வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கத்தைப் பதிவுசெய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும், கடவுச்சீட்டு இலக்கம் தனிப்பட்ட அடையாளங்காட்டியாக இல்லாதிருக்குமாயின், வேறுபட்ட அடையாள இலக்கங்களின் கீழ் முக்கிய வங்கித்தொழில் முறைமையில் வைப்பாளரைப் பிரதியெடுக்கமலிருப்பதை உறுதிப்படுத்துமாறு உரிமம்பெற்ற வங்கிகளும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன. மேலும், அவ்வைப்பாளர்களை ஊக்குவித்து அவர்களின் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு தேவையான வழிமுறைகளை எடுப்பதற்கும் அத்துடன் எதிர்கால திகதியில் வங்கி முறைமையில் அதை இற்றைப்படுத்துவதற்கும் உரிமம்பெற்ற வங்கிகளும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

36. பாராளுமன்றச் சட்டமொன்றினால் இணைக்கப்பட்ட நிறுவனமொன்றின் தனிப்பட்ட அடையாள இலக்கம் யாது?

உரிமம்பெற்ற வங்கிகளும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளும் தொடக்கச் சட்ட இலக்கத்தைத் தொடர்ந்து தனிப்பட்ட அடையாள இலக்கமாக ஒருங்கிணைக்கப்பட்ட ஆண்டைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. 

உதாரணம்: 2023ஆம் ஆண்டின் 35ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனம். 

நிறுவனத்தின் தனிப்பட்ட அடையாளம் இலக்கம் “352023” ஆக இருக்க வேண்டும். 

37. பன்னாட்டு கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் முறைமையிலிருந்து உரிமம்பெற்ற வங்கிகள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட அடையாள இலக்கத்தை தனிப்பட்ட அடையாள இலக்கமாகப் பயன்படுத்த முடியுமா?

தற்போதுள்ள பல்வேறு தரவு இடைவெளிகளை நிரப்புவதை இலக்காகக்கொண்டு, எல்லைக் கடந்த கொடுக்கல்வாங்கல்கள் மற்றும் உள்நாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்கள் பற்றிய அனைத்தையுமுள்ளடக்கிய தரவுச் சேகரிப்பு முறைமையை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டு, உரிமம்பெற்ற வங்கிகளின் பங்குபற்றலுடன் பன்னாட்டு கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் முறைமை எனப்படும் தரவுச் சேகரிப்பு முறைமையொன்றை இலங்கை மத்திய வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது. பன்னாட்டு கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் முறைமையின் பாகமொன்றாக, இம்முறைமையில் ஈடுபட்டுள்ள பதிவுசெய்யப்படாத நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியிடமிருந்து தனிப்பட்ட அடையாள இலக்கங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன. இதன்விளைவாக, பன்னாட்டு கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் முறைமையின் கீழ் வழங்கப்பட்ட அடையாள இலக்கங்கள் அக்குறிப்பிட்ட நிறுவனத்திற்கான தனிப்பட்ட அடையாள இலக்கமாக பதிவுசெய்யப்படுவதற்கு அனுமதிக்கப்படுகின்றன.

38. சங்கங்கள், அமைப்புக்கள், க்ளப்கள் மற்றும் அலகுகள் போன்ற மேலே பணிப்புரைகளில் குறிப்பிட்ட ஏனைய நிறுவனங்களுக்கு பதிவு வழங்குவதற்கான எடுத்துக்காட்டுகள் யாவை?

சங்கங்கள் 

1891ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க சமூக கட்டளைச் சட்டத்திற்கமைவாக, கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் மற்றும் அதைத்தொடர்ந்து திருத்தங்கள்

உள்ளூராட்சி மன்றங்கள் 

அமைப்புக்கள்

கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் - 2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் 34ஆம் பிரிவின் கீழுள்ள அமைப்புக்கள்: வர்த்தகம், கலை, அறிவியல், சமயம், தொண்டு, விளையாட்டு, அல்லது வேறு ஏதேனும் பயனுள்ள பொருளை மேம்படுத்துவதற்காக அமைப்பொன்று உருவாக்கப்பட்டு அதன் இலாபங்களை ஏதேனுமிருப்பின், அல்லது அதன் பொருட்களை ஊக்குவிப்பதிலுள்ள ஏனைய வருமானத்தைப் பயன்படுத்துவதற்கு விரும்புகின்றதுடன் அதன் உறுப்பினர்களுக்கு எந்தவொரு பங்குலாபக் கொடுப்பனவைச் செலுத்துவதைத் தடைசெய்கின்றதென கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் திருப்தியடைகின்றவிடத்து, அமைப்பானது உத்தரவாதத்தினால் வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றாக பதிவுசெய்யப்படலாம்.

களரிகள்

உள்ளூராட்சி மன்றங்கள் - 1975ஆம் ஆண்டு 17ஆம் இலக்க க்ளப் சட்டத்தின் உரிமத்திற்கமைவாக அத்துடன் அதைத்தொடர்ந்து அதனுடனான திருத்தங்கள், உள்நாட்டு அதிகாரி சபையின் பிரதேசத்தில் அமைந்துள்ள க்ளப்கள் உள்நாட்டு அதிகார சபையுடன் பதிவுசெய்யப்பட வேண்டும்.

நம்பிக்கை

சமூக சேவைகள் திணைக்களம்:  தன்னார்வமாகப் பதிவுசெய்யப்பட்ட முதியோர் இல்லங்கள்/நம்பிக்கைகள்

அரச- சார்பற்ற நிறுவனங்களின் தேசிய செயலகம் - அரச சார்பற்ற நிறுவனங்களுடன் தொடர்புடையது.

கம்பனிகள் பதிவாளர்: உதாரணம். கூறு நம்பிக்கைகள்

பாராளுமன்றச் சட்டங்களின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட நம்பிக்கை: தொடக்கச் சட்ட எண்ணைத் தொடர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஆண்டை அடையாள இலக்கமாகப் பயன்படுத்தப்படலாம்.

 

தீர்மானம்

1. நிதியியல் நிறுவனமொன்றில் தீர்மானம் எனப்படுவது யாது?

தீர்மானமென்பது நிறுவனமொன்றின் முக்கிய தொழிற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளுதல், நிதியியல் உறுதிப்பாட்டை பாதுகாத்தல் அத்துடன் வரிசெலுத்துநர்களுக்கு குறைந்தபட்ச செலவினை உறுதிப்படுத்தல்; உட்பட பொதுமக்களை பாதுகாக்கும் நோக்குடன் மத்திய வங்கி மூலம் அதன் தீர்மான அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக நிதியியல் நிறுவனமொன்றை மீளக் கட்டமைத்தல் ஆகும்.

2. தீர்மானத்தின் குறிக்கோள்கள் யாவை?

நிதியியல் நிறுவனத்தின் தீர்மானம் பின்வருவனவற்றை உறுதிப்படுத்துமாறு வேண்டப்படுகின்றது:

கொடுப்பனவு, கொடுத்துத் தீர்த்தல் முறைமைகள் உட்பட நிதியியல் முறைமையின் உறுதிப்பாடு;

அத்தகைய நிதியியல் நிறுவனத்தின் தொடர்ச்சியான முக்கிய தொழிற்பாடுகள்;

பொதுமக்களின் நிதியியல் ஆதரவை குறைப்பதன் மூலம் பொதுமக்கள் நிதியங்களை பாதுகாத்தல்;

அத்தகைய நிதியியல் நிறுவனங்களின் வைப்பாளர்களை பாதுகாத்தல்; அத்துடன்

சொத்துக்களின் பெறுமதி அழிப்பை தவிர்த்தல் கடன்கொடுநர்களுக்கான இழப்புக்களை குறைத்தல் மற்றும் அத்தகைய நிதியியல் நிறுவனம் ரீதியான தீர்மானத்தின் ஒட்டுமொத்த செலவினங்களை குறைத்தல்.

3. இலங்கையில் நிதியியல் நிறுவனங்களின் தீர்மானங்கள் தொடர்பில் ஏற்புடைத்தான சட்டவாக்கங்கள் யாவை? 

இலங்கையின் நிதியியல் நிறுவனங்களின் தீர்மானங்கள் தொடர்பில் ஏற்புடைத்தான சட்டவாக்கங்கள் பின்வருமாறு:

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டம்; 

2023ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க வங்கித்தொழில் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம்; அத்துடன்

2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித் தொழில் சட்டம். 

4. இலங்கையில் நிதியியல் நிறுவனங்கள் தொடர்பான தீர்மானத்திற்கு பொறுப்பாகவிருப்பவர் யார்? அத்துடன் மேலே குறிப்பிட்ட சட்டவாக்கங்களால் உள்ளக்கப்படும் நிதியியல் நிறுவனங்கள் யாவை?

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்திற்கமைவாக, இலங்கை மத்திய வங்கியானது நிதியியல் நிறுவனங்கள் தொடர்பான தீர்மானத்திற்கு பொறுப்பாகவுள்ள அதிகாரியாக இருக்கின்ற அதேவேளை வங்கித்தொழில் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமானது உரிமம்பெற்ற வங்கிகளையும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளையும் தீர்ப்பதற்கு இலங்கை மத்திய வங்கியை வலுப்படுத்துகின்றது.

இலங்கை மத்திய வங்கியின் வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானங்கள்  திணைக்களமானது தீர்மானம் பற்றிய அதிகாரசபையுடன் தொடர்புபட்ட இலங்கை மத்திய வங்கியின் தத்துவங்கள், கடமைகள் மற்றும் தொழிற்பாடுகள் ஆகியவற்றை முறையான மற்றும் காத்திரமான விதத்தில் நடைமுறைப்படுத்தல், செயலாற்றுதல் மற்றும் நிறைவேற்றுவதற்காக வங்கித்தொழில் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டது. இதற்கமைய,  உரிமம்பெற்ற வங்கிகள் தொடர்பிலான தீர்மானங்கள் மற்றும் முடிவுறுத்தும் அதிகாரம் இலங்கை மத்திய வங்கியின் வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானங்கள் திணைக்களத்தின் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நிதித் தொழில் சட்டத்திற்கான முன்மொழியப்பட்ட திருத்தங்கள் சட்ட மூலமாக்கப்படும் வரை வங்கித்தொழில் அல்லாத நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்தின் பணிப்பாளர் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் தீர்மானங்கள் மற்றும் முடிவுறுத்தலை தொடர்ச்சியாகக் கையாளுவார். இத்தகைய திருத்தங்களானது உரிமம்பெற்ற நிதிக்கம்பனிகளுக்கான தீர்மான உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதையும்  அதையொற்றவற்றிற்கு அதிகாரமளிப்பதன் மூலம் வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானங்கள் திணைக்களத்துடன் தொடர்புடைய தொழிற்பாடுகளை மாற்றுவதையும் நோக்காகக் கொண்டுள்ளன.

5. நிதியியல் நிறுவனங்களின் தீர்மானங்களில் அரசாங்கம் தலையிடுகிறதா?

ஆம். தீர்மான வழிமுறைகள் இலங்கை மத்திய வங்கி மூலம் நடைமுறைப்படுத்தப்படலாம் என்பதுடன் நிதியியல் நிறுவனமொன்றை தீர்த்து வைப்பது இலங்கை அரசாங்கமாகும். தீர்மான வழிமுறைகள் பொதுமக்கள் நிதிகளில் ஈடுபடுகின்ற போது, இலங்கை மத்திய வங்கியானது நிதிக்கு பொறுப்பாகவுள்ள அமைச்சரிடம் ஆலோசித்து தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றது. எவ்வாறாயினும், நிதியியல் நிறுவனமொன்றின் தோல்வியானது ஒட்டுமொத்த முறைமையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தாக்கத்தைச் செலுத்தலாம் என அரசாங்கம் எண்ணுகின்ற போது, அத்தகைய நிதியியல் நிறுவனத்தை தீர்ப்பதற்கான அதிகாரத்தை அரசாங்கம் கொண்டுள்ளது. அரசாங்கம் அத்தகைய உரிமமளிக்கப்பட்ட வங்கியில் மீள் மூலதனமிடலாம் அல்லது அத்தகைய உரிமம்பெற்ற வங்கியை தற்காலிக அரச சொத்துரிமைக்குள் கொண்டுவரலாம்.

6. தீர்மானங்கள் பற்றிய அதிகாரசபையுடன் தொடர்புபட்ட இலங்கை மத்திய வங்கியின் தத்துவங்கள், கடமைகள் மற்றும் தொழிற்பாடுகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தி, செயலாற்றி மற்றும் நிறைவேற்றும் போது இலங்கை மத்திய வங்கி கருத்திற்கொள்ள வேண்டிய காரணிகள் யாவை? 

இலங்கை மத்திய வங்கியானது கட்டமைப்பு,  அளவு,  சிக்கல்வாய்ந்ததன்மை,  ஏனைய நிறுவனங்களுடனான இடைத்தொடர்புத்தன்மை மற்றும் தீர்மானங்களிற்குட்பட்டு நிதியியல் நிறுவனங்களின் இடர்நேர்வுத் தோற்றப்பாடு என்பவற்றைக் கருத்திற்கொள்ளுதல் வேண்டும்.

7. மேற்பார்வைக்கும் தீர்மானத்திற்குமிடையிலான வேறுபாடு என்ன? 

மேற்பார்வையென்பது நிதியியல் உறுதிப்பாடற்ற தன்மையை தடுத்தல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் முனைப்புமிக்கதும் தொடர்ச்சியானதுமான செயன்முறையாக காணப்படுகின்ற அதேவேளை, தீர்மானங்கள் என்பது தடுப்பு வழிமுறைகள் போதியளவற்றுக் காணப்படுகின்ற போது நிதியியல் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு வடிவமைக்கப்பட்ட எதிர்வினையானதும் முக்கிய முகாமைத்துவ செயன்முறையாகும். இரு செயன்முறைகளும் நிதியியல் ஒழுங்குமுறைப்படுத்தலுக்கு அவசியாமான கூறுகளாகவிருப்பதுடன் ஒட்டுமொத்த நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்கும் பங்களிப்புச் செய்கின்றன.

8. மீட்புத் திட்டம் என்றால் என்ன?

மீட்புத் திட்டம் என்பது ஒரு நிதியியல் நிறுவனம் மீதான தீர்மான நடவடிக்கையை இலங்கை மத்திய வங்கி மேற்கொள்வதற்கு முன்னர் அதன் நிதியியல் நிலைமை சீர்குலைகின்ற சந்தர்ப்பத்தில் அத்தகைய நிதியியல் நிறுவனமொன்றால் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகளை வழங்குகின்ற திட்டமெனப் பொருள்படும். 

9. மீட்புத் திட்டங்களை தயாரிப்பதற்கு பொறுப்பாகவிருப்பது யார்?

ஒவ்வொரு நிதியியல் நிறுவனமும் அதன் இடர்நேர்வு முகாமைத்துவச் செயன்முறையின் ஒரு பகுதியாக மீட்புத் திட்டமொன்றைத் தயாரித்தல் வேண்டும். இத்திட்டமானது அதன் நிதியியல் நிலைமை சீர்குலைகின்ற சந்தர்ப்பத்தில் அத்தகைய நிதியியல் நிறுவனமொன்றால் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகளை வழங்குகின்றது.

10. தீர்மானத் திட்டம் எனப்படுவது யாது?

தீர்மானத் திட்டம் என்பது நிதியியல் நிறுவனமொன்றின் தீர்மானத்திற்கு கிடைப்பனவாகவுள்ள பன்னாட்டு நியமங்கள் மற்றும் சிறந்த நடத்தைகளுக்கமைவாக ஒட்டுமொத்த முறைமையிலும் முக்கியத்துவம் வாய்ந்தும் தாக்கத்தைச் செலுத்துகின்ற நிதியியல் நிறுவனமொன்றிற்கு வடிவமைக்கப்பட்ட திட்டம் என பொருள்படும்.

11. தீர்மானத் திட்டங்களை தயாரிப்பதற்குப் பொறுப்பாகவிருப்பவர் யார்?

இலங்கை மத்திய வங்கி தீர்மானத் திட்டங்களை உருவாக்குவதற்கு பொறுப்பாகவுள்ளது. எவ்வாறாயினும், இது மீட்புத் திட்டத்துடன் இணங்கி பின்பற்றப்படும் ஒரு செயன்முறையாகும். 

12. எத்தகைய சூழ்நிலைகளில் இலங்கை மத்திய வங்கி வங்கித்தொழில் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் நிதியியல் நிறுவனமொன்றிற்கான தீர்மானங்கள் செயன்முறையை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கலாம்?

உரிமம்பெற்ற வங்கியொன்று அல்லது உரிமம்பெற்ற நிதிக் கம்பனியொன்று பின்வரும் சூழ்நிலைகளின் கீழ் ஆற்றல்வாய்ந்ததாகலாம், அல்லது வாய்ப்புள்ளது, இனி சாத்தியமில்லை அத்துடன் ஆற்றல்வாய்ந்ததாக மாறுவதற்கு வாய்ப்புகள் இல்லை என திருப்திபடுகின்ற சூழ்நிலையில் இலங்கை மத்திய வங்கி இச்சட்டத்தின் கீழ் நிதியியல் நிறுவனத்தின் தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கலாம்: 

நிதியியல் நிறுவனமொன்றிற்கு வழங்கப்பட்ட உரிமத்தை இரத்துச் செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியை நிர்பந்திக்கும் விதத்தில் அத்தகைய நிதியியல் நிறுவனமொன்று தோல்வியடைந்துள்ளது, அல்லது வங்கித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகள், அல்லது ஏதேனும் ஒழுங்குவிதி, பணிப்புரை, தீர்மானம், கட்டளை அல்லது ஒழுங்குமுறைப்படுத்தல், அதன்கீழ் விடுக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட மூலதன மற்றும் திரவத்தன்மைத் தேவைப்பாடுகள் உட்பட்ட ஏதேனும் தேவைப்பாடுகள் என்பவற்றுடன் இணங்கியொழுகத் தவற வாய்ப்புள்ளது, என இலங்கை மத்திய வங்கி கருதுமிடத்து.

நிதியியல் நிறுவனமொன்று கடன் தீராற்றலற்று காணப்படுகின்றது அல்லது கடன்தீராற்றலற்றதாக வாய்ப்புள்ளது என இலங்கை மத்திய வங்கி கருதுமிடத்து.

நிதியியல் நிறுவனமொன்று அதன் வைப்பாளர்களுக்கு அல்லது ஏனைய கடன்கொடுத்தோருக்கான கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு இயலாமலிருக்கின்றவிடத்து அல்லது நிதியியல் நிறுவனமொன்று அதன் வைப்பாளர்களுக்கு அல்லது ஏனைய கடன்கொடுத்தோருக்கான கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு இயலாமலிருக்கின்றதென இலங்கை மத்திய வங்கி கருதுமிடத்து.

13. வங்கித்தொழில் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியில் கிடைப்பனவாகவுள்ள முக்கிய தீர்மானத் தத்துவங்கள் யாவை?

நிதியியல் நிறுவனமொன்றை தீர்ப்பதற்கான தீர்மான நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக இலங்கை மத்திய வங்கி முக்கிய தீர்மான நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது:

தீர்மானத்தின் கீழ் நிதியியல் நிறுவனமொன்றை நிருவகிப்பவரை நியமித்தல்;

அத்தகைய நிதியியல் நிறுவனத்தின் பங்குகளின் மாற்றல்செய்தலை நடைமுறைப்படுத்தல்;

அத்தகைய நிதியியல் நிறுவனத்தின் அனைத்து அல்லது ஏதேனும் தெரிவுசெய்யப்பட்ட சொத்துக்களையும் பொறுப்புக்களையும் மாற்றல்செய்தல்;

ஏற்கனவேயுள்ள பங்குதாரர்களையும் புதிய பங்குதாரர்களையும் கொண்டு மூலதன அதிகரிப்பொன்றை உருவாக்குதல்;

தொடர்பை ஏற்படுத்துகின்ற வங்கியொன்றை தாபிப்பதற்கு மூலதனத்தை வழங்குமாறு அமைச்சரைக் கோருதல்; அத்துடன்

இலங்கை மத்திய வங்கியால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள் நடைமுறைக்கு வருவதை அடிப்படையாகக்கொண்டு அத்தகைய நிதியியல் நிறுனத்தின் தீர்மானமெடுத்தலுக்கான தற்போதைய நிதியியல் ஆதரவை வழங்குமாறு அமைச்சரைக் கோருதல்.

இதற்கு மேலதிகமாக, நிதியியல் நிறுவனமொன்றின் தோல்வியானது ஒட்டுமொத்த நிதியியல் முறைமையின் முக்கியத்துவத்தை அல்லது தாக்கத்தை ஏற்படுத்தலாமென இலங்கை அரசாங்கம் கருதுமாயின் வங்கித்தொழில் சிறப்பு ஏற்பாட்டு சட்டத்திற்கமைவாக அரசாங்கம் அத்தகைய நிதியியல் நிறுவனத்திற்கான மூலதனத்தை உட்புகுத்தலாம் அல்லது அத்தகைய நிதியியல் நிறுவனத்தை தற்கால அரச சொத்துரிமையாக கையகப்படுத்தலாம்.

14. நிதியியல் நிறுவனமொன்றின் தீர்மானம் தேவைப்படுமிடத்து எவ்வாறு நிதியீட்டம் செய்யப்படும்?

நிதியியல் நிறுவனமொன்றின் தீர்மானம் பிரதானமாக இரண்டு மூலங்களால் நிதியீட்டப்படலாம்:

கடுமையான நிபந்தனைகளுக்குட்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட நோக்கங்களுக்கான வைப்புக்காப்புறுதி நிதியம்; அத்துடன்

தீர்மான குறிக்கோள்களை அடைவதற்கும் தீர்மான வழிமுறைகளை காத்திரமான விதத்தில் நடைமுறைப்படுத்துவதனை உறுதிசெய்வதற்குமான நிதியியல் உறுதிப்பாட்டு நிதியம்.

15. நிதியியல் உறுதிப்பாட்டு நிதியம் எவ்வாறு தாபிக்கப்படவேண்டும்?

நிதியியல் உறுதிப்பாட்டு நிதியமானது பின்வருவன உள்ளடங்கலாக பல்வேறு நிதியியல் மூலங்ளை கொண்டு தாபிக்கப்படவேண்டும்:

அரசாங்கத்திடமிருந்தான வரவு செலவு ஒதுக்கீடுகள், 

அரசாங்கத்திடமிருந்தான பங்களிப்புக்கள், 

பன்னாட்டு நிதியில் நிறுவனங்களிடமிருந்தான கொடைகள் மற்றும் கடன்கள், 

முதலீட்டு வருமானம், 

நிதியியல் நிறுவனங்களிலிடமிருந்தான இலாபங்கள், 

இலங்கை மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்பட்டவாறு நிதியியல் நிறுவனங்களிலிருந்தான பங்களிப்புக்கள், அத்துடன்

அமைச்சர் மூலம் ஏனைய ஒப்புதலளிக்கப்பட்ட மூலங்களிலிருந்தான வருமானம். 

இதற்கமைவாக, நிதியியல் உறுதிப்பாட்டு நிதியத்திற்கான முதன்மை நிதியீட்டல் மூலம் அரசாங்கத்தினால் வழங்கப்படக்கூடும். 

16. நிதியியல் உறுதிப்பாட்டு நிதியத்தின் நிதிகளை எத்தகைய நோக்கங்களுக்காக பயன்படுத்தலாம்?

நிதியியயல் உறுதிப்பாட்டு நிதியத்தினை பயன்படுத்தலானது முறையே இணைப்பு வங்கியொன்றை தாபித்தல், அரசாங்கத்தின் மூலம் தற்காலிக நிதியியல் உதவியை வழங்குதல் அத்துடன் ஒட்டுமொத்த முறைமையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அல்லது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்ற நிதியியல் நிறுவனங்களுக்கு மூலதனமிடுதல் போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காக குறித்துரைக்கப்படுகின்றது.

17.  இணைக்கும் வங்கி என்றால் என்ன?

இணைக்கும் வங்கி என்பது தீர்மானத்திற்கு உட்பட்டு நிதியியல் நிறுவனமொன்றின் சில முக்கிய தொழிற்பாடுகளை ஆற்றல்வாய்ந்த தொழிற்பாடுகளை தொடர்ச்சியாக பொறுப்பேற்பதற்ககும் தீர்மானத்திற்கு உட்பட்டு நிதியியல் நிறுவனமொன்றால் உரிமையளிக்கப்பட்டு வழங்கப்படும் பங்குகள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சொத்துக்கள், பொறுப்புக்கள், சட்ட உரிமைகள் மற்றும் கடப்பாடுகள் அல்லது வேறு சொத்து ஆதனங்கள் என்பவற்றை மாற்றுவதற்கும் இலங்கை மத்திய வங்கியால் தாபிக்கப்பட்ட நிறுவனமொன்றாகும். இது, ஒட்டுமொத்த முறைமைக்கும் முக்கியத்துவமளிக்கும் அல்லது தாக்கம் செலுத்தும் என்ற கருத்தை இலங்கை மத்திய வங்கி கொண்டுள்ளது.