பிரதேச அலுவலகம் - மாத்தளை

இலங்கை மத்திய வங்கியின் மாத்தளை மாவட்ட பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "வீடுகளில் உணவுப்பயிர் வளர்த்தல்" பற்றிய தொழில்நுட்ப அறிவு வழங்கும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் 2018 யூன் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் இலங்கை மத்திய வங்கியின் மாத்தளை பிரதேச அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் பிராந்தியத்திலுள்ள 53 குறைந்த வருமானம் உழைப்போர் பங்கேற்றனர்.

இலங்கை மத்திய வங்கியின் மாத்தளை மாவட்ட பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "சந்தைப்படுத்தல்" பற்றிய திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் 2018 யூன் 20ஆம் நாளன்று மாத்தளை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 20 நுண் மற்றும் சிறிய தொழில்முயற்சியாளர்கள் பங்கேற்றனர்.

 

இலங்கை மத்திய வங்கியின் மாத்தளை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முறைசார்ந்த நிதி நிறுவனங்கள் மற்றும் வசதியான நிதிச் சேவைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஹத்தரலியத்த பிரதேச செயலகத்தில் 2018 யூன் 29ஆம் வெற்றிகரமாக இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் 107 சமூர்த்தி பயணாளிகள் பங்கேற்றனர்.

 

 

குருணாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலுள்ள வேளாண்மைத் துறைக்கு இணைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட அரசாங்க அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் சனாதிபதி செயலகத்தின் கருத்திட்ட முகாமைத்துவப் பிரிவு என்பவற்றின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தளை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "சிறுஉடைமையாளர் வேளாண் வர்த்தகப் பங்குடமை" பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி 2018 யூன் 26ஆம் திகதியன்று மாத்தளை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றது. இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தில் 158 வங்கியாளர்களும் அரசாங்க அலுவலர்களும் பங்கேற்றனர்.

 

கண்டி, கொழும்பு சர்வதேச பாடசாலை மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தளை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூலை 02 அன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தளை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

Pages