2020 ஒத்தோபரில் இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது ஐ.அ.டொலர் 1.0 பில்லியன் கொண்ட முதிர்வடைந்த நாட்டிற்கான பன்னாட்டு முறியினை வெற்றிகரமாக மீளச்செலுத்தியதன் மூலம் அதன் தாக்குப்பிடிக்கும் தன்மையினை எடுத்துக்காட்டியது. வர்த்தகப் பற்றாக்குறையில் தொடர்ச்சியான மேம்படுத்தல், தொழிலாளர் பணவனுப்பல்களில் அதிகரிப்பு, உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் ஏற்பட்ட உறுதிப்பாடு என்பன மாத காலப்பகுதியில் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றத்திற்கு துணையளித்தன. குறைவான உலகளாவிய எரிபொருள் விலைகள் மற்றும் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட இறக்குமதிக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் கீழ் இறக்குமதிகள் தொடர்ந்தும் கட்டுப்பட்டிருந்த அதேவேளை, ஒத்தோபரின் ஆரம்பம் தொடக்கம் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து உள்நாட்டு உற்பத்தி மற்றும் துணைப் பணிகளுக்கான இடையூறுகளின் காரணமாகவும் வெளிநாட்டுக் கொள்வனவாளர்களிடமிருந்து கேள்வி குறைவடைந்தமை மூலமும் 2020 ஒத்தோபரில் ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்தன.
-   
          External Sector Performance - October 2020    
  
-   
          Response to the Downgrade of Sri Lanka's Rating by S&P Global Ratings    
  இலங்கையின் நாட்டிற்கான தரப்படுத்தலினை தரங்குறைத்து எஸ் அன்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ் (S&P Global Ratings) மூலம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிதியமைச்சு பதிலிறுத்தலொன்றினை வெளியிட்டுள்ளது. இதனை கீழேயுள்ள இணைய இணைப்பில் காணலாம். 
-   
          Extension of the validity period to open Special Deposit Accounts and permission to retain funds held in such accounts in Sri Lanka    
  நாட்டில் கொவிட்-19 நோய்த்தொற்றின் தாக்கங்களை வெற்றிகொள்வதற்கான தேசிய முயற்சிக்கு ஆதரவினை நாடும் பொருட்டு இலங்கை அரசாங்கமானது 2020 ஏப்பிறல் 08ஆம் திகதியன்று சிறப்பு வைப்புக் கணக்கினை அறிமுகப்படுத்தியது. அதற்கமைய, 2020 ஒத்தோபர் 07 அன்றுள்ளவாறு சிறப்பு வைப்புக் கணக்குகளிலுள்ள மொத்த வைப்புகள் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 272 மில்லியன் தொகையாகவிருந்தது. நாட்டினுள் கணிசமான வெளிநாட்டுச் செலாவணித் தொகையினை ஈர்ப்பதற்கு சிறப்பு வைப்புக் கணக்குகளின் சாத்தியத்தன்மையினையும் அதன் பயனாக நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலைமை மற்றும் ஒட்டுமொத்தப் பொருளாதாரம் மீதான சாதகமான தாக்கத்தினையும் கருத்திற்கொண்டு, இலங்கை அரசாங்கமானது இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் பரிந்துரையின் மீது சிறப்பு வைப்புக் கணக்குகளைத் திறப்பதற்கு செல்லுபடியான காலப்பகுதியினை 2021 ஏப்பிறல் 07ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது. 
-   
          CCPI based Inflation increased to 4.1 per cent in November 2020    
  கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2020 ஒத்தோபரின் 4.0 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 4.1 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலைகளின் அதிகரிப்பு மூலம் இது பிரதானமாக தூண்டப்பட்டிருந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2020 ஒத்தோபரின் 10.0 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 10.3 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது. உணவல்லா பணவீக்கமும் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 ஒத்தோபரின் 1.3 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 1.6 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது. 
-   
          Withdrawal of Appoinment of Natwealth Securities Limited as a Primary Dealer    
  நட்வெல்த் செக்குரிட்டீஸ் லிமிடெட் மூலம் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையொன்றினைப் பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது முதனிலை வணிகரொருவராகத் தொழிற்படுவதற்கு நட்வெல்த் செக்குரிட்டீஸ் லிமிடெட்டிற்கு வழங்கப்பட்ட நியமனத்தை 2020.11.30ஆம் திகதியன்று பி.ப.4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் புறக்கீடு செய்வதற்கு தீர்மானித்துள்ளது. 
-   
          Response to the Downgrade of Sri Lanka’s Rating by Fitch Ratings    
  இலங்கையின் நாட்டிற்கான தரப்படுத்தலினை தரங்குறைத்து பிட்ச் ரேட்டிங் மூலம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிதியமைச்சு பதிலிறுத்தலொன்றினை வெளியிட்டுள்ளது. இதனை கீழேயுள்ள இணைய இணைப்பில் காணலாம்: 
-   
          The Central Bank of Sri Lanka Continues its Accommodative Monetary Policy Stance    
  இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2020 நவெம்பர் 25ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. பேரண்ட பொருளாதார நிலைமைகளையும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் கவனமாக பரிசீலித்ததன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது. இதுவரையான ஆண்டு காலப்பகுதியில் ஒட்டுமொத்த சந்தை கடன்வழங்கல் வீதங்களில் வீழ்ச்சியினை அவதானித்து, சபையானது கேள்வியினால் தூண்டப்பட்ட பணவீக்க அழுத்தங்கள் இன்மையில் குறிப்பாக உள்நாட்டு பணச் சந்தையில் நிலவுகின்ற குறிப்பிடத்தக்க மிகையான திரவத்தன்மை மட்டங்களைக் கருத்திற்கொண்டு, பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலளிப்பதற்கு கடன்வழங்கல் வீதங்களில் தொடர்ச்சியான கீழ்நோக்கிய திருத்தமொன்றிற்கான தேவையினை வலியுறுத்தியது. பொருளாதார மீட்சியடைதலுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு சபையானது சம்பளம் பெறுகின்ற பணியாளர்களுக்கென ஈடு பிணையாகக் கொண்ட வீடமைப்புக் கடன்கள் மீது உயர்ந்தபட்ச வட்டி வீதங்களை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானித்த அதேவேளை அண்மைய எதிர்காலத்தில் பொருளாதாரத்தின் தெரிவுசெய்யப்பட்ட துறைகளுக்கென கடன்வழங்கல் இலக்குகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. 
-   
          Sri Lanka Purchasing Managers’ Index - October 2020    
  தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் ஒத்தோபரில் சுருக்கமடைந்தன ஒத்தோபரின் ஆரம்ப பகுதியில் நாட்டில் தோன்றிய கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் பாதகமான தாக்கங்களின் காரணமாக தயாரிப்பு நடவடிக்கைகள் 2020 ஒத்தோபரில் மந்தமான செயலாற்றத்தினை எடுத்துக்காட்டின. இதற்கமைய, தயாரிப்பு கொ.மு.சுட்டெண்ணானது குறிப்பாக அணியும் ஆடைகள், உணவு மற்றும் குடிபானத் துறைகளில் உற்பத்தி, புதிய கட்டளைகள், தொழில்நிலை மற்றும் கொள்வனவு இருப்பு துணைச் சுட்டெண்களின் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியுடன் 2020 ஒத்தோபரில் 40.3 இற்கு வீழ்ச்சியடைந்தது. 
-   
          NCPI based Inflation decreased in October 2020    
  தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 செத்தெம்பரின் 6.4 சதவீதத்திலிருந்து 2020 ஒத்தோபரில் 5.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கு, 2019 ஒத்தோபரில் நிலவிய உயர்வான தளத்திலான புள்ளிவிபரவியல் தாக்கம் காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2020 செத்தெம்பரின் 12.7 சதவீதத்திலிருந்து 2020 ஒத்தோபரில் 10.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 செத்தெம்பரின் 1.4 சதவீதத்திலிருந்து 2020 ஒத்தோபரில் 1.5 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது. 
-   
          Uninterrupted Operations of the Central Bank of Sri Lanka to Continue    
  இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் ஒருவருக்கு 2020 நவெம்பர் 19 அன்று கொவிட்-19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதனை இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவிக்கின்றது. குறித்த ஊழியர் தற்போது மருத்துவ கவனிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். 
 
            









