இலங்கை மத்திய வங்கி அதன் மூன்றாம் சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கையினை 2025 யூலை 31ஆம் திகதி வெளியிட்டது. நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த செலாவணி வீத முறையினால் ஆதரவளிக்கப்பட்டு, நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடலின் கீழ் நாணயக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் மத்திய வங்கி மேற்கொண்ட நாணய தொழிற்பாடுகளையும் செலாவணி தொழிற்பாடுகளையும் பற்றி ஆர்வலர்களுக்கிடையில் விழிப்புணர்வையும் அறிவையும் மேம்படுத்துவது சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கையின் இலக்காகும்.
-
The Central Bank of Sri Lanka publishes the ‘Market Operations Report - June 2025’
-
CCPI based deflation continued to moderate in July 2025
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்துடன் பணச்சுருக்க நிலைமைகள் 2025 யூலையில் தொடர்ச்சியாக ஐந்தாவது மாதத்திற்கும் தளர்வடைந்தது, 2025 யூனின் 0.6 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 0.3 சதவீதம் கொண்ட சிறிய முதன்மைப் பணவீக்கத்தைப் பதிவுசெய்தது
-
External Sector Performance – June 2025
வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தபோதிலும் இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது 2025 முதலரைப்பகுதியில் வலுவடைந்து நடைமுறைக் கணக்கில் மிகையொன்றினைப் பதிவுசெய்தது.
-
Sri Lanka PMI - Construction continued to expand in June 2025
கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 யூனில் 58.6 கொண்ட பெறுமதியினைப் பதிவுசெய்து, கட்டடவாக்க நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவாக்கத்தைக் காண்பித்தது. இவ்வளர்ச்சிக்கு சாதகமான தொழில்துறை நிலைமைகள் குறிப்பாக கருத்திட்டப் பணியில் வெளிக்காட்டப்பட்ட நிலையான அதிகரிப்பு மற்றும் நிலையான விலைமட்டங்கள் என்பன பல நிறுவனங்களுக்குக் காரணமாக அமைந்தது.
-
Central Bank of Sri Lanka Promotes Digital Payments in Dambulla
இலங்கை மத்திய வங்கி, அதன் 2025 ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் கொடுப்பனவு ஊக்குவிப்புப் பிரச்சாரத்தின் தொடராக 2025 ஓகத்து 1 ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 7.00 மணி வரை தம்புள்ளை பிராந்தியத்தில் தம்புள்ளை விஷேட பொருளாதார மையத்தில் டிஜிட்டல் கொடுப்பனவுகள் ஊக்குவிப்பினை முன்னெடுக்கவுள்ளது. இந்நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர். முனைவர். பி நந்தலால் வீரசிங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஏனைய அலுவலர்கள் கலந்துகொள்கிறார்கள்.
-
IMF Staff Concludes Visit to Sri Lanka
இலங்கை அதிகாரிகளினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்புக்களானவை சிறப்பாகச் செயலாற்றுகின்ற வளர்ச்சி, பணவீக்கம் இலக்கினை நோக்கி முன்னேற்றமடைதல், வெளிநாட்டு ஒதுக்குகளைத் திரட்டுதல் மற்றும் இறை வருவாய்கள் மேம்படுதல் என்பவற்றுடன் பயனளிக்கின்றன.
வர்த்தகக் கொள்கையின் நிச்சயமற்றதன்மை மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் என்பவற்றிற்கு மத்தியில் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் மீட்சியினை அடைவதற்கும் அதிர்வுகளுக்கான இலங்கையின் தாக்குப்பிடிக்கும் தன்மையைக் கட்டியெழுப்புவதற்கும் மறுசீரமைப்பு உத்வேகத்தை நிலைநாட்டுதல் இன்றியமையாததாகும்.
-
The Central Bank of Sri Lanka keeps the Overnight Policy Rate (OPR) unchanged
நாணயக் கொள்கைச் சபையானது நேற்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்தது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகள் ஆகிய இரண்டினையும் கவனமாகக் கருத்திற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடு பணவீக்கத்தை எதிர்வரும் காலத்தில் 5 சதவீதம் கொண்ட இலக்கை நோக்கி வழிநடாத்துவதில் உதவும் அதேவேளை வளர்ச்சிக்கு ஆதரவளிக்குமென சபை கருதுகின்றது.
-
Financial Intelligence Unit of Sri Lanka entered into a Memorandum of Understanding with the National Center for Financial Information in the Sultanate of Oman
இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது, லக்ஷம்பேர்க் நகரத்தில் நடைபெற்ற எக்மன்ட் குழுமத்தின் 31ஆவது முழுநிறைவுக் கூட்டத்தின் போது, 2025 யூலை 09ஆம் திகதியன்று ஓமான் சுல்தானாவின் நிதியியல் தகவலுக்கான தேசிய நிலையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை கைச்சாத்திட்டுள்ளது. 2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக பணம் தூயதாக்கல், அதனுடன் இணைந்த ஊகக் குற்றங்கள் மற்றும் பயங்கரவாதி நிதியிடல் என்பவற்றுடன் தொடர்புடைய நிதியியல் உளவறிதல்களைப் பரிமாறிக்கொள்வதற்காக இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வசதியளிக்கின்றது.
-
SL Purchasing Managers’ Index (PMI) – June 2025
கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 யூனில் தயாரிப்பு மற்றும் பணிகள் ஆகிய இரண்டு நடவடிக்கைகளிலும் மேம்பாடுகளை எடுத்துக்காட்டுகின்றன.
-
Anti-Pyramid National Awareness Week - 14th to 18th July 2025
“பெருங்கவலையின் உச்சகட்டம் சூழ்ச்சியான பிரமிட் திட்டம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம் 2025 யூலை 14 தொடக்கம் 18 வரை பிரமிட் எதிர்ப்பு தேசிய விழிப்புணர்வு வாரத்தினை தொடங்கவுள்ளது.