
இலங்கை மத்திய வங்கி, 2019 செத்தெம்பர் 26 இலிருந்து 28 வரை கொழும்பில் தென்கிழக்காசிய மத்திய வங்கிகள் - பன்னாட்டுத் தீர்ப்பனவிற்கான வங்கி உயர்மட்ட ஆய்வரங்கினையும் தென்கிழக்காசிய மத்திய வங்கிகளின் நிறைவேற்றுக் குழுவின் 18ஆவது கூட்டத்தினையும் நடாத்தியது. இந்நிகழ்வில் மத்திய வங்கியின் ஆளுநர், பதில் ஆளுநர்கள் மற்றும் தென்கிழக்காசிய மத்திய வங்கிகளின் உறுப்பினர்களாகவுள்ள மத்திய வங்கிகள் மற்றும் நாணய மேலாண்மைச் சபைகளின் பேராளர்கள் மற்றும் தனிச் சிறப்புமிக்க பேச்சாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.








