இலங்கை மத்திய வங்கி, அதன் 2025 ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் கொடுப்பனவு ஊக்குவிப்புப் பிரச்சாரத்தின் தொடராக 2025 ஓகத்து 1 ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 7.00 மணி வரை தம்புள்ளை பிராந்தியத்தில் தம்புள்ளை விஷேட பொருளாதார மையத்தில் டிஜிட்டல் கொடுப்பனவுகள் ஊக்குவிப்பினை முன்னெடுக்கவுள்ளது. இந்நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர். முனைவர். பி நந்தலால் வீரசிங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஏனைய அலுவலர்கள் கலந்துகொள்கிறார்கள்.
-
Central Bank of Sri Lanka Promotes Digital Payments in Dambulla
-
IMF Staff Concludes Visit to Sri Lanka
இலங்கை அதிகாரிகளினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்புக்களானவை சிறப்பாகச் செயலாற்றுகின்ற வளர்ச்சி, பணவீக்கம் இலக்கினை நோக்கி முன்னேற்றமடைதல், வெளிநாட்டு ஒதுக்குகளைத் திரட்டுதல் மற்றும் இறை வருவாய்கள் மேம்படுதல் என்பவற்றுடன் பயனளிக்கின்றன.
வர்த்தகக் கொள்கையின் நிச்சயமற்றதன்மை மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் என்பவற்றிற்கு மத்தியில் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் மீட்சியினை அடைவதற்கும் அதிர்வுகளுக்கான இலங்கையின் தாக்குப்பிடிக்கும் தன்மையைக் கட்டியெழுப்புவதற்கும் மறுசீரமைப்பு உத்வேகத்தை நிலைநாட்டுதல் இன்றியமையாததாகும்.
-
The Central Bank of Sri Lanka keeps the Overnight Policy Rate (OPR) unchanged
நாணயக் கொள்கைச் சபையானது நேற்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்தது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகள் ஆகிய இரண்டினையும் கவனமாகக் கருத்திற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடு பணவீக்கத்தை எதிர்வரும் காலத்தில் 5 சதவீதம் கொண்ட இலக்கை நோக்கி வழிநடாத்துவதில் உதவும் அதேவேளை வளர்ச்சிக்கு ஆதரவளிக்குமென சபை கருதுகின்றது.
-
Financial Intelligence Unit of Sri Lanka entered into a Memorandum of Understanding with the National Center for Financial Information in the Sultanate of Oman
இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது, லக்ஷம்பேர்க் நகரத்தில் நடைபெற்ற எக்மன்ட் குழுமத்தின் 31ஆவது முழுநிறைவுக் கூட்டத்தின் போது, 2025 யூலை 09ஆம் திகதியன்று ஓமான் சுல்தானாவின் நிதியியல் தகவலுக்கான தேசிய நிலையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை கைச்சாத்திட்டுள்ளது. 2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக பணம் தூயதாக்கல், அதனுடன் இணைந்த ஊகக் குற்றங்கள் மற்றும் பயங்கரவாதி நிதியிடல் என்பவற்றுடன் தொடர்புடைய நிதியியல் உளவறிதல்களைப் பரிமாறிக்கொள்வதற்காக இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வசதியளிக்கின்றது.
-
SL Purchasing Managers’ Index (PMI) – June 2025
கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 யூனில் தயாரிப்பு மற்றும் பணிகள் ஆகிய இரண்டு நடவடிக்கைகளிலும் மேம்பாடுகளை எடுத்துக்காட்டுகின்றன.
-
Anti-Pyramid National Awareness Week - 14th to 18th July 2025
“பெருங்கவலையின் உச்சகட்டம் சூழ்ச்சியான பிரமிட் திட்டம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம் 2025 யூலை 14 தொடக்கம் 18 வரை பிரமிட் எதிர்ப்பு தேசிய விழிப்புணர்வு வாரத்தினை தொடங்கவுள்ளது.
-
Extension of the Suspension of Business of Perpetual Treasuries Limited
இலங்கை மத்திய வங்கியானது, பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச்சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் என்பவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின் பிரகாரம் செயற்பட்டு, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில், 2025 யூலை 05ஆம் திகதி பி.ப 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டுநடாத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
-
Execution of Resolution Action on Nation Lanka Finance PLC [NLFP] under the Banking (Special Provisions) Act, No. 17 of 2023
2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கப்பட்ட நிதிக் கம்பனியொன்றான நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளையும் அதன் கீழ் விடுக்கப்பட்ட பல்வேறு பணிப்புரைகளையும் விதிகளையும் தொடர்ச்சியாக மீறி மறுத்து வந்திருக்கின்றது. மேலும், நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சியின் நிதியியல் நிலைமையும் போதுமானதற்ற மூலதன மட்டம், சொத்துக்களின் மோசமான தரம், தொடர்ச்சியான இழப்புக்கள் மற்றும் கோருகின்றமை அல்லது முதிர்ச்சியடைகின்றமை போன்ற சந்தர்ப்பங்களில் வைப்பாளர்களின் பணத்தினை மீளச் செலுத்தத் தவறுதல் போன்ற காரணங்களினால் திருப்திகரமானதாக காணப்படவில்லை.
-
Central Bank Launches Transformative Financial Literacy Initiatives Towards Building a Financially Literate Sri Lanka
நிதியியல் அறிவினைக் கொண்ட இலங்கை” என்ற பரந்தளவிலான தொலைநோக்கை கட்டியெழுப்புவதுடன் அணிசேர்ந்து, நிதியியல் அறிவு பற்றிய வழிகாட்டலின் கீழ் பல்வேறு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முன்முயற்சிகளை அங்குரார்ப்பணம் செய்வதன் மூலம், மத்திய வங்கி 2025 யூலை 3 அன்று அதன் நிதியியல் வசதிக்குட்படுத்தல் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைற்கல்லை அடைந்துள்ளது. ஆற்றல்வாய்ந்த நிதியியல் தீர்மானத்தை மேற்கொள்ளுதல் மற்றும் நிலைபெறத்தக்க பொருளாதார நலனோன்புகை போன்றவற்றுக்காக பொதுமக்களின் நிதியியல் நடத்தையை மாற்றும் வகையில் அறிவு, திறன்கள், மற்றும் எண்ணப்பாங்குடன் அவர்களை வலுவூட்டுவதற்கான மத்திய வங்கியின் அர்ப்பணிப்பினை இம்முன்னெடுப்புக்கள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.
-
IMF Executive Board Completes the Fourth Review Under the Extended Fund Facility with Sri Lanka
பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையானது இலங்கையுடனான 48 மாத கால விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழான நான்காவது மீளாய்வினை நிறைவுசெய்து, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் என்பவற்றிற்கு ஆதரவளிக்கும் பொருட்டு சிஎஉ 254 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 350 மில்லியன்) தொகைக்கான உடனடி அணுகலினை நாட்டிற்கு வழங்குகின்றது. இது பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் இலங்கை பெற்றுக்கொள்கின்ற ஐந்தாவது தொகுதியாக காணப்படுவதுடன், இதற்கமைய, இதுவரையான காலப்பகுதியில் பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்த பன்னாட்டு நாணய நிதிய நிதியியல் ஆதரவினை சிஎஉ 1.27 பில்லியனிற்கு (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.74 பில்லியன்) அதிகரிக்கின்றது. பன்னாட்டு நாணய நிதியமானது பின்வரும் ஊடக வெளியீட்டினை 2025 யூலை 03 அன்று வெளியிட்டதுடன், இதனைக் கீழேயுள்ள இணைப்பிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.