• 'Central Bank Comes to You…' Open Day Programme conducted by the Central Bank of Sri Lanka

    இலங்கை மத்திய வங்கி “மத்திய வங்கி உங்களிடம் வருகின்றது” என்ற தலைப்பிலான அதன் முதலாவது முழுநாள் நிகழ்ச்சித்திட்டத்தினை 805, திருகோணமலை வீதி, மண்தண்டாவல, மாத்தளை என்ற முகவரியிலுள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அலுவலகத்தில் 2017 மே 5ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்றும் 6ஆம் நாள் சனிக்கிழமையன்றும் மு.ப. 9.00 மணியிலிருந்து பி.ப. 8.00 மணிவரை நடத்தவுள்ளது. 

  • Transparency in Government Securities Market Further Improves

    இலங்கை மத்திய வங்கி 2017.04.26இல் அரச பிணையங்களின் மீள்கொள்வனவுக் கொடுக்கல்வாங்கல் வர்த்தகத்திற்கு முதனிலை வணிகர்களும் உரிமம் பெற்ற வங்கிகளும் பு;ம்பேர்க் இலத்திரனியல் முறி வர்த்தகப்படுத்தல் தளத்தினைப் பயன்படுத்த வேண்டுமென்பதனைக் கட்டாயமாக்கியிருக்கிறது. இதன்படி, அவர்கள்:

  • Amalgamation of the Operation of Regional Sub-office of the Central Bank of Sri Lanka in Jaffna with Regional Office in Kilinochchi

    யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதேச உப அலுவலகம் அதன் தொழிற்பாடுகளை 2017 யூன்15 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அறிவியல் நகர், கிளிநொச்சியில் அமைந்துளள் பிரதேச அலுவலகத்திற்கு மாற்றியுள்ளது என்பதனை பொது மக்களுக்கு இத்தால் அறிவிக்கபப் டுகிறது. இதன்படி, ஊழியர் சேம நிதியத்துடன் தொடர்பான பணிகளை வழங்குதல், இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகளுக்கான விற்பனைப் பீடத்தினை பேணுதல், நிதியியல், முகாமைத்துவ மற்றும் வியாபாரத்திறன்களின் அபிவிருத்தி போனற் வற்றின் மீதான விழிப்புணர்வுகளை நடத்துதல், யாழ்ப்பாண பிராந்தியத்தின் கொடுகடன் விநியோகப் பொறிமுறையினை  மேம்படுத்துதல் போன்ற யாழ் உப அலுவலகத்தினால் வழங்கப்படட் பணிகள் கிளிநொச்சி பிரதேச அலுவலகத்தின் தற்போதைய அதன் தொழிற்பாட்டு நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக மேற்கொள்ளப்படும்.

  • Licensed Banks Adopt Basel III Capital Standards to Strengthen Resilience

    2017 யூலை 01 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கையிலுள்ள உரிமம்பெற்ற வங்கிகள் 2016இன் பிற்பகுதியில் இலங்கை மத்திய வங்கியினால் விடுக்கப்பட்ட பணிப்புரையினை அடிப்படையாகக் கொண்ட குறைந்தபட்ச மூலதன நியமங்களைப் பின்பற்றும். இப்பணிப்புரையானது வங்கிகளின் தாக்குப்பிடிக்கும் தன்மையை வலுப்படுத்தும் நோக்கில்  பன்னாட்டுத் தீர்ப்பனவுகளுக்கான வங்கியினால் விடுக்கப்பட்ட மூலதனம், முடுக்கி மற்றும் திரவத்தன்மை தொடர்பான பாசல் III வழிகாட்டல்களுடன் இசைந்ததாகக் காணப்பட்டது.

    முழுவடிவம்

  • Suspension of Business of Perpetual Treasuries Limited

     பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரிஉண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கிணங்க, 2017 யூலை 06ஆம் திகதியன்று இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை, 2017 யூலை 06ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில்பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டுநடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தும் ஆறு மாதகாலப்பகுதிக்கு இடைநிறுத்துவதெனத் தீர்மானித்திருக்கிறது.

     இவ்வொழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கை சந்தையின் மீது இடையூறுகளைக் கொண்டதாக்கமெதனையும் ஏற்படுத்தாதிருப்பதனை உறுதிப்படுத்தும் விதத்தில் மத்திய வங்கி அவசியமானவழிமுறைகளை எடுக்கும். பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வாடிக்கையாளர்களினதும் இணைத்தரப்பினர்களினதும் நலவுரித்துக்களை ஒழுங்கானதொரு விதத்தில் கையாள்வதனைவசதிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

  • External Sector Performance - April 2017

    2017 ஏப்பிறலில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை ஒரு கலப்புச் செயலாற்றத்தினைக் காட்டியது. 2017 ஏப்பிறலில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் அதிகரித்த போதிலும், இறக்குமதிச் செலவினங்களின் உயர்ந்தளவிலான வளர்ச்சியானது வர்த்தகப் பற்றாக்குறையில் ஓர் விரிவாக்கத்தினைத் தோற்றுவித்தது. 2017 ஏப்பிறலில் சுற்றுலா வருவாய்கள் அதிகரித்தமைக்கு மத்தியிலும் வர்த்தகப் பற்றாக்குறை விரிவாக்கத்துடன் கூடிய தொழிலாளர் பணவனுப்பல்களின் வீழ்ச்சியானது வெளிநாட்டு நடைமுறைக் கணக்கின் செயலாற்றத்தினை மிதமடையச் செய்தது. இருப்பினும், சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கானது 2017 ஏப்பிறலில் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை மற்றும் அரச பிணையங்கள் சந்தை போன்றவற்றுக்கான தொடர்ச்சியான வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள் மூலம் ஆதரவளிக்கப்பட்டன.

    முழு உரை

  • The Annual Report of the Central Bank of Sri Lanka for the Year 2016

    1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க இலங்கை நாணய விதிச் சட்டத்தின் 35ஆம் பிரிவின் நியதிகளுக்கிணங்க இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினது அறுபத்தேழாவது ஆண்டறிக்கை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களால் மாண்புமிகு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கா அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

    முழுவடிவம்

  • Inflation in March 2017

    தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிறகு; ஆண்டு அடிப்படையில் 2017 பெப்புருவரியில் 8.2 சதவீதத்திலிருந்து 2017 மாச்சில் 8.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் 2017 மாச்சின் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்குப் பங்களித்துள்ளன. 2017 மாச்சில் ஆண்டிற்கு ஆண்டுப் பணவீக்கம் அதிகரித்தமைக்கு முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியில் நிலவிய தாழ்நத் தளமே காரணமாக இருந்தது.  

    ஆண்டுச் சராசரி அடிப்படையொன்றின் மீது அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2017 பெப்புருவரியில் 5.1 சதவீதத்திலிருந்து 2017 மாச்சில் 5.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.  

  • SL Purchasing Managers’ Index Survey - March 2017

    தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மாச்சு மாதத்தில் 66.5 கொண்ட சுட்டெண்ணினை பதிவு செய்ததுடன் இது பெப்புருவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 9.4 சுட்டெண்  புள்ளிகளை கொண்ட ஒரு அதிகரிப்பாகும். இது, புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி துணைச் சுட்டெண்களின் அதிகரிப்பில் பிரதிபலிக்கப்பட்டவாறு புதுவருட பருவகால கேள்விகளினுடான அதிகரிக்கும் கேள்விகள் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் பெரிதும் காரணமாக அமைந்து உற்பத்தி நடவடிக்கைகள் 2017 மாச்சில் தொடர்ச்சியான அதிகரிப்பை குறித்துக்காட்டியது. கொள்வனவுகளின் இருப்பானது, ஒன்றுசேர்ந்த இருப்புகளின் அதிகரிப்பு மற்றும் கடந்த மாதத்தில் காணப்பட்ட வழங்குதல் தாமதங்கள் சீர்செய்யப்பட்டமை போன்றவற்றின் காரணமாக அதிகரித்திருந்தது. எவ்வாறாயினும், நிரம்பலர் வழங்கல் நேரம் குறிப்பாக சீனாவின் அவர்களுடைய புதுவருட காலத்திற்கு பிறகு வழங்குதல் ஏற்பாடுகள் சாதாரண நிலையாக்கப்பட்டதுடன் ஒரு குறைவினை பதிவு செய்தது.

  • Statement Issued by the Central Bank of Sri Lanka Clarifying Certain Media Reports on the Examination of the Employees’ Provident Fund Transactions in Government Securities

    இலங்கை மத்திய வங்கி, அண்மையில் நடைபெற்ற நாணயச் சபையின் கூட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பிழையான தகவல்களைத் தாங்கி வெளிவந்த குறிப்பிட்ட ஊடக அறிக்கைகள் தொடர்பில் அதன் நிலையினைத் தெளிவுபடுத்த விரும்புகின்றது. 

    கண்டறியப்பட்ட விடயங்கள் தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய பொருத்தமான நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் நோக்குடன், அரச பிணையங்களில் செய்யப்பட்ட ஊழியர் சேம நிதியக் கொடுக்கல்வாங்கல்களின் பரீட்சிப்புக்கள் மீதான அறிக்கை தொடர்பில் நாணயச் சபை கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தது. தவறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படுமிடத்து, இலங்கை மத்திய வங்கியின் உள்ளக நடவடிக்கை முறைமையின் நியதிகளுக்கிணங்க, வங்கியின் எந்தவொரு அலுவலருக்கெதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு நாணயச் சபை தீர்மானித்திருக்கிறது.

Pages