• The Central Bank of Sri Lanka Significantly Tightens its Monetary Policy Stance to Stabilise the Economy

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 ஏப்பிறல் 08ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பவற்றினை 2022 ஏப்பிறல் 08 வியாபார முடிவிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் 700 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 13.50 சதவீதத்திற்கும் மற்றும் 14.50 சதவீதத்திற்கும் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது. கூட்டுக் கேள்வி கட்டியெழுப்பப்படுதல், உள்நாட்டு நிரம்பல் இடையூறுகள், செலாவணி வீத தேய்மானம் மற்றும் உலகளாவிய ரீதியில் பண்டங்களின் உயர்வடைந்த விலைகள் போன்றவற்றினால் உள்நாட்டில் எதிர்வரும் காலத்தில் பணவீக்க அழுத்தங்கள் மேலும் கடுமையடையக் கூடுமென்பதனைக் கரிசனையில் கொண்டு நாணயச் சபையானது பொருளாதாரத்தில் மேலதிகக் கேள்வித் தூண்டல் பணவீக்க அழுத்தங்கள் கட்டியெழுப்பப்படுவதனை இல்லாதொழிப்பதற்கும் மோசமான பணவீக்க எதிர்பார்ப்புக்கள் உயர்வடைவதனை முன்கூட்டியே தடுப்பதற்கும் செலவாணி வீதத்தினை உறுதிப்படுத்துவதற்குத் தேவைப்படும் உத்வேகத்தினை வழங்குவதற்கும் வட்டி வீதக் கட்டமைப்பில் அவதானிக்கப்பட்ட ஒழுங்கீனங்களினைத் திருத்தியமைப்பதற்கும் கணிசமான கொள்கைப் பதிலிறுப்பு இன்றியமையாததெனினும் கருத்தினைக் கொண்டுள்ளது. 

  • Dr. P. Nandalal Weerasinghe takes office as the Governor of the Central Bank of Sri Lanka

    முனைவர் பி. நந்தலால் வீரசிங்க இலங்கை மத்திய வங்கியின் 17ஆவது ஆளுநராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். முனைவர் வீரசிங்க நாணய மற்றும் செலாவணி வீதக் கொள்கையில் நீடித்த அனுபவத்துடன் கூடிய தொழில்சார் மத்திய வங்கியாளரொருவர் ஆவார். முனைவர் வீரசிங்க பன்னாட்டு நாணய நிதியத்தில் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளராக பணியாற்றிய வேளையில் 2011 செத்தெம்பர் 27ஆம் நாளன்று துணை ஆளுநராக பதவியுயர்த்தப்பட்டு 2012 செத்தெம்பர் 01ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். முனைவர் வீரசிங்க பொருளியலில் முனைவர் பட்டத்தினையும் முதுமானிப் பட்டத்தினையும் அவுஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகத்திலிருந்தும் விஞ்ஞானமானிப் பட்டத்தினை இலங்கை களனி பல்கலைக்கழகத்திலிருந்தும் பெற்றுக்கொண்டார்.

  • Postponement of the Announcement of the Monetary Policy Review: No. 03 of 2022

    2022 ஏப்பிரல் 05ம் திகதியன்று மு.ப 07.30 மணிக்கு வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 2022ஆம் ஆண்டின் 03ம் இலக்க நாணயக்கொள்கை மீளாய்விற்கான ஊடக  அறிக்கை பிற்போடப்பட்டுள்ளது. அதற்கிணங்க , 2022 ஏப்பிரல் 05ம் திகதியன்று நடைபெறவிருந்த ஊடக மாநாடும் பிற்போடப்பட்டுள்ளது. ஊடக  அறிக்கை மற்றும் ஊடக மாநாட்டுக்கான அறிவிப்பு திகதி விரைவில் தெரிவிக்கப்படும்.

  • Central Bank continues regulatory actions against errant Money Changers

    அதிகாரமளிக்கப்பட்ட நாணய மாற்றுநர்களின் அமைவிடங்களில் மத்திய வங்கி தொடர்ந்த தலத்திலான பரீட்சிப்புக்கள், பின்வரும் நாணய மாற்றுநர்கள் உரிமம்பெற்ற வங்கிகளினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட வீதங்களுக்கு அப்பாலான வீதங்களில் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொண்டிருப்பதனையும் அதன் மூலம் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அவர்களுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைகள் மீறப்பட்டிருப்பதனையும் எடுத்துக்காட்டுகின்றன. 

    i. சுவிஸ் மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட், கொழும்பு 01 (தலைமை அலுவலகம்) மற்றும் கொழும்பு 06 (கிளை)

    ii. வெஸ்ரேன் மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட், கொழும்பு 06 

  • External Sector Performance - January 2022

    ஏற்றுமதிகளிலிருந்தான உயர்ந்தளவிலான வருவாய்கள் தொடர்ச்சியாக எட்டாவது தடவையாக ஐ.அ.டொலர் 1.0 பில்லியனை விஞ்சிய பெறுமதிகளைக் கொண்டிருந்த போதிலும், இறக்குமதி செலவினம் விரிவடைந்தமையின் மூலம் வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை 2021 சனவரியுடன் ஒப்பிடுகையில் 2022 சனவரியில் விரிவடைந்து காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியிலும் பார்க்க 2022 சனவரியில் குறிப்பிடத்தக்கதொரு மீட்சியினைக் காண்பித்திருந்த வேளையில், தொழிலாளர் பணவனுப்பல்களின் மிதமான தன்மையொன்று 2022 சனவரியில் பதிவுசெய்யப்பட்டது. அதேவேளை, ஐ.அ.டொலர் 500 மில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறியினை 2022 சனவரியில் இலங்கை வெற்றிகரமாகத் தீர்த்திருந்தது. சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கானது இந்திய ரிசேவ் வங்கியிடமிருந்தான சார்க் நிதிய பரஸ்பர பரிமாற்றல் வசதியினது பெறுகையுடன் இம்மாத காலப்பகுதியில் வலுவடைந்து காணப்பட்டது. சனவரியில் ரூ.

  • Central Bank suspends Money Changing permit issued to Prasanna Money Exchange (Pvt) Ltd

    பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட் உயர்ந்த செலாவணி வீதங்களை வழங்குகின்றது என்று பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளைப் பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களம் 2022.03.30 அன்று பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட்டில் தலத்திலான விசாரணைகளை மேற்கொண்டது. விசாரணைகளில் பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட் உயர் செலாவணி வீதங்களை வழங்கியுள்ளமை பற்றியும் அதன் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து உரிமம்பெற்ற வங்கிகளினால் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த செலாவணி வீதத்திலும் பார்க்க உயர்ந்த வீதங்களில் வெளிநாட்டுச் செலாவணியினைக் கொள்வனவு செய்ய முயற்சித்திருக்கிறார்கள் என்பது பற்றியும் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட நாணய மாற்றுநர்களுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைகள் மீறப்பட்டுள்ளமை பற்றியும் அவதானிக்கப்பட்டிருக்கிறது. 

  • NOTICE TO THE PUBLIC – MONEY CHANGERS

    உரிமம்பெற்ற வங்கிகளினால் நாணய மாற்றுநர்களுக்கு வழங்கப்படும் செலாவணி வீதங்களைத் தாண்டி வாடிக்கையாளர்களுக்கு உயர்வான செலாவணி வீதங்களை வழங்குவதிலிருந்து அத்தகைய நாணய மாற்றுநர்கள் தடுக்கப்பட்டுள்ளனர் என 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் பொதுமக்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுகின்றது.

    உரிமம்பெற்ற வங்கிகளினால் குறித்துரைக்கப்பட்ட வீதங்களைத் தாண்டிய வீதங்களில் ஏதேனும் வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்களை அவர்கள் மேற்கொள்வார்களாயின் அவர்களது உரிமங்கள் இடைநிறுத்தப்படலாம்/ இரத்துச்செய்யப்படலாம் என நாணய மாற்றுநர்களுக்கு அறிவிக்கப்படுகின்றது.

  • The CBSL’s Comments on the IMF Article IV Report

    பன்னாட்டு நாணய நிதியம் இலங்கை மீது அதன் பிந்திய உறுப்புரை IV அலுவலர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. உறுப்புரை IV செயன்முறை உள்ளடக்குவது;

  • Clarification Regarding the Forex Sales by Banks to the Central Bank of Sri Lanka
    2022.03.21 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில், இலங்கை மத்திய வங்கிக்கு வங்கிகள் விற்பனை செய்யும் வெளிநாட்டுச் செலாவணியின் சதவீதம், 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அண்மையில் அதிகரிக்கப்பட்டமை வங்கிகளுக்கே பிரத்தியேகமாக ஏற்புடைத்தானதெனவும் அது வெளிநாட்டில் பணிபுரிவோர்களினது வெளிநாட்டுச் செலாவணி வருவாய்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் ஏற்றுமதிப் பெறுகைகள் மீதான தற்போதைய தேவைப்பாடுகளின் மீது எந்தவொரு தாக்கத்தினையும் கொண்டிருக்காது என்பதனையும் இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்த விரும்புகின்றது.
     
  • Statement from the Central Bank of Sri Lanka

    முரணாக வெளியிடப்பட்டுவரும் அறிக்கைகளுக்கெதிராக, வங்கித்தொழில் முறைமை உறுதியாகச் செயற்படுகின்றது என்றும் அரச வங்கிகளின் தொழிற்பாடுகள் சீராக இடம்பெறுகின்றதெனவும், நிதி அமைச்சும் இலங்கை மத்திய வங்கியும், பொதுமக்களுக்கும் ஏனைய அனைத்து ஆர்வலர்களுக்கும் உறுதியளிக்கின்றது.

Pages