இலங்கை மத்திய வங்கியானது இலங்கையின் பசுமை நிதி வகைப்படுத்தலை 2022 மே 06 அன்று ஜோன் எக்ஸ்டர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் தொடங்கிவைத்தது. இலங்கையின் பசுமை நிதி வகைப்படுத்தல் என்பது சுற்றாடல் ரீதியாக நிலைபெறத்தக்க பொருளாதார நடவடிக்கைகளை வரைவிலக்கணம்செய்து வகைப்படுத்துவதுடன் 2019இல் மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கையின் நிலைபெறத்தக்க நிதிக்கான வழிகாட்டலில் எடுத்துரைக்கப்பட்ட முக்கிய செயற்பாட்டு விடயமொன்றாகக் காணப்படுகின்ற வகைப்படுத்தல் முறைமையொன்றாகும். இவ்வகைப்படுத்தலானது, பன்னாட்டு ரீதியான சிறந்த நடத்தைகளுக்கு இசைவாகத் தயாரிக்கப்பட்டுள்ள அதேவேளை, உள்நாட்டு பின்னணிக்கு ஏற்றவிதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆதலால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகள் இரண்டினூடாகவும் பசுமை நடவடிக்கைகளுக்கு குறைந்த செலவில் நிதியளித்தலைத் திரட்டுவதற்கு இது நிதியியல் சந்தை பங்கேற்பாளர்களை இயலச்செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
-
Central Bank of Sri Lanka Launched the Sri Lanka Green Finance Taxonomy
-
On year-on-year basis, CCPI based headline inflation continuously increased to 29.8% in April 2022
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 மாச்சின் 18.7 சதவீதத்திலிருந்து 2022 ஏப்பிறலில் 29.8 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இத்தகைய அதிகரிப்பானது 2022 ஏப்பிறலில் உணவு மற்றும் உணவல்லா ஆகிய இரு வகைப்படுத்தல்களினதும் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 மாச்சில் 30.2 சதவீதத்திலிருந்து 2022 ஏப்பிறலில் 46.6 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 மாச்சின் 13.4 சதவீதத்திலிருந்து 2022 ஏப்பிறலில் 22.0 சதவீதத்திற்கு அதிகரித்தது.
-
The Central Bank of Sri Lanka Releases its Annual Report for the Year 2021
1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 35ஆம் பிரிவின் நியதிகளுக்கமைவாக, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் எழுபத்திரெண்டாவது ஆண்டறிக்கையானது இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர். பி. நந்தலால் வீரசிங்க அவர்களினால் நிதி அமைச்சர் கௌரவ. எம்.யு.எம். அலி சப்ரி அவர்களுக்கு இன்று (2022.04.29) சமர்ப்பிக்கப்பட்டது.
-
Sri Lanka Purchasing Managers’ Index - March 2022
தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2022 மாச்சில் விரிவடைந்தன.
தயாரிப்பு நடவடிக்கைகளில் பருவகால போக்கினைத் தொடர்ந்து தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மாதத்திற்கு மாதம் அடிப்படையில் 57.8 சுட்டெண் புள்ளிகளுக்கு அதிகரித்தாலும், முன்னைய ஆண்டுகளைவிட மெதுவான வீதத்திலேயே காணப்பட்டது. பருவகாலக் கேள்வியினைத் தொடர்ந்து உற்பத்தி, புதிய கட்டளைகள், தொழில்நிலை துணைச் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட மேம்பாடுகள் இவ்வதிகரிப்பிற்குப் பிரதான காரணமாக அமைந்தது.
பணிகள் துறை கொ.மு.சுட்டெண், 2022 மாச்சில் 51.3 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து பணிகள் துறை முழுவதும் விரிவடைதலினை எடுத்துக்காட்டுகின்றது. இதற்கு, புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள், மற்றும் தொழில்நிலை துணைச் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் ஏதுவாகின.
-
“A Guide to Payment Services in Sri Lanka” - a Booklet on Payment Instruments and Infrastructures in Sri Lanka
இலங்கையின் கொடுப்பனவுத் தொழிற்துறைக்கு புதிய கொடுப்பனவுச் சாதனங்கள், முறைகள் மற்றும் செயன்முறைகள் என்பன அறிமுகப்படுத்தப்பட்டு வருவதன் காரணமாக இத்தொழிற்துறை தற்பொழுது விரைவாக மாற்றங்களுக்கு உட்பட்டுவருகிறது. பாரம்பரிய கொடுப்பனவு முறைமைகளுடன் சேர்ந்து இப்புதிய இக்கொடுப்பனவுச் செயன்முறைகள் வாடிக்கையாளர் அனுபவத்திற்கு புதிய வரைவிலக்கணம் தருவதுடன் வியாபாரங்களும் வாடிக்கையாளர்களும் அவர்களது நிதியியல் கொடுக்கல்வாங்கல்களைப் பாதுகாப்பாகவும் வினைத்திறனுடனும் மேற்கொள்வதனையும் இயலுமைப்படுத்தும்.
-
Message to Sri Lankans living abroad from Dr. P Nandalal Weerasinghe, Governor of the Central Bank of Sri Lanka
கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் நீடித்து நிலைக்கின்ற தாக்கம், உலக அரசியல் சமமின்மைகள் அத்துடன் நாட்டின் பேரண்டப் பொருளாதார சமமின்மைகள் காரணமாக தற்போது இலங்கை சமூகப் பொருளாதார மற்றும் நிதியியல் இடர்பாடுகளை எதிர்கொண்டு,ள்ளமை நாட்டு மக்களுக்கு இன்னல்களைத் தோற்றுவித்துள்ளது. நாட்டின் மேற்குறித்த நிலைமையினை கையாள்வதற்கு, நாட்டின் படுகடன் கடப்பாடுகளை முனைப்பாக முகாமைசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தல், ஏனைய நாடுகளிடமிருந்து உடனடி நிதி உதவியினை நாடுதல் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய நிகழ்ச்சித்திட்டமொன்றுக்காக பன்னாட்டு நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்தல் உள்ளடங்கலாக பல வழிமுறைகளை அதிகாரிகள் எடுத்துவருகின்ற போதிலும், அத்தகைய வழிமுறைகளின் சாதகமான தாக்கங்கள் எமது மக்களுக்கு நடுத்தர காலத்திலிருந்து நீண்ட காலத்திலேயே நன்மைபயக்கும். ஆகையினால், உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப்பொருட்கள் உள்ளடங்கலாக நாளாந்த அத்தியாவசிய இறக்குமதிகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு நாட்டின் வெளிநாட்டு ஒதுக்கு நிலையினை அதிகரிப்பதற்கு அவசரமான வழிமுறைகள் தேவைப்படுகின்றன.
-
Message by the Governor of the Central Bank of Sri Lanka
இலங்கை மத்திய வங்கியின் புதிதாக பதவியேற்ற ஆளுநர் என்ற வகையில், நாணயச் சபைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களான சனாதிபதி சட்டத்தரணி திரு. சஞ்சீவ ஜயவர்த்தன அவர்களும் முனைவர் (திருமதி) ராணி ஜயமகா அவர்களும் எப்போதும் மிகவும் சுயாதீனமாகவும் தொழில்சார்பண்புடனும் விடாமுயற்சியுடனும் செயற்படுவதனாலும் இலங்கை மத்திய வங்கியின் அனைத்து முயற்சிகளுக்கும் மிகவும் சாதகமாகப் பங்களித்துள்ளமையினாலும் நாணயச் சபையில் அவர்கள் தொடர்ந்தும் பணியாற்றுவதற்கு இணங்கியுள்ளதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன். அவர்களது முழுமையான தொழில்சார்பண்பில் நான் முழுமையான நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்டிருப்பதனால் தேசத்திற்கும், நாணயச் சபைக்கும் அதேபோன்று ஆளுநர் என்ற வகையில் எனக்கும் அவர்களது தொடர்ச்சியான பங்களிப்பினையும் பெறுமதியான வழிகாட்டலையும் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றேன்.
-
Request for Proposals - Financial Advisor & Legal Consultant (Deadline Extension)
அரசாங்கத்தின் வெளிநாட்டுப் படுகடன் நிலைபெறுதன்மையினை முகாமைசெய்வதற்கான நிதியியல் ஆலோசகர்களையும் சட்ட மதியுரைஞர்களையும் நியமிப்பதற்காக ஆர்வமுடைய தரப்பினர்களிடமிருந்து/முகவராண்மைகளிடமிருந்து முன்மொழிவுக்கான கோரிக்கையினை நிதி அமைச்சின் ஊடாக இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
-
Functioning of Banks on 11 and 12 April 2022
2022 ஆம் ஆண்டு ஏப்பிறல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அனைத்து உரிமம்பெற்ற வங்கிகளும் பொதுவான வங்கித் தொழிற்பாடுகளுக்காகத் திறக்கப்படும் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது.
-
Monetary Policy Review: No. 03 of 2022 (Detailed Version)
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 ஏப்பிறல் 08ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பவற்றினை 2022 ஏப்பிறல் 08 வியாபார முடிவிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் 700 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 13.50 சதவீதத்திற்கும் மற்றும் 14.50 சதவீதத்திற்கும் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது.