-
Sri Lankan Delegation Engaged in High-Level Meetings at the 2025 World Bank Group/ International Monetary Fund Annual Meetings, and Governor was Honoured with “A Grade” Award by Global Finance Magazine
The Sri Lankan delegation, led by Dr. Nandalal Weerasinghe, Governor of the Central Bank of Sri Lanka (CBSL), actively participated in a series of high-level bilateral and multilateral meetings during the 2025 World Bank Group/ International Monetary Fund (IMF) Annual Meetings in Washington, D.C., during October 13–18, 2025.
-
SL Purchasing Managers’ Index (PMI) – September 2025
கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 செத்தெம்பரில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றன.
தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2025 செத்தெம்பரில் 55.4 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் விரிவடைதலொன்றை எடுத்துக்காட்டுகின்றது. தொழில்நிலைக்கானவைத் தவிர, அனைத்து துணைச் சுட்டெண்களும் மாதகாலப்பகுதியில் நடுநிலையான அடிப்படையான அளவிற்கு மேல் காணப்பட்டன.
-
Appointment of a New Member to the Governing Board of the Central Bank of Sri Lanka
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு சனாதிபதி, 2025.10.02 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் ஆளும் சபையின் உறுப்பினரொருவராக திரு. மைத்திரி எவன் விக்ரமசிங்க, சனாதிபதி சட்டத்தரணி அவர்களை நியமித்துள்ளார். 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் இலங்கை மத்திய வங்கியின் விவகாரங்களின் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் அத்துடன் இலங்கை மத்திய வங்கியின் பொதுவான கொள்கைகளின் நிர்ணயம் என்பவற்றை மேற்பார்வை செய்வதற்கு பொறுப்பான அமைப்பாக ஆளும் சபை தாபிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 12(1)(ஆ) பிரிவின் நியதிகளுக்கமைய ஆளும் சபை உறுப்பினர்கள் நாணயக் கொள்கைச் சபையின் உறுப்பினர்களாகவும் இருப்பர்.
-
IMF Staff Reaches Staff-Level Agreement on the Fifth Review Under Sri Lanka’s Extended Fund Facility Arrangement
திரு. இவான் பப்பாஜீயோர்ஜியு தலைமையிலான பன்னாட்டு நாணய நிதியத்தின் அலுவலர் குழுவொன்று விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் கீழான ஐந்தாவது மீளாய்விற்காக 2025 செத்தெம்பர் 24 தொடக்கம் ஒத்தோபர் 9 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்தது. பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டினால் ஆதரவளிக்கப்பட்ட இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஐந்தாவது மீளாய்வு குறித்த அலுவலர் மட்ட உடன்படிக்கையினை எட்டியதையடுத்து பன்னாட்டு நாணய நிதியமானது பின்வரும் ஊடக வெளியீட்டினை 2025 ஒத்தோபர் 09 அன்று வெளியிட்டதுடன், இதனைக் கீழேயுள்ள இணைப்பிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
-
The Central Bank of Sri Lanka Releases the Financial Stability Review for the Year 2025
2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 70(1)இன் நியதிகளில் இலங்கை மத்திய வங்கி 2025ஆம் ஆண்டிற்கான நிதியியல் உறுதித்தன்மை மீளாய்வினை வெளியிட்டிருக்கின்றது. இச்சட்டரீதியான அறிக்கை, நிதியியல் முறைமையின் உறுதித்தன்மை மீதான கணிப்பீட்டுடன் தொடர்பான இடர்நேர்வுகள் மற்றும் பாதிக்கப்படும் தன்மைகள் என்பனவற்றை அடையாளம் கண்டு, மதிப்பீடு செய்வதோடு மத்திய வங்கி மற்றும் ஏனைய ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரசபைகளினால் செயற்படுத்தப்பட்ட கொள்கை வழிமுறைகளையும் மேற்கோடிடுகிறது. மேலும், 2025ஆம் ஆண்டிற்கான நிதியியல் உறுதித்தன்மை மீளாய்வின் சுருக்க அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கை பிரதானமாக 2025ஆம் ஆண்டின் யூன் வரையான தரவுகளை உள்ளடக்குகின்றது. இவ்வெளியீட்டின் இலத்திரனியல் பதிப்பினை இலங்கை மத்திய வங்கியின் வலைத்தளத்தில் பார்வையிடமுடியும்.
-
External Sector Performance – August 2025
நடைமுறைக் கணக்கானது அதன் அதிகளவிலான மாதாந்த மிகைகளைப் பேணியதால் இலங்கையின் வெளிநாட்டுத் துறையின் செயலாற்றம் 2025 ஓகத்தில் மேலும் தொடர்ந்தும் வலுவடைந்தது.
இறக்குமதியை விடவும் ஏற்றுமதியில் உயர்ந்தளவான வளர்ச்சியைப் பிரதிபலித்து, வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2024 ஓகத்துடன் ஒப்பிடுகையில் 2025 ஓகத்தில் சுருக்கமடைந்தது.
-
As expected, CCPI based headline inflation accelerated towards the target in September 2025
2025 ஓகத்தில் நேர்க்கணியப் புலத்திற்கு திரும்பலடைந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (கொநுவிசு, 2021=100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்;டு), 2025 செத்தெம்பரில் பணவீக்க இலக்கினை நோக்கி அதன் மேல்நோக்கிய போக்கினைத் தொடர்ந்தது. அதற்கமைய, இலங்கை மத்திய வங்கியின் அண்மைய கால எறிவுகளுக்கமைய, முதன்மைப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2025 ஓகத்தின் 1.2 சதவீதத்திலிருந்து 2025 செத்தெம்பரில் 1.5 சதவீதத்திற்கு உயர்வடைந்தது.
-
Sri Lanka PMI - Construction increased in August 2025
கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 ஓகத்தில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவாக்கமொன்றைக் காண்பித்து, 61.1 ஆக அதிகரித்தது. பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டதற்கமைய, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட சில கருத்திட்டங்கள் மீளத்தொடங்கப்பட்டதுடன் கருத்திட்டம் கிடைக்கப்பெறுவதில் தொடர்ச்சியான அதிகரிப்பு, கட்டுமானத் துறையின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.
-
The Central Bank of Sri Lanka (CBSL) releases the “Sri Lanka Socio-Economic Data – 2025” Publication
Sri Lanka Socio-Economic Data – 2025”, the annually published data folder of the CBSL, is now available for public information. The current data folder is the 48th volume of the series.
This easy-to-carry booklet contains information categorised under 14 topics, namely, Country Profile; Key Economic Indicators; Country Comparisons; Socio-Economic Conditions; Human Resources; National Accounts; Agriculture; Industry; Economic and Social Infrastructure; Prices and Wages; External Trade and Tourism; External Finance; Government Finance; and Money, Banking and Finance. As the data folder presents a wide range of socio-economic data of current interest in a concise and summary form, it will serve as a useful publication for policymakers, researchers, academics, professionals, students and the general public.
-
The Central Bank of Sri Lanka keeps the Overnight Policy Rate (OPR) unchanged
நாணயக் கொள்கைச் சபையானது நேற்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில், ஓரிரவு கொள்கை வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகள் ஆகிய இரண்டினையும் கவனமாகப் பரிசீலனையிற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடு பணவீக்கத்தை 5 சதவீதம் கொண்ட இலக்கை நோக்கி வழிநடாத்துவதில் உதவுமென சபை கருதுகின்றது.