பிரதேச அலுவலகம் - கிளிநொச்சி

தேசிய கணக்கீட்டு தொகுப்பு எனும் தலைப்பிலான இணையவழிக் கருத்தரங்கானது பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம் மற்றும் வங்கித்தொழில் கற்கைளுக்கான ஆய்வுநிலையம் ஆகியவற்றின் கூட்டிணைப்புடன் 18 செத்தெம்பர் 2020 அன்று வடமாகாணத்திலுள்ள உயர்தர பொருளியல் ஆசிரியர்களுக்கு வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. 133 ஆசிரியர்கள் இக்கருத்தரங்கில்  பங்குபற்றியிருந்தனர். இக்கருத்தரங்கின் வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தைச் சேர்ந்த மூத்த பொருளியலாளர் திரு. எம். கேசவராஜா அவர்கள் பங்குபற்றியிருந்தார்.

இலங்கையில் கொடுப்பனவுகளின் டிஜிட்டல் எதிர்காலம் எனும் தலைப்பிலான இணையவழிக் கருத்தரங்கானது கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களம் மற்றும் வங்கித்தொழில் கற்கைளுக்கான ஆய்வுநிலையம் ஆகியவற்றின் கூட்டிணைப்புடன் 09 திசெம்பர் 2020 அன்று வடமாகாணத்திலுள்ள உரிமம் பெற்ற வர்த்தக மற்றம் சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் உத்தியோகத்தர்களுக்கு வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இக்கருத்தரங்கில் 80 வங்கியாளர்கள் பங்குபற்றி பயனடைந்துள்ளனர். இக்கருத்தரங்கின் வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்தைச் சேர்ந்த மூத்த உதவிப் பணிப்பாளர் திரு. பி. ஜி. ஜி. என். ரூபசிங்க அவர்கள் பங்குபற்றியிருந்தார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அவர்களும்; மூத்த அலுவலகர்களும் இணைந்து நுண்நிதித் துறையில் காணப்படும் பிரச்சனைகளுக்கான பொருத்தமான தீர்வுகளை ஆராய்வதற்காக 2020 செத்தெம்பர்; 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் வடமாகாணத்திற்கு வருகை தந்;தனர். இதுதொடர்பில்இ இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அலுவலகம் கிளிநொச்சியானது வடக்கிலுள்ள பல்வேறுபட்ட குழுமங்களை சேர்ந்த அக்கறையுடைய தரப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளை சந்திப்பதற்காக நிகழ்ச்சி தொடரொன்றினை ஒழுங்குபடுத்தியிருந்தது.

இதன்படி வடமாகாண ஆளுநர் திருமதி. பி. எஸ். எம் சார்ள்ஸ் அவர்களுடன் அவரது அலுவலகத்தில் 07 செத்தெம்பர் 2020 அன்று நடைபெற்ற கலந்துரையாடலானது இந்நிகழ்ச்சித் தொடரினை ஆரம்பித்து வைத்தது. வடமாகாணத்தின் ஐந்து மாவட்ட அரச அதிபர்கள், உயர் அரச அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள், நிதியியல் நிறுவனங்களின் வடமாகாண தலைவர்கள், தெரிவு செய்யப்பட்ட நுண்நிதி நிறுவன தலைவர்கள், கூட்டுறவுக் கிராமிய வங்கிகளின் பிரதிநிதிகள் மற்றும் குடிசன சமூகப்பிரதிநிதிகள் ஆகியோருடனான பல்வேறுவிதமான கலந்துரையாடல்களானவை 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.

இதற்கு மேலதிகமாக, இவ் வருகையின் ஒரு பகுதியாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அவர்களும்; மூத்த அலுவலகர்களும் இணைந்து யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் உள்ள வெற்றிகரமான தொழில்முயற்சியாளர்கள் இருவரை சந்தித்திருந்தனர் (ரேஸ்ரா இண்ரஸ்ரிஸ், யாழ்ப்பாணம் மற்றும் பொசிபிள் கிறீன் (பிறைவேற்) லிமிட்டெட், கிளிநொச்சி).

 

மேலும் புகைப்படங்களை பாா்க்க

இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய அலுவலகமானது 29 யூலை 2020 அன்று யாழ்ப்பாண வணிகர் கழக கேட்போர்கூடத்தில் யாழ்ப்பாண வணிகர் கழக நிர்வாக அங்கத்தவர்களுடன் கொவிட் 19 நிவாரண  திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்றில் பங்கேற்றது. இதில் யாழ்ப்பாணத்தின் முன்னணிஉரிமமளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

12 Nos of financial literacy programmes were organized by Regional office – Kilinochchi, Central Bank of Sri Lanka during the 1st quarter of 2020 and 608 general public and government official within Northern Province are benefited.

இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிரதேச அலுவலகமானது வட மாகாணத்திலுள்ள புத்திஜீவிகள் குழுவொன்றின் பங்களிப்புடன் வட மாகாணத்தின் தற்கால சமூகப் பொருளாதார சவால்கள், சாத்தியமான பரிகாரங்கள், அதேபோன்று பரிந்துரைகள் என்பவற்றைப் பிரதிபலிக்கின்ற வட மாகாண முதன்மைத் திட்டமொன்றுக்கான "பொருளாதார அபிவிருத்திக் கட்டமைப்பு" இனை முன்வைக்கின்றது. 

மேற்குறித்த நிகழ்வு 2019 பெப்புருவரி 08 (வெள்ளிக்கிழமை) அன்று யாழ்ப்பாண பொதுநூலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது. 

 

Pages