இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய காரியாலயமானது இலங்கை மத்திய வங்கியின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரு இணையவழிக் கருத்தரங்குகளை நடாத்தியுள்ளது

தேசிய கணக்கீட்டு தொகுப்பு எனும் தலைப்பிலான இணையவழிக் கருத்தரங்கானது பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம் மற்றும் வங்கித்தொழில் கற்கைளுக்கான ஆய்வுநிலையம் ஆகியவற்றின் கூட்டிணைப்புடன் 18 செத்தெம்பர் 2020 அன்று வடமாகாணத்திலுள்ள உயர்தர பொருளியல் ஆசிரியர்களுக்கு வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. 133 ஆசிரியர்கள் இக்கருத்தரங்கில்  பங்குபற்றியிருந்தனர். இக்கருத்தரங்கின் வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தைச் சேர்ந்த மூத்த பொருளியலாளர் திரு. எம். கேசவராஜா அவர்கள் பங்குபற்றியிருந்தார்.