இலங்கை வைப்புக்காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத்திட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் த பினான்ஸ் கம்பனி பிஎல்சி வைப்பாளர்களுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகள்

2011 இன் 42 ம் இலக்க நிதித் தொழிற்சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நிதி தொழிலை மேற்கொள்வதற்கு த பினான்ஸ் கம்பனி பிஎல்சிக்கு வழங்கப்பட்ட உரிமம் 22.05.2020 இல் இருந்து அமுலுக்கு வரும் வகையில் இரத்துசெய்யப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியானது இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத்திட்டத்தின் ஒழுங்குவிதிகளுக்கிணங்க காப்புறுதி செய்யப்பட்ட அனைத்து வைப்பாளர்களுக்கும் ரூ.600,000 வரை இழப்பீடுகளைச் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. நிலுவை ஏதாவது இருப்பின், த பினான்ஸ் கம்பனி பிஎல்சிக்குச் சொந்தமான சொத்துக்களைத் திரவத்தன்மைக்கு மாற்றிய பின்னர் செலுத்தப்படலாம். மத்திய வங்கியால் இந்நோக்கத்திற்காக முகவர் வங்கியாக நியமிக்கப்பட்ட மக்கள் வங்கி ஊடாக இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும். கொடுப்பனவுகள் கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளதோடு கொடுப்பனவுகளின் முதற்கட்டம்; தனிநபர் கணக்காக ஒரேயொரு வைப்பை பேணும் வைப்பாளர்களுக்கு த பினான்ஸ் கம்பனியின் கிளைகள் முன்பு செயற்பட்டுவந்த இடத்தில் உள்ள மக்கள் வங்கிக் கிளைகளில் 2020 யூன் 7ம் திகதி ஆரம்பிக்கப்படும்.

இது தொடர்பிலான மேலதிக விபரங்களை கீழே வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

இலங்கை மத்திய வங்கி- 0112-398788, 0112-477261

மக்கள் வங்கி -0112-481594, 0112-481320, 0112-481612, 0112-481703

 

 

Published Date: 

Thursday, June 4, 2020