நாணயச் சபை, 2017 ஓகத்து 31ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் திருமதி. கே. எம். ஏ. என். டவுளுகல, திருமதி எஸ். குணரத்ன, திரு. என். டபிள்யு. ஜி. ஆர். பி. நாணயக்கார, திருமதி ரி. எம். ஜெ. வை. பி. பெர்னாண்டோ, திரு. ஜெ. பி. ஆர். கருணாரத்ன மற்றும் திருமதி கே. குணதிலக ஆகிய ஆறு உயர் அலுவலர் வகுப்புத் தரம் ஐஏ அலுவலர்களை 2017 ஓகத்து 31ஆம் திகதியிலிருந்து உதவி ஆளுநர்களாகப் பதவியுயர்த்தியுள்ளது. இப்பதவி உயர்வுகள் வங்கியினுடைய சுமூகமான தொழிற்பாட்டினை உறுதி செய்யும் வகையில் பதவி உயர்வுகளாலும் ஓய்வுபெறுகையினாலும் 2016 மேயிலிருந்து 2017 ஓகத்து வரை ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
திருமதி. கே. எம். ஏ. என் டவுளுகல









இவ்வெளியீடானது, தேசிய கணக்குகள், வேளாண்மை, கைத்தொழில், வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் நிதி, அரச நிதி, வங்கித்தொழில் மற்றும் நிதியியல் நிறுவனங்கள், பணம் மற்றும் மூலதனச் சந்தைகள், விலைகள் மற்றும் கூலிகள், குடித்தொகை மற்றும் தொழிற்படை, போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், தொலைத் தொடர்பூட்டல் பணிகள், காலநிலை ஆகிய துறைகளிலுள்ள இலங்கையின் பொருளாதார, சமூக குறிகாட்டிகளையும் மற்றைய நாடுகளிலுள்ள பொருளாதார, சமூக குறிகாட்டிகள் மீதான தெரிந்தெடுக்கப்பட்ட தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது.