கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 மேயின் 4.5 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 5.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 மேயின் 9.9 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 11.3 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 மேயின் 2.2 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 2.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 மேயின் 3.9 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 4.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.
-
CCPI based Inflation increased to 5.2 per cent in June 2021
-
Statement by Deshamanya Professor W D Lakshman, Governor of the Central Bank of Sri Lanka on Foreign Currency Liquidity in the Domestic Market
கடந்த சில நாட்களாக, உள்நாட்டுச் சந்தையில் வெளிநாட்டு நாணயத் திரவத்தன்மையின் ஊகிக்கப்பட்ட பற்றாக்குறையொன்று தொடர்பில் பல்வேறுபட்ட தனிநபர்கள் மற்றும் ஊடகங்களினால் கரிசனைகள் எழுப்பப்பட்டிருந்ததுடன் இவை வங்கிகளை இறக்குமதிகளுக்கு வசதிப்படுத்துவதிலிருந்தும் தடுத்திருந்தன. சில ஊடகங்களினால் வெளியிடப்பட்ட அல்லது பரப்பப்பட்ட அறிக்கைகள் மிகவும் எதிர்மறையான கண்ணோட்டத்தை குறித்திருந்ததுடன் அவை நாட்டிற்கு மிகவும் தீங்கு விளைவிக்கவல்லன. இவ்விடயம் தொடர்பிலான உண்மையான நிலையினைத் தெளிவுபடுத்துவதற்காக நான் பின்வரும் அறிக்கையினை வெளியிட விரும்புகின்றேன்.
-
NCPI based Inflation increased in May 2021
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 ஏப்பிறலின் 5.5 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 6.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்புகள் மூலம் பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 ஏப்பிறலில் 9.7 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 10.3 சதவீதத்திற்கு அதிகரித்ததுடன் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 ஏப்பிறலின் 2.2 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 2.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.
ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 ஏப்பிறலின் 5.3 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 5.4 சதவீதத்திற்குச் சிறிதளவு அதிகரித்தது.
-
External Sector Performance - April 2021
2021 ஏப்பிறலில் இலங்கையின் வெளிநாட்டுத்துறை கலப்பான செயலாற்றத்தினை வெளிக்காட்டியது. வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக 2021 ஏப்பிறலில் விரிவடைந்த அதேவேளையில் சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் தொடர்ந்தும் குறைவடைந்து காணப்பட்டது. குறிப்பாக, ஏற்றுமதிகளும் இறக்குமதிகளும் 2020 ஏப்பிறலுடன் ஒப்பிடுகையில் 2021 ஏப்பிறலில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருந்தாலும் 2021 மாச்சுடன் ஒப்பிடுகையில் குறைவடைந்து காணப்பட்டன. இருப்பினும், தொழிலாளர் பணவனுப்பல்கள் அதன் உத்வேகத்தைத் தொடர்ந்தும் பேணி 2021 ஏப்பிறலில் குறிப்படத்தக்க வளர்ச்சியைப் பதிவுசெய்தது. அதேவேளையில், சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கு இம்மாத காலப்பகுதியில் சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெறப்பட்ட கூட்டுக்கடன் வசதிப் பெறுகைகளுடன் வலுவடைந்தது. ஏப்பிறல் மாத நடுப்பகுதியில் சில தளம்பல்கள் அவதானிக்கப்பட்ட போதிலும் இலங்கை ரூபா இம்மாதம் முழுவதும் பரந்தளவில் நிலையாகக் காணப்பட்டது.
-
Sri Lanka Purchasing Managers’ Index - May 2021
தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் மேயில் சுருக்கமடைந்தன.
கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலையின் பாதகமான தாக்கங்களின் காரணமாக தயாரிப்பு நடவடிக்கைகள் மே காலப்பகுதியில் சுருக்கமடைந்தன.
கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலையின் அதிகரிப்பிற்கு இசைவாக பணிகள் கொ.மு.சுட்டெண் 2020 ஏப்பிறலிலிருந்து ஆகக்குறைந்த வாசிப்பினைப் பதிவுசெய்து 2021 மேயில் 39.5 இற்கு மேலும் வீழ்ச்சியடைந்து.
-
Concessionary Scheme for Businesses and Individuals Affected by the third Wave of COVID-19
கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளின் (இதனகத்துப்பின்னர் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் எனக் குறிப்பீடுசெய்யப்படும்) கடன்பெறுநர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களைப் பரிசீலனையில்கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்குமான சலுகைகளைப் பற்றிய 2021ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க சுற்றறிக்கையை வெளியிடுவதன் மூலம் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு பின்வருமாறு சலுகைகளை வழங்குமாறு வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களைக் கோரியுள்ளது:
-
Provision of Banking Services Amidst the COVID-19 Outbreak
இலங்கை மத்திய வங்கி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் பொலிஸ் மா அதிபரின் அனுமதியைப் பெற்ற பின், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்பட்ட அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடித்து கொவிட் -19 நோய்த்தொற்றுக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் பயணக் கட்டுப்பாடுகளுக்கமைவாக அத்தியாவசிய வங்கிச் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குமாறு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளையும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளையும் (உரிமம்பெற்ற வங்கிகள்) ஏற்கனவே வேண்டிக்கொண்டுள்ளது.
கொவிட் - 19 உலகளாவிய நோய்த்தொற்றுக் காலப்பகுதியில் வங்கித்தொழில் பணிகளை வழங்குவது குறித்து உரிமம்பெற்ற வங்கிகளால் வெளியிடப்பட்ட தகவல் தொடர்புகளை/ அறிவிப்புக்களைக் கவனித்து இலங்கை மத்திய வங்கி பின்வருவனவற்றை தெளிவுபடுத்த விரும்புகின்றது.
-
Measures to Encourage Offshore Borrowings by Private Sector
நாட்டிற்கு வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்களை ஊக்குவிக்கும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கியானது கௌரவ நிதி அமைச்சரின் சம்மதத்துடனும் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இசைவாகவும் தனியார் துறையின் வலிமைகள் மீது உந்துசக்தியளிக்கின்ற கரைகடந்த நிதியளித்தலை திரட்டுவதற்கான வழிகளைப் பின்பற்றுமாறு தனியார் துறைக்கு அழைப்பு விடுக்கின்றது.
இது தொடர்பில், கரைகடந்த கடன்பாடுகள் பற்றிய வெளிநாட்டுச் செலாவணி இடர்நேர்வுக்கு காப்பளிப்பதற்கு வருடாந்தம் மீளாய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படக்கூடிய சொல்லப்பட்ட கடன்பாடுகளின் காலப்பகுதிக்காக தனியார் துறையினரின் வெளிநாட்டுச் செலாவணி கடன்பெறுநர்களுக்காக செலவில்லாத பரஸ்பரப் பரிமாற்றல் ஒப்பந்த வசதியொன்று இலங்கை மத்திய வங்கி மூலம் கிடைக்கப்பெறச் செய்யப்படும்.
-
Concessionary Scheme for Businesses and Individuals Affected by the Third Wave of COVID-19
கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக உரிமம்பெற்ற வங்கிகளின் கடன்பெறுநர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களைப் பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு பின்வருமாறு சலுகைகளை வழங்குமாறு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளையும் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளையும் (உரிமம்பெற்ற வங்கிகள்) கோரியுள்ளது:
-
CCPI based Inflation increased to 4.5 per cent in May 2021
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 ஏப்பிறலின் 3.9 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 4.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஏப்பிறலின் 9.0 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 9.9 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஏப்பிறலின் 1.8 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 2.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 மேயில் 3.9 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.