• Sri Lanka Purchasing Managers’ Index - June 2021

    தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் யூனில் மீட்சியடைந்தன.

    கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலையின் பாதகமான தாக்கங்களிலிருந்து தயாரிப்பு நடவடிக்கைகள் 2021 யூன் காலப்பகுதியில் சிறிதளவு மீட்சியடைந்தன.

    பணிகள் கொ.மு.சுட்டெண் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களாக வீழ்ச்சியடைந்ததன் பின்னர் 51.3 கொண்ட சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து 2021 யூனில் வளர்ச்சி எல்லைக்கு திரும்பியது.

  • External Sector Performance - May 2021

    வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2021 மேயில் விரிவடைந்தது. 2020 மேயிலும் பார்க்க ஏற்றுமதிகளும் இறக்குமதிகளும் 2021 மேயில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துக் காணப்பட்டமைக்கு முக்கியமாக ஓராண்டிற்கு முன்னைய உலகளாவிய நோய்த்தொற்றின் புள்ளிவிபர அடிப்படைத் தாக்கங்களுடன் தொடர்புடைய இடையூறுகளே காரணமாக அமைந்தன. முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2021 மேயில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் அதிகரித்திருந்த வேளையில், இறக்குமதிகள் வீழ்ச்சியடைந்தன. இம்மாத காலப்பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்கள் தொடர்ந்தும் அதிகரித்திருந்த வேளையில், சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் குறைந்த மட்டங்களிலேயே காணப்பட்டன. நிதியியல் கணக்கில், அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையிலுள்ள வெளிநாட்டு முதலீடுகள் 2021 மேயில் சிறிதளவான தேறிய வெளிப்பாய்ச்சலைப் பதிவுசெய்தன. அதேவேளை, இலங்கை ரூபா இம்மாதம் முழுவதும் பரந்தளவில் நிலையாகக் காணப்பட்டதுடன் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2021 மே மாத இறுதிக்காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 4.0 பில்லியனாக விளங்கியது.

  • Re-appointment of Mr Sanjeeva Jayawardena, President’s Counsel to the Monetary Board of the CBSL

    சனாதிபதி சட்டத்தரணி திரு. சஞ்சீவ ஜயவர்த்தன அவர்களின் பெயர் நாணயச் சபைக்கு பெயர்குறிக்கப்பட்டதை பாராளுமன்றப் பேரவை அங்கீகரித்ததைத் தொடர்ந்து  அதிமேதகு சனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷஅவர்களினால் 2027 யூன் வரை ஆறு ஆண்டுகளைக் கொண்ட புதிய பதவிக்காலத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு அவர் மீளவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    திரு. சஞ்சீவ ஜயவர்த்தன இலங்;கை மத்திய வங்கியின் நாணயச் சபையில் பணியாற்றும் முதலாவது சனாதிபதி சட்டத்தரணியாக விளங்குகின்றார்.

    தற்பொழுது இவர் வெளிநாட்டுப் படுகடன் கண்காணிப்புக் குழுவின் நாணயச் சபை மட்டத் தலைவராகவும் சபை இடர்நேர்வு மேற்பார்வைக் குழுவின் தலைவராகவும் பணியாற்றுகின்றார். இலங்கை மத்திய வங்கியின் ஒழுக்கவியல் குழுவிற்கும் இவர் தலைமைதாங்குகின்றார்.

  • Local Companies Permitted to Invest in the International Sovereign Bonds in the Secondary Market

    இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளை இரண்டாந்தரச் சந்தையில் கொள்வனவு செய்வதற்கு 2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகளை (2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்திற்கமைவாக நிதி வியாபாரத்தில் ஈடுபடுகின்ற கம்பனிகள் நீங்கலாக) அனுமதிப்பதற்கு 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளுக்கமைவாக கௌரவ நிதி அமைச்சர், அமைச்சரவையின் ஒப்புதலுடன் ஒழுங்குவிதிகளை வழங்கியுள்ளார்.

    மேற்குறித்த ஒழுங்குவிதிகளின் பிரகாரம், நடைமுறையிலுள்ள வெளிநாட்டுச் செலாவணி ஒழுங்குவிதிகளின் நியதிகளுக்கமைவாகவும் பின்வருகின்ற நியதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டும் இலங்கைக்கு வெளியே வதிகின்ற ஆளொருவரிடமிருந்து கடன்பெற்ற வெளிநாட்டு நாணயத்தின் 50% இனை உபயோகப்படுத்தி நாட்டிற்கான பன்னாட்டு முறிகளில் கம்பனிகள் முதலிடலாம்.

  • Additional interest up to 2% per annum extended for 2 years for Special Deposit Accounts (SDAs)

    நாட்டினுள் கணிசமான வெளிநாட்டுச் செலாவணியினை ஈர்ப்பதற்கும் அதன் பயனாக நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்குநிலை மீதும் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தின்  மீதும் சாதகமான தாக்கத்தினை ஏற்படுத்துவதற்கும் சிறப்பு வைப்புக் கணக்குகளின் உள்ளார்ந்த ஆற்றலினைக் கருத்திற்கொண்டு, கௌரவ நிதி அமைச்சர், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் பரிந்துரையுடன் அத்தகைய வைப்புக்கள் வைப்பிலிடப்பட்ட ஆரம்பத் திகதியிலிருந்து 24 மாதங்களைக் கொண்ட திரண்ட காலப்பகுதியொன்றுக்கு சிறப்பு வைப்புக் கணக்குகளை நீடிப்பதற்கு அனுமதி வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளார். அவ்வாறு நீடிக்கப்படுகின்ற சிறப்பு வைப்புக் கணக்குகள், அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஆண்டிற்கு 02% வரையிலான மேலதிக வட்டிக்கு தகைமையுடையனவாகவிருக்கும்.  

  • The Central Bank of Sri Lanka Maintains Policy Interest Rates at their Current Levels

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2021 யூலை 07ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. பேரண்டப் பொருளாதார நிலைமைகளையும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் கவனமாக பரிசீலனையில் கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது.

  • Issue of Commemorative Coins to Mark the 65th Anniversary of Sri Lanka – China Diplomatic Relations and 100th Anniversary of Communist Party of China

    இலங்கை மத்திய வங்கி ரூ. 1000 முகப் பெறுமதியையுடைய தங்கம் மற்றும் வெள்ளி ஒரே சித்தரிப்புகளுடனான ஞாபகார்த்த நாணயக் குற்றிகளை இலங்கை - சீனாவுக்கிடையிலான 65 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன பொதுவுடைமைக் கட்சியின் 100 ஆவது ஆண்டு நிறைவைக்  குறிக்கும் முகமாக  வெளியிட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையைப் பாராட்டும் முகமாக இலங்கை அரசின் வேண்டுகோளின்படி நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

  • Investments by Licensed Banks in International Sovereign Bonds

    இலங்கை மத்திய வங்கியானது பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர் சமூகத்திற்கு பின்வரும் தகவல்களை வழங்க விரும்;புகின்ற அதேவேளை, வங்கித்துறையின் நிலைத்திருக்கும் தன்மைக்கு சவால்விடுக்கின்ற தரமிடல் நிறுவனங்களின் அறிக்கைகள் மற்றும் இலங்கை நாட்டுக்கான பன்னாட்டு முறிகள் மற்றும் இலங்கை அபிவிருத்தி முறிகள் என்பவற்றில் உரிமம்பெற்ற வங்கிகளின் முதலீடுகள் தொடர்பான ஊகங்களையும் மறுக்கின்றது.

    பின்வரும் முக்கிய இடர்நேர்வு தணிப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் முதலீட்டு வாய்ப்புக்களை வசதிப்படுத்துவதற்காகவும் நாட்டுக்கான வெளிநாட்;டுச் செலாவணியின் உட்பாய்ச்சலை மேலும் ஊக்குவிப்பதற்குமாக இலங்கை மத்திய வங்கியானது, வெளிமூலங்களிலிருந்தான வளங்களிலிருந்து நாட்டுக்கான பன்னாட்டு முறி மற்றும் இலங்கை அபிவிருத்தி முறி ஆகியவற்றில் சமமாகப் பகிரப்பட்டளவிலான முதலீடுகளை உரிமம்பெற்ற வணிக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவை மேற்கொள்ள அனுமதிக்கின்றது.

  • Extension of the Suspension of Business of Perpetual Treasuries Limited

    பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2021 யூலை 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது.

  • New Order issued under Foreign Exchange Act to Preserve the Foreign Exchange Position of Sri Lanka

    நாட்டின் செலாவணி வீதம் மீதான அழுத்தத்தினைக் குறைத்து வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலையினைப் பாதுகாப்பதன் மூலம் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்கு உதவியளித்து பேணும் நோக்குடன், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் பரிந்துரையுடனும் அமைச்சரவையின் ஒப்புதலுடனும் கௌரவ நிதியமைச்சர், 2021 யூலை 02ஆம் திகதியிடப்பட்ட 2234/49 அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழ் கட்டளையொன்றினை வழங்கியுள்ளார்.

    அதற்கமைய, வெளிமுகப் பணவனுப்பல்கள் மீது பின்வரும் இடைநிறுத்தல்கள்/ கட்டுப்பாடுகள் 2021 யூலை 02ஆம் திகதியிலிருந்து தொடங்குகின்ற ஆறு (06) மாதங்களுக்கு நடைமுறையிலிருக்கும்.

    முழுவடிவம்

Pages