இலங்கை மத்திய வங்கி, 2020.07.02ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் வைப்பாளர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவின் இரண்டாம் கட்டத்தினை ஆரம்பிப்பதற்கான வழிமுறைகளை மேற்கொண்டிருக்கிறது. இதற்கமைய அத்தகைய கொடுப்பனவுகள் நாடுமுழுவதிலுமுள்ள மக்கள் வங்கியின் 63 கிளைகளில் இடம்பெறும். இந்நட்டஈட்டு பொறிமுறையின் நியதிகளுக்கிணங்க, ஒவ்வொரு வைப்பாளர்களுக்கும் ரூ.600,000 என்ற அடிப்படையில் கொடுப்பனவு செலுத்தப்படும்.
இவ்விரண்டாம் கட்ட நட்டஈட்டின் கீழ், த பினான்ஸ் கம்பனி பிஎல்சியினால் உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து வைப்பாளர்களுக்குமான நட்டஈடு 2020.07.02 இலிருந்து ஆரம்பிக்கப்படும்.








